Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Public Exam

மாணவனின் சொந்த கருத்திற்கும் மதிப்பெண் உண்டு! பிளஸ்-2 தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

மாணவனின் சொந்த கருத்திற்கும் மதிப்பெண் உண்டு! பிளஸ்-2 தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில், மாணவர்கள் பாடப்புத்தகத்தின் துணையின்றி தானாகவே சிந்தித்து எழுதும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு இருந்தது, கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நடப்புக் கல்வி ஆண்டில் (2019-2020) பிளஸ்-2 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் தலைமையில் புதிய பாடங்களை எழுதுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மெதுவாக கற்கும் மாணவர்கள் முதல் அதிபுத்திசாலி மாணவர்கள் வரை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்றபடி புதிய பாடங்களை வடிவமைத்தது.   இந்த மாற்றமானது, மார்ச் 2ம் தேதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் வினாத்தாள் வடிவமைப்பிலும் எதிரொலித்தது. அதாவது, எல்லா வினாக்களுக்கும் பாடப்புத்தகத்தின் துணை கொண்டு விடை அளிக்க வேண்டிய தேவை இருக
பிளஸ்2 கணித தேர்வு எளிமை;  ஆனால் சென்டம் குறையும்!

பிளஸ்2 கணித தேர்வு எளிமை; ஆனால் சென்டம் குறையும்!

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இன்று நடந்த பிளஸ்2 கணித பொதுத்தேர்வில் பழைய வினாத்தாளில் இருந்து ஏராளமான வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், இந்த தேர்வில் வெகுவாக சென்டம் பெறுவது குறையும் என்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 1ம் தேதி முதல் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 9 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். ஏப்ரல் 6ம் தேதி பிளஸ்2 தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. பிளஸ்2 மாணவர்களுக்கு இன்று (மார்ச் 12, 2018) கணித பாடத்தேர்வு நடந்தது. இந்த வினாத்தாள் கடினமும் அல்ல; அதேநேரத்தில் மிக எளிமை என்றும் சொல்ல முடியாது என்று கலவையான கருத்துகளை கணித ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த மூத்த கணித ஆசிரியர் ஒருவர் கூறியது: பத்து மதிப்பெண் வினாக்கள் மிக எளிமையாக இருந்தது. 6 மதிப்பெண் பிரிவில் கடைசியாக ஒரு வினா க