Saturday, May 9மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: election

சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக 108 தொகுதிகளில் வெற்றி; எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை!

சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக 108 தொகுதிகளில் வெற்றி; எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்,. 23ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், சிபிஐ., சிபிஎம்., விசிக, மதிமுக, தேமுதிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட 23 கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கின. அதிமுக தலைமையில் பாமக, பாஜக, அமமுக, தமாகா, ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. சீமானின் நாதக, நடிகர் விஜய்யின் தவெக ஆகிய கட்சிகள் தனித்து களம் கண்டன. குறிப்பிட்ட தொகுதிகளில் வி.கே.சசிகலாவின் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுதமமுக...
சட்டமன்ற தேர்தல் 2026: தமிழகத்தில் 85.10 சதவீதம் வாக்குப்பதிவு

சட்டமன்ற தேர்தல் 2026: தமிழகத்தில் 85.10 சதவீதம் வாக்குப்பதிவு

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம், கடந்த மார்ச் 15ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அந்த நிமிடத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த தேர்தலில், திமுக தலைமையில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஐ., சிபிஎம்., மதிமுக, ஐயுஎம்எல் உள்ளிட்ட 25 கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. அதிமுக தலைமையில் பாஜக., அமமுக, தமாகா., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்த இரு கூட்டணிகள் தவிர, நாம் தமிழர் கட்சி, புதிய வரவான நடிகர் விஜய்யின் தவெக., ஆகிய கட்சிகளும் தேர்தல் களம் கண்டன. மாநிலம் முழுவதும் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டது. குறிப்பிட்ட தொகுதிகளில் வி.கே.சசிகலாவின் அஇபுதமமுக கட்சியும், டாக்டர் ராமதாஸின் அணி கட்சியும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது. கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி...
பட்டுவாடா பணத்தில் ‘கட்டிங்’; எடப்பாடியில் திமுக அப்செட்!

பட்டுவாடா பணத்தில் ‘கட்டிங்’; எடப்பாடியில் திமுக அப்செட்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
எடப்பாடி தொகுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக, திமுக மேலிடம் வழங்கிய பணத்தில் கை வைத்த மேற்கு மா.செ., கணிசமான தொகையை, மேட்டூர் தொகுதிக்கு மடைமாற்றம் செய்ததாக பரபரப்பு புகார்கள் கிளம்பியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (ஏப். 23) நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவினாலும் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளிடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. முக்கிய கட்சிகள் கடந்த இரு நாள்களாக வாக்காளர்களுக்கு கரன்சி பாசனத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அமைச்சர் ராஜேந்திரன் போட்டியிடும் சேலம் வடக்கு, அம்மாபேட்டை லோகநாதன் களமிறங்கியுள்ள சேலம் தெற்கு, கொளத்தூர் மிதுன் சக்கரவர்த்தி களம் காணும் மேட்டூர் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் ஆளுங்கட்சியான திமுக தரப்பில் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் பட்டுவ...
சட்டமன்ற தேர்தல்: ராசிபுரத்தின் ‘வேந்தர்’ ஆவாரா அமைச்சர் மதிவேந்தன்?

சட்டமன்ற தேர்தல்: ராசிபுரத்தின் ‘வேந்தர்’ ஆவாரா அமைச்சர் மதிவேந்தன்?

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், திமுக சார்பில் அமைச்சர் மதிவேந்தன் மீண்டும் ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அமைச்சராக அவர் இந்த தொகுதியில் செய்த வளர்ச்சிப்பணிகள், தேர்தல் நிலவரம் குறித்து களத்தில் விசாரித்தோம். மதிவேந்தன் ராசிபுரம் தொகுதியில், 1971க்குப் பிறகு நடந்த 12 தேர்தல்களில் அதிமுக 8 முறை வென்றுள்ளது. இந்த தொகுதி இலைக்கட்சியின் வலுவான கோட்டை. கடந்த 2021 தேர்தலில் அதிமுகவின் டாக்டர் சரோஜாவை எதிர்த்து, திமுக சார்பில் முதன்முதலாக களமிறங்கிய மதிவேந்தன், 1952 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிமுக கோட்டையைத் தகர்த்தார். நாமக்கல் மாவட்டத்தில் திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான டாக்டர் மாயவனின் மகன் என்ற நுழைவுச் சீட்டு இருந்தாலும், கடந்...
மக்களவை தேர்தல்: 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி

மக்களவை தேர்தல்: 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி

அரசியல், முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாடு முழுவதும் பதினெட்டாவது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்தது. முதல்கட்டமாக தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. 26 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு சுற்றிலும் திமுக கூட்டணி முன்னிலையில் இருந்தது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தமுள்ள 40 மக்களவை தொகுத...
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குப்பதிவு; எடப்பாடியில் அபாரம்!

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குப்பதிவு; எடப்பாடியில் அபாரம்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப். 19) தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து 524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உள்பட மொத்த...
மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்களை விட பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், புதுச்சேரி மக்களவை தொகுதிக்கும் என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இத்துடன் தமிழகத்தில் காலியாக இருந்த விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் அதேநாளில் இடைத்தேர்தல் நடந்தது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும் 68321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 950 பேர் களம் இறங்கினர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்...
யாருக்கு உங்கள் வாக்கு? நில்… கவனி… செல்!

யாருக்கு உங்கள் வாக்கு? நில்… கவனி… செல்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்றாலே அது இந்தியாவின் பொதுத்தேர்தல்கள்தான். 543 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கின்றன. முதல்கட்டத் தேர்தல் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி நடக்கிறது. இந்திய சமூக வாழ்வியலில், திருமண உறவு புனிதமாகப் போற்றப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் திருமண பந்தத்தைக்கூட நீதிமன்றங்கள் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து முடிகிறது. அதற்கான சட்டப்பரிகாரம் நம்மிடத்தில் உள்ளது. ஆனால் 140 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய மக்களவை உறுப்பினர்களை நாம் பெரும்பான்மை அடிப்படையில் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன்பின், 5 ஆண்டுகளுக்கு அவர்களை திரும்ப அழைக்கவே முடியாது. இதற்கு யாதொரு சட்டப்பரிகாரமும் இல்லை. வாக்களித்து தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ள தேசத்தில் அவர்களை நீக்குவதற்கான அ...
பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

முக்கிய செய்திகள், வர்த்தகம்
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக பெற்ற அதிரிபுதிரியான வெற்றியின் தாக்கம், இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (டிச. 4) சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 400 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 418 புள்ளிகள் (2.07%) உயர்ந்து, 20686 புள்ளிகளில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1383 புள்ளிகள் உயர்வுடன் (2.05%) 68865 புள்ளிகளில் நிறைவடைந்தது. பொதுத்துறை வங்கிகள் 3.85 சதவீதம், நிதிச்சேவை நிறுவனப் பங்குகள் 3.23 சதவீதம், எனர்ஜி துறை பங்குகள் 2.61 சதவீதம், ரியால்டி நிறுவனப் பங்குகள் 2.03 சதவீதம் மற்றும் உலோகத்துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. அதேநேரம், மருந்து மற்றும் ஊடகத்துறை பங்குகள் லேசா...
”பெண்களின் இடுப்பு ‘பேரல்’ போல் ஆகிவிட்டது!” திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!

”பெண்களின் இடுப்பு ‘பேரல்’ போல் ஆகிவிட்டது!” திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!

கோயம்பத்தூர், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
திமுக பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனி, "ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு எட்டு போல் இருந்தது; இப்போது பேரல் போல் ஆகிவிட்டது,'' என்று பேசியது அரசியல் அரங்கில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.   கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, மார்ச் 23ம் தேதி, குனியமுத்தூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.   பரப்புரையின்போது அவர், ''வெளிநாட்டு மாடுகளின் பாலைக் குடித்து குடித்து நம் ஊர் பெண்களும், குழந்தைகளும் பலூன் போல ஊதிவிட்டனர். ஒரு காலத்தில், பெண்களின் இடுப்பு எட்டு போல் இருந்தது. குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்தால் கச்சிதமாக அமர்ந்து கொள்ளும். ஆனால், இப்போது பெண்களின் இடுப்பு, பேரல் போல ஆகிவிட்டது. குழந்தை...