Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மேட்டூர் அணை

மேட்டூர் அணை நிரம்பியது! 43வது முறையாக 120 அடியை தொட்டது!

மேட்டூர் அணை நிரம்பியது! 43வது முறையாக 120 அடியை தொட்டது!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மேட்டூர் அணை இன்று (செப். 7) மதியம் 1.09 மணியளவில் முழு கொள்ளளவை எட்டியது. 43வது முறையாக அணை முழுவதும் நிரம்பியுள்ளது விவசாயிகள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, தமிழகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இந்த அணை நிரம்பினால், காவிரி படுகையையொட்டி உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். எனினும் இந்த அணையின் நீர் இருப்பு என்பது, கர்நாடகாவின் கேஆர்எஸ், கபினி அணைகளின் நீர் கொள்ளளவைப் பொருத்தும், அந்த மாநிலத்தில் பெய்யும் மழையின் அளவைப் பொருத்தும் அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி நிலவரப்படி, மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. அதையடுத்து, டெல்டா பாசனத்திற்காக அணையை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!

சேலம், முக்கிய செய்திகள்
காவிரி டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஆகஸ்ட் 13, 2019) தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணையைத் திறந்து வைத்தார். கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்குள்ள கேஆர்எஸ், கபினி ஆகிய இரு முக்கிய அணைகளும் நிரம்பின. தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பாதுகாப்பு கருதி கர்நாடகாவின் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சத்து 39200 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அபரிமிதமான நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.   நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், நேற்று இரவு (ஆக. 12) 2.40 லட்சம் கன அடியாக அதிகரித்தது. கடந்த 9ம் தேதி மேட்டூர
மேட்டூரில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா; புதுமண தம்பதிகள் புது தாலி, புத்தாடை அணிந்து வழிபாடு!

மேட்டூரில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா; புதுமண தம்பதிகள் புது தாலி, புத்தாடை அணிந்து வழிபாடு!

சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  பத்தாண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நிரம்பி வழிந்ததால், இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழாவை பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர்.   பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவை காவிரிக்கரையோர மக்கள் காலங்காலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இத்தகைய வழிபாட்டு கலாச்சாரம் வழக்கத்தில் இல்லை. ஆனால் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக காவிரி கரையோரம் உள்ள ஈரோடு, திருச்சி, சேலம், நாமக்கல் மற்றும் ஒகேனக்கல் காவிரி ஆறு பாயக்கூடிய தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஆடி 18 அன்று, பக்தர்கள் நீர்நிலைகளில் கூடி வழிபடுவது நடைமுறையில் இருந்து வருகிறது.   ஆடிப்பெருக்கு நீராடலின் பின்னணியில் இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது, மஹாபாரத இதிகாசத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் தொடர்ந்து 18 நாள்கள் போர் நடந்ததாகவும், போரில
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது!; நீர் திறப்பு அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி!!

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது!; நீர் திறப்பு அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 39வது ஆண்டாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.     சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை, காவிரி ஆற்றின் குறுக்கே 1934ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையின் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி. 93.47 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.     கர்நாடகா மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பின. அந்த அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. கடந்த 15 நாள்களாக வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் நீர் வந்து கொண்டிருந்தது.  
மேட்டூர் அணை நிரம்பியதால் சேலத்தில் நிலநடுக்கமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

மேட்டூர் அணை நிரம்பியதால் சேலத்தில் நிலநடுக்கமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா, உலகம், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  சேலம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 22, 2018) காலை நில நடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு மேட்டூர் அணையில் நீர் நிரம்பியதுதான் நில அதிர்வுக்குக் காரணம் என்ற தகவலால் மேலும் அச்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இன்று காலை 7.45 மணியில் இருந்து 7.50 மணிக்குள் பரவலாக லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, சித்தனூர் என மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறங்கள் மட்டுமின்றி, மாநகர பகுதிகளில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர்.   வீடுகளில் திடீரென்று பாத்திரங்கள்¢ உருண்டு கீழே விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் பலர், பாதுகாப்பு கருதி வீதிகளுக்கு ஓடிவந்தனர். இன்று காலை பொதுமக்கள் தெருக்களில் கூடி இதைப்பற்றியே ஆச்சர்யமும் பீதியும் க
எட்டு வழிச்சாலைக்கு 90 சதவீத விவசாயிகள் ஆதரவாம்… – எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொய்!

எட்டு வழிச்சாலைக்கு 90 சதவீத விவசாயிகள் ஆதரவாம்… – எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொய்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு சில விவசாயிகள் தவிர, பெரும்பாலான விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பொய்யான தகவலை இன்று (ஜூலை 19, 2018) தெரிவித்துள்ளார்.     டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.   ''கடந்த ஆட்சியின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சத்துணவு முட்டைக்கான டெண்டர் நடைபெறும். அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்து, அதில் முறைகேடுகள் நடந்து வந்தன. அதனால்தான் மாநில அளவில் முட்டை டெண்டர் விடும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில்தான் டெண்டர் விடப்படுகிறது. இதற்கென ஒரு கமிட்டி அமைத்து, எவ்வித முறைகேடுக்கும் இடமின்றி டெண
மேட்டூர் அணை திறப்பு விழாவில் கண்ணீர் விட்ட எடப்பாடி!

மேட்டூர் அணை திறப்பு விழாவில் கண்ணீர் விட்ட எடப்பாடி!

அரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கரூர், சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், முக்கிய செய்திகள், ராமநாதபுரம்
  மேட்டூர் அணை திறப்பு விழாவில், காவிரிக்காக இறுதிமூச்சு உள்ளவரை போராடியவர் புரட்சித்தலைவி அம்மா என ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரைப்பற்றி குறிப்பிடும்போது நா தழுதழுக்க...கண்களில் நீர் ததும்ப பேசினார்.     கடந்த பத்து நாள்களுக்கு மேலாக கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து பாதுகாப்புக்கருதி அந்த அணைகளில் இருந்து உபரி நீர், தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. கர்நாடகாவில் இருந்து நாளுக்கு நாள் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தமி-ழகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ப
சதம் அடித்த மேட்டூர் அணை நீர்மட்டம்!; விவசாயிகள் மகிழ்ச்சி

சதம் அடித்த மேட்டூர் அணை நீர்மட்டம்!; விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 17, 2018) இரவு 100 அடியை எட்டியுள்ளது. விவசாயப் பயன்பாட்டுக்காக வரும் 19ம் தேதி அணை திறக்கப்பட உள்ள நிலையில், டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியிலும் கடந்த பத்து நாள்¢களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன.   பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் காவ