Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: arun jetli

21 மில்லியன் ‘தேவையற்ற குழந்தைகள்’!; பெண்களை வெறுக்கும் இந்திய சமூகம்

21 மில்லியன் ‘தேவையற்ற குழந்தைகள்’!; பெண்களை வெறுக்கும் இந்திய சமூகம்

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்தியாவில், 21ம் நூற்றாண்டிலும் ஆண் குழந்தைகளை விரும்பும் சமூகமே அதிகளவில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் நடந்த ஓர் ஆய்வு, இந்தியாவில் 21 மில்லியன் 'தேவையற்ற பெண் குழந்தைகள்' இருப்பதாக கூறுகிறது. உலகளவில் பாலின சமத்துவத்தில் ஐஸ்லாந்து நாடு முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 1.1.2018 முதல் அந்த நாட்டில், பெண் ஊழியர்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிக ஊதியம் கொடுப்பதைக்கூட தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது. அதுபோன்ற உயரிய சிந்தனைகளை எட்டிப்பிடிக்க, இந்தியாவிற்கு இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் ஆச்சர்யம் இல்லை. அண்மையில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு அப்படித்தான் சொல்ல வைக்கிறது. ஆனால், நாம்தான் மூச்சுக்கு முன்னூறு முறை பூமி முதல் நதிகள் வரை பெண்களின் பெயரால் அழைப்போம். அதுவே, ஆகப்பெரிய நகைமுரண். பாலின சமத்துவம் குறித்து நாம் என்னதான் டிவி, பத்திரி
பாஜகவின் மிகப்பெரும் பண மோசடி; அருண்ஷோரி தாக்கு!

பாஜகவின் மிகப்பெரும் பண மோசடி; அருண்ஷோரி தாக்கு!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு என்பது பாஜக அரசு செய்த மிகப்பெரும் பண மோசடி என்று முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் அருண் ஷோரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பொருளாதார வீழ்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடுமையான விமர்சனம் செய்து வரும் நிலையில், இப்போது அருண்ஷோரியும் அத்தகைய விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்தவர் அருண்ஷோரி. அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியது: கடந்த ஆண்டு பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த ரூபாய் நோட்டு வாபசே பொருளாதார சரிவிற்கு காரணம். அது முழுக்க முழுக்க அரசால் நடத்தப்பட்ட மிகப் பெரிய பண மோசடி. இது ஒரு முட்டாள் தனமான யோசனை. இதனால் கருப்பு பணம் வைத்திருந்த ஒவ்வொருவரும் அதை வெள்ளையாக மாற்றி விட்டனர். பழைய ரூபாய் ந