Saturday, July 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: election

மக்களவை தேர்தல்: 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி

மக்களவை தேர்தல்: 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி

அரசியல், முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாடு முழுவதும் பதினெட்டாவது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்தது. முதல்கட்டமாக தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. 26 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு சுற்றிலும் திமுக கூட்டணி முன்னிலையில் இருந்தது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தமுள்ள 40 மக்களவை தொக
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குப்பதிவு; எடப்பாடியில் அபாரம்!

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குப்பதிவு; எடப்பாடியில் அபாரம்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப். 19) தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து 524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உள்பட மொத
மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்களை விட பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், புதுச்சேரி மக்களவை தொகுதிக்கும் என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இத்துடன் தமிழகத்தில் காலியாக இருந்த விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் அதேநாளில் இடைத்தேர்தல் நடந்தது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும் 68321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 950 பேர் களம் இறங்கினர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்ப
யாருக்கு உங்கள் வாக்கு? நில்… கவனி… செல்!

யாருக்கு உங்கள் வாக்கு? நில்… கவனி… செல்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்றாலே அது இந்தியாவின் பொதுத்தேர்தல்கள்தான். 543 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கின்றன. முதல்கட்டத் தேர்தல் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி நடக்கிறது. இந்திய சமூக வாழ்வியலில், திருமண உறவு புனிதமாகப் போற்றப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் திருமண பந்தத்தைக்கூட நீதிமன்றங்கள் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து முடிகிறது. அதற்கான சட்டப்பரிகாரம் நம்மிடத்தில் உள்ளது. ஆனால் 140 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய மக்களவை உறுப்பினர்களை நாம் பெரும்பான்மை அடிப்படையில் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன்பின், 5 ஆண்டுகளுக்கு அவர்களை திரும்ப அழைக்கவே முடியாது. இதற்கு யாதொரு சட்டப்பரிகாரமும் இல்லை. வாக்களித்து தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ள தேசத்தில் அவர்களை நீக்குவதற்க
பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

முக்கிய செய்திகள், வர்த்தகம்
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக பெற்ற அதிரிபுதிரியான வெற்றியின் தாக்கம், இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (டிச. 4) சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 400 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 418 புள்ளிகள் (2.07%) உயர்ந்து, 20686 புள்ளிகளில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1383 புள்ளிகள் உயர்வுடன் (2.05%) 68865 புள்ளிகளில் நிறைவடைந்தது. பொதுத்துறை வங்கிகள் 3.85 சதவீதம், நிதிச்சேவை நிறுவனப் பங்குகள் 3.23 சதவீதம், எனர்ஜி துறை பங்குகள் 2.61 சதவீதம், ரியால்டி நிறுவனப் பங்குகள் 2.03 சதவீதம் மற்றும் உலோகத்துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. அதேநேரம், மருந்து மற்றும் ஊடகத்துறை பங்குகள் லே
”பெண்களின் இடுப்பு ‘பேரல்’ போல் ஆகிவிட்டது!” திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!

”பெண்களின் இடுப்பு ‘பேரல்’ போல் ஆகிவிட்டது!” திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!

கோயம்பத்தூர், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
திமுக பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனி, "ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு எட்டு போல் இருந்தது; இப்போது பேரல் போல் ஆகிவிட்டது,'' என்று பேசியது அரசியல் அரங்கில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.   கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, மார்ச் 23ம் தேதி, குனியமுத்தூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.   பரப்புரையின்போது அவர், ''வெளிநாட்டு மாடுகளின் பாலைக் குடித்து குடித்து நம் ஊர் பெண்களும், குழந்தைகளும் பலூன் போல ஊதிவிட்டனர். ஒரு காலத்தில், பெண்களின் இடுப்பு எட்டு போல் இருந்தது. குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்தால் கச்சிதமாக அமர்ந்து கொள்ளும். ஆனால், இப்போது பெண்களின் இடுப்பு, பேரல் போல ஆகிவிட்டது. குழ
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68% வாக்குப்பதிவு; 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68% வாக்குப்பதிவு; 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி, உடல்நலக் குறைவால் அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதமே அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. பணப்பட்டுவாடா புக £ர் காரணமாக அப்போது திடீரென்று இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அந்த தொகுதிக்கு இன்று (டிசம்பர் 21, 2017) வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
குஜராத் தேர்தல் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்குமா?; பாஜகவை ‘தாளிக்கும்’ மீம் கிரியேட்டர்கள்!

குஜராத் தேர்தல் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்குமா?; பாஜகவை ‘தாளிக்கும்’ மீம் கிரியேட்டர்கள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குஜராத், ஹிமாச்சல் பிரதேச மாநில தேர்தல் முடிவுகளின் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்ற பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோரை மீம் கிரியேட்டர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். தமிழகத்தில் ஒருபோதும் மதவாத அரசியல் எடுபடாது என்றும் சூடாக பதிலடி கொடுத்துள்ளனர். நடந்து முடிந்த குஜராத் மற்றும் ஹிமாச்சல்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஒரு வாக்கு அல்லது ஒரு தொகுதி முன்னிலை பெற்றாலும் வெற்றிதான். அதனால் வேண் டுமானால் தேர்தல் வெற்றியை பாஜக கொண்டாடலாமே தவிர, சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் வெற்றி அல்ல. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில். குஜராத் மாநிலத்தில் ஒட்டுமொத்த காபினெட் அமைச்சர்களையும் களமிறக்கி, தேர்தல் வேலை பார்த்தது பாஜக. காங்கிரஸின் மணிசங்கர அய்யர், பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு தன்னை கொல்ல சதி செய்வதாகவெல்லாம் உச்சக
குஜராத்: முதல்கட்ட தேர்தலில் 68% வாக்குப்பதிவு

குஜராத்: முதல்கட்ட தேர்தலில் 68% வாக்குப்பதிவு

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இன்று (டிசம்பர் 9, 2017) நடந்த முதல்கட்ட தேர்தலில் 68% பேர் வாக்களித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக, 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. அம்மாநில முதலமைச்சர் விஜய்ருபானி உள்பட 977 வேட்பாளர்கள் இன்றைய வாக்குப்பதிவை சந்தித்தனர். இவர்களில் 57 பேர் பெண் வேட்பாளர்கள். சூரத் உள்ளிட்ட சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் எழுந்தாலும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. பகரூச் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மண மேடையில் முகூர்த்தம் முடிந்து திருமண கோலத்தில் நேராக வாக்குச்சாவடிக்கு வந்து தம்பதியர் ஓட்டுப்போட்டனர். உல்லேடா பகுதியில் 126
ஆர்கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ல் இடைத்தேர்தல்!

ஆர்கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ல் இடைத்தேர்தல்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று (நவம்பர் 24, 2017) அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் உள்ள ஆர்கே நகர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவில் உள்கட்சி பூசல்கள் உச்சத்தில் இருந்த நிலையில், அதிமுக எ