Friday, June 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

தமிழ்நாடு

கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழகத்தில் ஏப். 20 முதல் இரவு நேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம்!

கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழகத்தில் ஏப். 20 முதல் இரவு நேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், வரும் ஏப். 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 500க்கும் கீழே குறைந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் காலத்தில் மீண்டும் தொற்றின் வேகம் முன்பை விட அதிகரித்தது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது, கட்டுப்பாடின்றி பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக கூடியது உள்ளிட்ட காரணங்களால் கொரோனா இரண்டாவது அலையின் பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாள்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றின் தாக்கம் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது, தமிழக அரசை அதிர்ச்சி...
நடிகர் விவேக் திடீர் மரணம்; ‘மரங்கள் உள்ளவரை சுவாசத்தில் கலந்திருப்பார்!’

நடிகர் விவேக் திடீர் மரணம்; ‘மரங்கள் உள்ளவரை சுவாசத்தில் கலந்திருப்பார்!’

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விவேக்: 1961 - 2021 'சின்ன கலைவாணர்' என்று அழைக்கப்படும் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பால் சனிக்கிழமை (ஏப். 17) அதிகாலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 59: நடிகர் விவேக், வெள்ளிக்கிழமை (ஏப். 16) வீட்டில் இருந்தபோது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுய நினைவின்றி கிடந்த விவேக்கிற்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில், அவருக்கு ரத்த நாளத்தில் 100 சதவீதம் எல்ஏடி அடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் சரி செய்தனர். இந்த சிகிச்சை சுமார் 1 மணி நேரம் நடந்துள்ளது. இதையடுத்து எக்மோ...
”பெண்களின் இடுப்பு ‘பேரல்’ போல் ஆகிவிட்டது!” திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!

”பெண்களின் இடுப்பு ‘பேரல்’ போல் ஆகிவிட்டது!” திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!

கோயம்பத்தூர், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
திமுக பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனி, "ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு எட்டு போல் இருந்தது; இப்போது பேரல் போல் ஆகிவிட்டது,'' என்று பேசியது அரசியல் அரங்கில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.   கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, மார்ச் 23ம் தேதி, குனியமுத்தூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.   பரப்புரையின்போது அவர், ''வெளிநாட்டு மாடுகளின் பாலைக் குடித்து குடித்து நம் ஊர் பெண்களும், குழந்தைகளும் பலூன் போல ஊதிவிட்டனர். ஒரு காலத்தில், பெண்களின் இடுப்பு எட்டு போல் இருந்தது. குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்தால் கச்சிதமாக அமர்ந்து கொள்ளும். ஆனால், இப்போது பெண்களின் இடுப்பு, பேரல் போல ஆகிவிட்டது. குழந்தை...
பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? திமுக பரப்புரை கூட்டத்தில் ஆனந்த் சீனிவாசன் தகவல்!

பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? திமுக பரப்புரை கூட்டத்தில் ஆனந்த் சீனிவாசன் தகவல்!

அரசியல், சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
  பெரும் முதலாளிகளுக்கு பாஜக அரசு 1.54 லட்சம் கோடிகளுக்கு வரிச்சலுகை அளித்ததால்தான், பெட்ரோல், டீசல் மீது 20 சதவீதம் செஸ் வரி விதிக்கப்பட்டதாகவும், முதலாளிகளின் நலன் கருதியே மத்திய அரசு எரிபொருள் விலையை குறைக்கவில்லை என்றும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறினார்.   ஓமலூர் சட்டப்பேரவை தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, ஓமலூர் செட்டிப்பட்டியில் முஸ்லிம் மற்றும் கிறித்தவர்கள் ஒருங்கிணைந்து திங்களன்று இரவு (மார்ச் 22) சிறப்பு பரப்புரை கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்ட ஏற்பாடுகளை திமுக சிறுபான்மை பிரிவு நிர்வாகி லியாகத் அலி செய்திருந்தார்.   காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்...
நேற்று மநீம… இன்று தேமுதிக…! கொரோனா கிலியில் வேட்பாளர்கள்!!

நேற்று மநீம… இன்று தேமுதிக…! கொரோனா கிலியில் வேட்பாளர்கள்!!

சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் சந்தோஷ்பாபு, பொன்ராஜ் ஆகியோரை தொடர்ந்து சேலம் மேற்கில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. நோய்த்தொற்று கிலியால் வேட்பாளர்கள் கூட்டங்களை புறக்கணிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.   தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம், தலைவர்களின் உச்சக்கட்ட பரப்புரைகளால் அனல் பறந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, கொரோனா இரண்டாவது அலை இம்முறை அரசியல் கட்சியினர் மீது அடுத்தடுத்து தாக்குதலை தொடர்ந்து வருவது, வேட்பாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.   ஏற்கனவே, சென்னை வேளச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு கொரோனா தொற்றுக்கு ஆளானார். மக்களை நேரில் சந்திக்க முடியாமல் போனதற்காக வருத்தப்படுவதாகவும் அவர் தெரி...
சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு; எடப்பாடிக்கு எதிராக புது முகத்துக்கு வாய்ப்பு!

சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு; எடப்பாடிக்கு எதிராக புது முகத்துக்கு வாய்ப்பு!

அரசியல், சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, ஐயுஎம்எல், மஜக, மமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு கடந்த வியாழனன்று (மார்ச் 11) இரவு இறுதி செய்யப்பட்டது.   இந்த தேர்தலில் திமுக, 173 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. இதையடுத்து, திமுக வேட்பாளர்கள் பட்டியல், ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (மார்ச் 12) வெளியிடப்பட்டது. அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர்களை அறிவித்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஓமலூர் தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மற்ற 10 தொகுதிகளிலும் திமுக நேரடியாக களம் இறங்குகிறது.   சேலம் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் ...
கூலியாக இருந்து தொழில்முனைவோர் ஆன மலர்மணி!; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர!”

கூலியாக இருந்து தொழில்முனைவோர் ஆன மலர்மணி!; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர!”

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின ஸ்பெஷல்- ''இந்த உலகத்துல நாம பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் காகிதம், தகரம், உடுத்தின பிறகு வீசப்படும் துணிமணிகள்னு எல்லாமே மறுசுழற்சி மூலமாக திரும்பவும் ஏதோ ஒரு ரூபத்துல பயன்பாட்டுக்கு வந்துடுது. அதனால இங்கே வேஸ்ட்னு எதுவுமே இல்ல. செத்ததுக்கப்புறம் எரித்து சாம்பலாகிடற மனுஷங்கள வேணும்னா வேஸ்ட்னு சொல்லலாம்,'' என போகிற போக்கில் வாழ்க்கையின் ஆகப்பெரும் தத்துவத்தை சொல்கிறார் மலர்மணி (37).   கொடிய வறுமையும், அனுபவங்கள் கற்றுக்கொடுத்த பாடமும்தான் அவரை இந்தளவுக்கு பக்குவமாக பேச வைத்திருக்கிறது. வாழ்வியல் சூழலுக்கு ஏற்பதான் ஒருவரின் சிந்தனையும் அமைகிறது. அதற்கு மலர்மணியும் விதிவிலக்கு அன்று.   அவர் எதற்காக பழைய காகிதம், பழைய இரும்பை உதாரணமாகக் கூறினார் என்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.   சேலம் மாவட்ட...
‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின ஸ்பெஷல்- ''ஒருவருக்குச் சாத்தியமாவது எல்லோருக்குமே சாத்தியமாகும்'' என்பதை மகாத்மா காந்தி, வழிநெடுகிலும் நம்பி வந்திருக்கிறார். காந்தியின் நம்பிக்கை, யதார்த்த வாழ்விலும் பலருக்கு சாத்தியமாகி இருக்கிறது என்பதை என் கள அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.   இதில் வேடிக்கை என்னவென்றால், நான் சந்தித்த வெற்றிகரமான குடும்பத் தலைவிகள் பலருக்கும் காந்தியைப் பற்றிய பிரக்ஞை எல்லாம் கிடையாது. உழைக்கத் தயங்காத எவர் ஒருவரையும் இந்த பூமி நிராதரவாக விட்டுவிடுவதே இல்லை. சிலர் ஏணியை, கூரை மேல் எறிகிறார்கள். சிலர், வானத்தை நோக்கி வீசுகிறார்கள். ஆனால், 'உள்ளத்தனையது உயர்வு' என்பதுதான் நிஜம்.   சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கட்டெறும்பு காடு பகுதியைச் சேர்ந்த அமுதாவும் (34), அவருடைய கணவர் கோவிந்தராஜூம் கடின உழைப்புக்கு அஞ்சாதவர்கள். இரண்டு மகள்...
தோழர் தா.பாண்டியன் மறைந்தார்! உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ஒலித்தவர்!!

தோழர் தா.பாண்டியன் மறைந்தார்! உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ஒலித்தவர்!!

அரசியல், மதுரை, முக்கிய செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான, தோழர் தா.பாண்டியன் (88) உடல்நலக் குறைவால், வெள்ளிக்கிழமை (பிப். 26) இயற்கை எய்தினார்.   இந்திய கம்யூ., கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான தா.பாண்டியன், கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். பிப். 24ம் தேதி அவருடைய உடல்நலம் மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.   எனினும், அவருடைய உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிப். 25ம் தேதி மாலையில் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. தீவிர சிகச்சை அளித்தும் பலன் அளிக்காத நிலையில், வெள்ளிக்கிழமை (பிப். 26) காலை 10.05 மணியளவில் அவர் உயிரிழந்தார்.   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்...
தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கை, சட்டப்பேரவையில் செவ்வாயன்று (பிப். 23) தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் கடன் சுமை, அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் 5.70 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.   தமிழக சட்டப்பேரவையில், 2021-2022ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், செவ்வாய்க்கிழமை (பிப். 23) தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். விரைவில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.   நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:   தமிழக அரசின் நிதி பற்றாக்குறை மாநில அரசின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2021-2022ம் நிதியாண்டில் 4 சதவீதத்திற்குள்ளும், 2022-2023ம் நிதியாண்டில் 3.5 சதவீதத்திற்குள்ளும்,...