Tuesday, October 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

சேலம்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்; தாய் கட்சியில் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார்!!

சேலம்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்; தாய் கட்சியில் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுக எம்எல்ஏ செம்மலையால் பலர் முன்னிலையில் அடித்து அவமானப்படுத்தப்பட்ட அக்கட்சித் தொண்டர், தனது ஆதரவாளர்களுடன் இன்று (ஏப்ரல் 4, 2019) திமுகவில் இணைந்தார்.   தர்மபுரி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதையடுத்து கடந்த மார்ச் 31ம் தேதி, சேலம் மாவட்டம் சிந்தாமணியூர் பகுதியில் பரப்புரைக்காக வந்திருந்தார். அப்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அதிமுக எம்எல்ஏ செம்மலை மற்றும் இரு கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அன்புமணி ராமதாஸ் பரப்புரையை தொடங்கியபோது, கூட்டத்தில் பிளந்து கொண்டு வந்த ஒருவர், 'நீங்கள்தான் போன முறை எம்.பி.யாக ஜெயிச்சீங்க அய்யா. ஆனால் ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை. எட்டு வழிச்சாலையை எதிர்த்தீங்களே அய்யா.... இப்போது அதிமுக உடன் கூட்டணி வெச்சிருக்கீங்களே அய்யா... அந்த திட்டத்தை இனிமே ஆதரிப்பீங்களா ...
சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம்! ‘கஷ்டத்தை கொடுத்துதான் கடவுளை நினைக்க வைக்க வேண்டுமா?’

சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம்! ‘கஷ்டத்தை கொடுத்துதான் கடவுளை நினைக்க வைக்க வேண்டுமா?’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் விமர்சகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில், மார்ச் 29, 2019ம் தேதி வெளியாகி இருக்கிறது 'சூப்பர் டீலக்ஸ்'. மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு 'நான் லீனியர்' படங்கள் அடுத்தடுத்து பரிச்சயமாயின. அதன்பின், வானம், நேரம், மாநகரம் ஆகிய படங்கள் வெவ்வேறு மூன்று அல்லது நான்கு கதைகள் தனித்தனியாக பயணித்து, இறுதியில் ஒரே புள்ளியில் இணைவது போன்ற படங்கள் அறிமுகமாகின. இரண்டாவது வகைமையிலானதுதான், சூப்பர் டீலக்ஸ். ஐந்து கதைகள் என்பதைக் காட்டிலும் ஐந்து நிகழ்வுகள் தனித்தனியாக நிகழ்கின்றன. ஆனால், அந்த நிகழ்வுகள் ஏதோ ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருக்கின்றன. அவை தற்செயலானவை.   நடிகர்கள்:   விஜய் சேதுபதி சமந்தா பகத் பாசில் காயத்ரி மிஷ்கின் ரம்யா கிருஷ்ணன் பக்ஸ் என்கிற ...
மக்களவை தேர்தல்: சேலம் தொகுதியில் 22 பேர் போட்டி! இறுதி பட்டியல் வெளியானது!!

மக்களவை தேர்தல்: சேலம் தொகுதியில் 22 பேர் போட்டி! இறுதி பட்டியல் வெளியானது!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. இதில், சேலம் தொகுதியில் 22 பேர் போட்டியிடுவதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ரோகிணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதி ஆகியவற்றுக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இத்தேர்தலையொட்டி மார்ச் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. 27ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. சேலம் மக்களவை தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டபோது, முழுமையாக பூர்த்தி செய்யப்படாதது, கையெழுத்து இல்லாதது, சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்...
அமமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க திட்டம்?

அமமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க திட்டம்?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் டி.டி.வி.தினகரனின் அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் போட்டியிடுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பொருத்தவரை, இந்த தொகுதியை சிந்தாமல் சிதறாமல் கைப்பற்றி விட வேண்டும் என்று தனது பரிவாரங்களை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார். இந்த தொகுதியில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுக்கு இருக்கும் கணிசமான வாக்குகள் மூலம், அதிமுக வேட்பாளரை எளிதில் வெற்றி பெற வைத்துவிடலாம் என்றும் ஆளும்தரப்பு கணக்குப் போடுகிறது. ஆனால், அமமுக சார்பில் களம் இறங்கியுள்ள முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம், பிரதான எதிர்க்கட்சியான திமுகவைக் காட்டிலும் கடும் சவாலாக விளங்குவார் என எடப்பாடி தரப்பினரே சொல்கின்றனர். ஏனெனில் எஸ்.கே.செல்வம், சேலம் மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகு...
சேலம்: அதிமுக வேட்பாளருக்கு பாமக ‘டிக்டேட்’!

சேலம்: அதிமுக வேட்பாளருக்கு பாமக ‘டிக்டேட்’!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுக வேட்பாளர், பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறியபோது, அவரை மேற்கொண்டு பேச விடாமல் பாமக நிர்வாகி அருள் அழைத்துச்சென்றது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மக்களவை தொகுதியில் திமுக - அதிமுக நேரடியாக மோதுகிறது. கடந்த 22ம் தேதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், திங்கள்கிழமை (மார்ச் 25, 2019) சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தனது பெயர் ராசி, நட்சத்திரம், நல்லநேரம் பார்த்து குளிகை காலத்தில் பகல் 2.40 மணியளவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக எம்எல்ஏ வெங்கடாஜலம் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் அருள் (பாமக), ராதாகிருஷ்ணன் (தேமுதிக), கோபிநாத் (பாஜக) ஆகியோர் வேட்புமனு தாக்கலின்போது உடன் இருந்தனர்.   முன்னதாக, சேலம...
சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) வேட்புமனு தாக்கல் செய்தார். அவர், தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ.6 கோடி சொத்துகள் இருப்பதாக கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.   மக்களவை தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பரப்புரையை தொடங்கியுள்ளன. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் பரவலாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) மதியம், சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, காங்கிர...
சேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல்! இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்!!

சேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல்! இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்!!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் சிறுமியை ஐந்து பேர் கொண்ட கும்பல் துடிக்க துடிக்க கூட்டு வன்புணர்வு செய்து, கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம், வியாழனன்று (மார்ச் 21, 2019) பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.   சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். தறித்தொழிலாளி. இவருடைய மகள் பூங்கொடி (10). அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த, 14.2.2014ம் தேதி இரவு, சிறுமி பூங்கொடி தனது பெற்றோர், சகோதரிகளுடன் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மறுநாள் காலையில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. பரமசிவமும் அவருடைய மனைவியும் பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். சென்றாயன்பாளையம் பெருமாள் மலைக்கரடு பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில், சிறுமி தூக்கில் சடலமாக தொங்கிக் க...
சேலம் தொகுதியில் ஹாட்ரிக் அடிப்பாரா எடப்பாடி?; குஸ்தி போடும் திமுக – அமமுக!

சேலம் தொகுதியில் ஹாட்ரிக் அடிப்பாரா எடப்பாடி?; குஸ்தி போடும் திமுக – அமமுக!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதியை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தக்க வைத்துக்கொள்வதில் எடப்பாடியின் அதிமுகவுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுகவும், அதிமுகவும் அடுத்தடுத்து வெளியிட்டு, அரசியல் களத்தை சூடேற்றி இருக்கின்றன. முதல்வர் மாவட்டம் என்பதால், மற்ற தொகுதிகளைக் காட்டிலும் சேலம் மக்களவை தொகுதி அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.   மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக நேரடியாக சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதாலும் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. திமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் களம் இறங்குகிறார். அதிமுக சார்பில், கே.ஆர்.எஸ். ...
சேலம் சிறுமி கூட்டு வன்புணர்வு செய்து கொலை!; பாமக பிரமுகர் உள்ளிட்ட ஐவர் மீதான வழக்கில் மார்ச் 19ல் தீர்ப்பு!

சேலம் சிறுமி கூட்டு வன்புணர்வு செய்து கொலை!; பாமக பிரமுகர் உள்ளிட்ட ஐவர் மீதான வழக்கில் மார்ச் 19ல் தீர்ப்பு!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, பத்து வயது சிறுமியை துடிதுடிக்க கூட்டு வன்புணர்வு செய்து படுகொலை செய்த வழக்கில், வரும் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். தறித்தொழிலாளி. இவருக்கு பத்து வயதில் பூங்கொடி என்ற மகள் உள்பட மொத்தம் மூன்று குழந்தைகள். கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி இரவு, சிறுமி பூங்கொடி சகோதரிகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது பெற்றோர் அருகில் உள்ள தறிக்கூடத்தில் நெசவு நெய்து கொண்டிருந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், சிறுமியை பலவந்தமாக அருகில் உள்ள பெருமாள் கோயில் மலைக்குத் தூக்கிச்சென்று, துடிதுடிக்க கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இதில் அவள், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனாள். பின்னர் அவர்கள், சிறுமியை அங்க...
8826 போலீஸ் பணிக்கு ஆளெடுப்பு! எஸ்எஸ்எல்சி போதுமானது!!

8826 போலீஸ் பணிக்கு ஆளெடுப்பு! எஸ்எஸ்எல்சி போதுமானது!!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக காவல்துறை, சிறைத்துறைகளில் காலியாக உள்ள 8826 இரண்டாம்நிலை காவலர், சிறைக்காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் (டிஎன்யுஎஸ்ஆர்பி), இரண்டாம்நிலை காவலர், இரண்டாம்நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பாணையை மார்ச் 6, 2019ம் தேதி வெளியிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் மாவட்ட / மாநகர ஆயுதப்படைகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்காக மட்டுமே 2465 இரண்டாம்நிலைக் காவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தவிர, தமிழ்நாடு சிறப்புக்காவல் படையில் 5962 இரண்டாம்நிலை காவலர் பணியிடங்களுக்கும், சிறைத்துறையில் 208 (22 இடங்கள் பெண்களுக்கானவை) இரண்டாம்நிலை சிறைக்காவலர் பணியிடங்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் 191 தீயணைப்பாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 8826 பதவிகளுக்கு போட்டித்தேர்வ...