Wednesday, May 8மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘போதை’ நடிகருக்கு ஏற்பட்ட கதி!

‘சுப்ரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெய். சென்னையில் வசிக்கிறார்.

கடந்த செப். 21ம் தேதி, அடையாறு பாலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச்சென்றார்.

திடீரென்று கார், பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காவல்துறை விசாரணையில் நடிகர் ஜெய், குடிபோதையில் காரை ஓட்டிச்சென்றது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஜெய் போக்குக் காட்டி வந்தார்.

அதனால் அவருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரே இன்று (அக். 7) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட், திரைப்படத்தில் கார் ஓட்டுவதுபோல் நிஜத்திலும் ஓட்டினீர்களா? என்று எச்சரித்தார். அப்போது நடிகர் ஜெய் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு ரூ.5200 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், அவருடைய ஓட்டுநர் உரிமத்தை 6 மாத காலத்திற்கு ரத்து செய்யவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டார்.

நடிகர் ஜெய்யும், ‘அங்காடித்தெரு’ நாயகி அஞ்சலியும் தீவிரமாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணத்திற்கும் தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், ஓரிரு மாதங்களுக்கு முன்பு இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டு திடீரென்று காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அஞ்சலியை பிரிந்த சோகத்தில் நடிகர் ஜெய் அடிக்கடி மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.