Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: களஞ்சியம்

கூலியாக இருந்து தொழில்முனைவோர் ஆன மலர்மணி!; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர!”

கூலியாக இருந்து தொழில்முனைவோர் ஆன மலர்மணி!; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர!”

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின ஸ்பெஷல்- ''இந்த உலகத்துல நாம பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் காகிதம், தகரம், உடுத்தின பிறகு வீசப்படும் துணிமணிகள்னு எல்லாமே மறுசுழற்சி மூலமாக திரும்பவும் ஏதோ ஒரு ரூபத்துல பயன்பாட்டுக்கு வந்துடுது. அதனால இங்கே வேஸ்ட்னு எதுவுமே இல்ல. செத்ததுக்கப்புறம் எரித்து சாம்பலாகிடற மனுஷங்கள வேணும்னா வேஸ்ட்னு சொல்லலாம்,'' என போகிற போக்கில் வாழ்க்கையின் ஆகப்பெரும் தத்துவத்தை சொல்கிறார் மலர்மணி (37).   கொடிய வறுமையும், அனுபவங்கள் கற்றுக்கொடுத்த பாடமும்தான் அவரை இந்தளவுக்கு பக்குவமாக பேச வைத்திருக்கிறது. வாழ்வியல் சூழலுக்கு ஏற்பதான் ஒருவரின் சிந்தனையும் அமைகிறது. அதற்கு மலர்மணியும் விதிவிலக்கு அன்று.   அவர் எதற்காக பழைய காகிதம், பழைய இரும்பை உதாரணமாகக் கூறினார் என்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.   சேலம் மாவட்ட
‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின ஸ்பெஷல்- ''ஒருவருக்குச் சாத்தியமாவது எல்லோருக்குமே சாத்தியமாகும்'' என்பதை மகாத்மா காந்தி, வழிநெடுகிலும் நம்பி வந்திருக்கிறார். காந்தியின் நம்பிக்கை, யதார்த்த வாழ்விலும் பலருக்கு சாத்தியமாகி இருக்கிறது என்பதை என் கள அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.   இதில் வேடிக்கை என்னவென்றால், நான் சந்தித்த வெற்றிகரமான குடும்பத் தலைவிகள் பலருக்கும் காந்தியைப் பற்றிய பிரக்ஞை எல்லாம் கிடையாது. உழைக்கத் தயங்காத எவர் ஒருவரையும் இந்த பூமி நிராதரவாக விட்டுவிடுவதே இல்லை. சிலர் ஏணியை, கூரை மேல் எறிகிறார்கள். சிலர், வானத்தை நோக்கி வீசுகிறார்கள். ஆனால், 'உள்ளத்தனையது உயர்வு' என்பதுதான் நிஜம்.   சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கட்டெறும்பு காடு பகுதியைச் சேர்ந்த அமுதாவும் (34), அவருடைய கணவர் கோவிந்தராஜூம் கடின உழைப்புக்கு அஞ்சாதவர்கள். இரண்டு மகள்
ஒற்றை சாக்கு மூட்டையும் ஒரு கிரவுண்டு நிலமும்! அடமானம் வைக்கப்பட்ட பெண் ஊரின் அடையாளமானார்!!

ஒற்றை சாக்கு மூட்டையும் ஒரு கிரவுண்டு நிலமும்! அடமானம் வைக்கப்பட்ட பெண் ஊரின் அடையாளமானார்!!

சேலம், மகளிர், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் புத்தூர் அக்ரஹாரம் சந்தனக்காரன் காடு பகுதியில், 'செட்டியாரம்மா' என்றால் சின்ன குழந்தைகளும் சொல்லி விடும். ஆமாம். பண்ணாரியம்மன் களஞ்சியம் குழுவின் மூத்த உறுப்பினரான ஜெயந்தியை (50) அப்பகுதியில் 'செட்டியாரம்மா' என்றே அழைக்கிறார்கள். சத்தியமங்கலத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் பிழைப்புத்தேடி கைக்குழந்தைகளுடன் சேலம் வந்த அவர், சந்தனக்காரன்காடு கிராமத்தின் அடையாளமாக வளர்ந்திருக்கிறார். அந்தளவுக்கு அவர் எட்டிப்பிடித்த உயரங்கள் அளப்பரியது.   ''தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்'' என்ற அய்யன் வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப, தன்னையும் உயர்த்திக்கொண்டு கரம் பற்றிய கணவரையும், பெற்றெடுத்த பிள்ளைகளையும் கரை சேர்த்திருக்கிறார் ஜெயந்தி. பண்ணாரியம்மன் களஞ்சியம் மகளிர் குழுவில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மே
வறுமை இருளில் இருந்து மீண்ட 20 ஆயிரம் குடும்பங்கள்! அமைதி புரட்சியில் சேலம் களஞ்சியம் பெண்கள்!!

வறுமை இருளில் இருந்து மீண்ட 20 ஆயிரம் குடும்பங்கள்! அமைதி புரட்சியில் சேலம் களஞ்சியம் பெண்கள்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆன பின்பும்கூட இந்தியாவைப் பீடித்திருக்கும் ஏழ்மையின் பிடியில் இருந்து நம்மால் இன்னும் முற்றாக மீள இயலவில்லை. ஆனால் வறுமை ஒழிப்புத் திட்டங்களை உருவாக்குவதில் ஒவ்வொரு அரசும், முனைப்பு காட்டுகிறதே தவிர, செயலாக்கம் என்று வரும்போது நுட்பமாக பார்க்கத் தவறி விடுகிறது. அதுதான், இந்த நீடித்தத் துயரத்திற்குக் காரணம்.   வறுமையை ஒழிப்பதில் வருவாய் உருவாக்கத்தின் மையக் கருத்தை மறைந்த பிரதமர் இந்திராகாந்தி மட்டுமே முழுமையாக விளங்கிக் கொண்டார். அவர் காலத்தில் இருந்துதான் ஏழ்மை ஒழிப்புக்கான பணிகள் புது வேகம் எடுக்கத் தொடங்கின. அதாவது, 1980களில். பானர்ஜி என்பவர், 'ஏழைகளின் பொருளாதாரம்' பற்றிய தனது நூலில், வறுமை ஒழிப்பில் நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளை பேசாமல் பிரச்னைகளை மட்டுமே பேசுவது மேம்பாட்டுக்கு உதவாது,' என்கிறார். சேலத்தில் செயல்பட்டு வரும் களஞ்சியம்
52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன்! தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை!!

52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன்! தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை!!

சேலம், தமிழ்நாடு, மகளிர், மதுரை, முக்கிய செய்திகள்
சேலத்தில் 52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து 'ஏஸ் பவுண்டேஷன்' (ACE Foundation)என்ற மகளிர் சுய உதவிக்குழுக்களின் மாபெரும் கூட்டமைப்பை தொடங்கி உள்ளனர். இந்தியா முழுவதும் இயங்கி வரும் அமைப்பு ரீதியற்ற பெண்கள் குழுக்களை ஒருங்கிணைக்கும் முகமாக புதிய பயணத்தை தொடங்கியுள்ளது இந்த மகளிர் படை. இது முற்றிலும் அரசியல் சார்பற்ற அமைப்பு.   தானம் அறக்கட்டளையின் ஓர் அங்கமாக இயங்கி வந்த களஞ்சியம் மகளிர் சுயஉதவிக்குழு, இன்று முதல் (பிப்ரவரி 9, 2019) 'ஏஸ் பவுண்டேஷன்' என்ற புதிய அமைப்பினூடாக தனது பயணத்தை தொடங்கி உள்ளது. அதாவது, தானம் அறக்கட்டளைக்கும் இப்புதிய அமைப்பிற்கும் இனி யாதொரு தொடர்பும் இருக்காது. இப்படியொரு துணிச்சலான முடிவை, சேலம் மாவட்டத்தில் களஞ்சியம் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் இயங்கி வரும் 52 ஆயிரம் பெண்கள் கூட்டாக தீர்மானித்துள்ளனர். இந்தக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த நிர்வாகத்தி
பூவனம்: புதிய வானம்! ”வறுமையில் இருந்து மீண்ட குடும்பத்தலைவிகளின் கதை!!” #Kalanjiyam #DHANFoundation

பூவனம்: புதிய வானம்! ”வறுமையில் இருந்து மீண்ட குடும்பத்தலைவிகளின் கதை!!” #Kalanjiyam #DHANFoundation

சேலம், தமிழ்நாடு, புத்தகம், மதுரை, முக்கிய செய்திகள்
(பூவனம்)   மதுரையை தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் தானம் அறக்கட்டளை, ஓர் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பல பணிகளை லாபநோக்கமின்றி செய்து வருகிறது. தானம், ஓர் இணை அரசாங்கத்தையே நடத்தி வருகிறது என்பதே சாலப்பொருந்தும். இதன் ஓர் அங்கமான சேலம் மண்டல களஞ்சியம், அக்டோபர் 2, 2018ம் தேதியன்று, 'புதிய வானம்' என்ற நூலை வெளியிட்டுள்ளது. வறுமை, கந்துவட்டி, மது உள்ளிட்ட சமூகக் கேடுகளில் இருந்தும், சமூக துயரங்களில் இருந்தும் மீண்ட 50 குடும்பத் தலைவிகளின் வெற்றிக்கதைகளை, 'புதிய வானம்' நூலில் பதிவு செய்திருக்கிறது, களஞ்சியம்.   வெற்றிக்கதைகளில் இருந்து சில... சில ஆண்டுகள் முன்புவரையிலும்கூட, விசைத்தறிக் கூடங்களில் வாரம் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டிருந்த தன் கணவரை, இன்றைக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க வைத்திருக்கிறார் குடும்பத் தலைவி, இலஞ்சியம்.  
சேலம்: இந்திரா எனும் கிளாரா ஸெட்கின்!;  ”கள்ளச்சாராயத்தை ஒழித்த காரிகை”

சேலம்: இந்திரா எனும் கிளாரா ஸெட்கின்!; ”கள்ளச்சாராயத்தை ஒழித்த காரிகை”

சிறப்பு கட்டுரைகள், சேலம், மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின சிறப்புக் கட்டுரை-   இன்று உலகெங்கும் முதலாளிய வண்ணங்களுடன் பொழுதுபோக்கு சடங்காக நடத்தப்பட்டும் வரும் மகளிர் தினம் என்பது, உண்மையில் குருதியில் மலர்ந்தது. உழைக்கும் பெண்களை சுரண்டிப் பிழைத்த கூட்டத்தினரிடம் இருந்து பெண்களுக்கான உரிமையை மீட்டெடுத்த சர்வதேச பொதுவுடைமை இயக்கத் தலைவரான கிளாரா ஸெட்கின் போன்றவர்தான் சேலம் இந்திராணி (53). சேலத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மின்னாம்பள்ளி கிராமம். பல்வேறு சமூகத்தினரையும் உள்ளடக்கிய ஊர்தான். எனினும், பட்டியல் இனத்தவர் இங்கு அதிகம். 13 ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்னாம்பள்ளி, கள்ளச்சாராய விற்பனை மையமாக இருந்தது. அந்த ஊரில் முக்கிய தலைகள் பத்து பேர். கள்ளச்சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்பதுதான் அவர்களின் முழுநேரத் தொழில். மின்னாம்பள்ளியில் கூலித்தொழிலாளர்களை போதையில் வைத்திருந்த 'பெருமை' அவர்களுக்கு