Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: எஸ்.ஆர்.பார்த்திபன்.

மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் தொகுதியை வசப்படுத்தி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது, திமுக. அக்கட்சியின் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் அமோக வெற்றி பெற்று, எம்.பி. ஆகியுள்ளார்.   தமிழகத்தில் மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன், ஆளும் அதிமுக தரப்பில் கே.ஆர்.எஸ். சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் மட்டுமின்றி, டிடிவி தினகரனின் அமமுக தரப்பில் எஸ்.கே.செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரபு மணிகண்டன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராசா அம்மையப்பன் உள்ளிட்ட 22 பேர் போட்டியிட்டனர். ஏற்கனவே கடந்த 2009, 2014 ஆகிய இரு மக்களவை தேர்தல்களிலும் சேலம் தொகுதியை அதிமுகவே கைப்பற்றி இருந்தது. அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், எப்படியும் இந்த தேர்தலிலும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற
சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) வேட்புமனு தாக்கல் செய்தார். அவர், தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ.6 கோடி சொத்துகள் இருப்பதாக கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.   மக்களவை தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பரப்புரையை தொடங்கியுள்ளன. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் பரவலாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) மதியம், சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, காங்கிர
பழங்குடி பெண்களை கவர்ந்த திமுக ஊராட்சி சபை கூட்டம்! மக்களை ஈர்க்கும் மும்மூர்த்திகள்!!

பழங்குடி பெண்களை கவர்ந்த திமுக ஊராட்சி சபை கூட்டம்! மக்களை ஈர்க்கும் மும்மூர்த்திகள்!!

அரசியல், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கொல்லிமலை பழங்குடி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது திமுகவின் ஊராட்சி சபைக்கூட்டங்கள். திமுக தேர்தல் பொறுப்பாளர்களின் ஜனரஞ்சகமான பேச்சுகள், பழங்குடி கிராமங்களில் ரொம்பவே எடுபட்டதால் அவர்களை கட்சிக்காரர்களாக மாற்றும் பணிகளிலும் இறங்கி இருக்கிறது, திமுக. மக்களை நோக்கி அரசியல் கட்சிகள் பயணிக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக முன்னெடுத்துள்ள ஊராட்சி சபைக்கூட்டங்களுக்கு நாளுக்குநாள் வரவேற்பு கூடி வருகிறது. குறிப்பாக, நாமக்கல் மக்களவை தொகுதியில் இதுவரை திமுக தொடங்கப்பட்டதில் இருந்தே செல்லாத இடங்களை எல்லாம் தேடித்தேடிச் செல்கின்றனர், அத்தொகுதி பொறுப்பாளர்கள். இதுவரை வராதவர்கள் தேடி வருகிறார்கள் என்ற பேராவலோ என்னவோ திமுகவினரே எதிர்பார்க்காத ரிசல்ட் மலைக்கிராமங்களில் கிடைத்திருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.   முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள்
‘சேலம் சங்கமம்’ தமிழர் கலைவிழா! நாளை நடக்கிறது!!

‘சேலம் சங்கமம்’ தமிழர் கலைவிழா! நாளை நடக்கிறது!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  காணும் பொங்கல் விழாவையொட்டி, சேலத்தில் நாளை (17.1.2019, வியாழக்கிழமை) மாலை 'சேலம் சங்கமம் - 2019' என்ற பெயரில் சிறப்பு கலை விழா நடக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய விழாக்களுள் ஒன்றான பொங்கல் விழா, பழையன கழிந்து புதியன புகும் போகியில் தொடங்கி, உற்றார், உறவினர்களை நேரில் சென்று சந்தித்து உறவாடும் காணும் பொங்கலுடன் நிறைவடைகிறது. பொங்கல் விழாவின் நான்காவது மற்றும் கடைசி நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில், உறவினர்களைச் சந்தித்து கூடிப்பிரிதல் மட்டுமின்றி, கேளிக்கைகளிலும் ஈடுபடுவது நம் மரபு.   இந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், கந்தாஸ்ரமம் முருகன் கோயில் பின்புறம் உள்ள கிரீன் வேலி ஸ்போர்ட்ஸ் கிளப்புக்குச் சொந்தமான கிரிக்கெட் மைதானத்தில், 'சேலம் சங்கமம்-2019' என்ற கேளிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.   இந்நிகழ
”விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி நடத்தும் போர்!”; முன்னாள் எம்எல்ஏ விளாசல்!!

”விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி நடத்தும் போர்!”; முன்னாள் எம்எல்ஏ விளாசல்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
எட்டு வழிச்சாலைத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் அறிவிக்கப்படாத போரை தொடுத்திருக்கிறது என்று முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.   விவசாயத்தை நாசமாக்கும் எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஆர்.பார்த்திபன் 'புதிய அகராதி' இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டி:   சேலம் - சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை எனப்படும் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக ஐந்தாவது நாளாக இன்று (ஜூன் 22, 2018) மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தமிழக அரசு, எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக காவல்துறையினர் மூலம் விவசாயிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களின் நிலங்களை கையகப்படுத்துகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்ட