Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு; எடப்பாடிக்கு எதிராக புது முகத்துக்கு வாய்ப்பு!

தமிழக சட்டமன்றத்
தேர்தலையொட்டி திமுக
தலைமையிலான மதச்சார்பற்ற
முற்போக்கு கூட்டணியில்
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக,
மதிமுக, ஐயுஎம்எல், மஜக, மமக
உள்ளிட்ட கட்சிகள் இடம்
பெற்றுள்ளன. கூட்டணி
கட்சிகளுடன் தொகுதி பங்கீடு
கடந்த வியாழனன்று (மார்ச் 11)
இரவு இறுதி செய்யப்பட்டது.

 

இந்த தேர்தலில் திமுக,
173 தொகுதிகளில் நேரடியாக
களமிறங்குகிறது. இதையடுத்து,
திமுக வேட்பாளர்கள் பட்டியல்,
ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை
(மார்ச் 12) வெளியிடப்பட்டது.
அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்,
வேட்பாளர்களை அறிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள
11 சட்டமன்ற தொகுதிகளில்
ஓமலூர் தொகுதி மட்டும் காங்கிரஸ்
கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
மற்ற 10 தொகுதிகளிலும்
திமுக நேரடியாக
களம் இறங்குகிறது.

 

சேலம் மாவட்டத்தில்
திமுக சார்பில் போட்டியிடும்
வேட்பாளர்கள் விவரம்:

 

கெங்கவல்லி (தனி):

வேட்பாளர்: ஜெ.ரேகா பிரியதர்ஷினி (38)
கணவர்: பாபு – துணை கலெக்டர்
ஊர்: சேலம்
கல்வித்தகுதி: எம்ஏ., எம்பில்., எம்ஏ (பொது நிர்வாகம்), பிஹெச்.டி.,
தொழில்: குடும்ப தலைவி
சாதி: அருந்ததியர்

 

2006-2011 வரை, சேலம்
மாநகராட்சி மேயராக இருந்தார்.
கடந்த 2016 தேர்தலின்போது
கெங்கவல்லியில் போட்டியிட்டார்.
சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அதனால் அவருக்கு மீண்டும்
இதே தொகுதியில் வாய்ப்பு
அளிக்கப்பட்டு உள்ளது.

 

ஆத்தூர் (தனி):

வேட்பாளர்: கு.சின்னதுரை (54)
தொழில்: விவசாயம், கல்வி நிறுவனம்
ஊர்: கூடமலை
கல்வித்தகுதி: பி.இ.,
சாதி: ஆதிதிராவிடர்; 2006 தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆக இருந்தார்.

 

ஏற்காடு (தனி):

வேட்பாளர்: சி. தமிழ்செல்வன் (50)
ஊர்: பேளூர்
தொழில்: விவசாயம்

 

2006 – 2011ல் ஏற்காடு
எம்எல்ஏ ஆக இருந்தார்.
கடந்த 2016 தேர்தலில்
இதே தொகுதியில் போட்டியிட்ட
அவர் தோல்வி அடைந்தார்.
மீண்டும் அவருக்கு வாய்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது.

 

சேலம் தெற்கு:

வேட்பாளர்: ஏ.எஸ்.சரவணன் (49)
ஊர்: களரம்பட்டி, சேலம்
கல்வித்தகுதி: 7ம் வகுப்பு
கட்சி பதவி: தாதகாப்பட்டி பகுதி செயலாளர்
தொழில்: ஜவுளி ஏற்றுமதி
சாதி: கன்னட தேவாங்க செட்டியார்

 

சேலம் வடக்கு:

வேட்பாளர்: ஆர்.ராஜேந்திரன் (62)
ஊர்: சேலம்
கல்வித்தகுதி: பி.ஏ., பி.எல்.,
கட்சி பதவி: சேலம் மத்திய மாவட்ட செயலாளர்
தொழில்: வழக்கறிஞர், விவசாயம்
சாதி: வன்னியர்

 

2006, 2016 தேர்தல்களில்
வெற்றி பெற்று இருமுறை
எம்எல்ஏ ஆக இருந்துள்ளார்.
சேலம் வடக்கு தொகுதி
சிட்டிங் எம்எல்ஏவான இவருக்கு,
மீண்டும் அதே தொகுதியில்
வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

 

சேலம் மேற்கு:

வேட்பாளர்: ஏ. ராஜேந்திரன் (53)
ஊர்: சேலத்தாம்பட்டி
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு
கட்சி பதவி: தலைமை பொதுக்குழு உறுப்பினர், சேலத்தாம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர்.
தொழில்: வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்
சாதி: வன்னியர்

 

மேட்டூர்:

வேட்பாளர்: எஸ்.ஸ்ரீனிவாசபெருமாள் (47)
ஊர்: மேச்சேரி
கல்வித்தகுதி: பிளஸ் 2
கட்சி பதவி: மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளர்
தொழில்: திரையரங்க உரிமையாளர்
சாதி: வன்னியர்

 

சங்ககிரி:

வேட்பாளர்: கே.எம்.ராஜேஷ் (41)
ஊர்: சங்ககிரி
கல்வித்தகுதி: பட்டதாரி
கட்சி பதவி: ஒன்றிய பொறுப்பாளர்
தொழில்: பள்ளிக்கூடம், பேருந்து உரிமையாளர்
சாதி: கொங்கு வெள்ளாள கவுண்டர்

 

எடப்பாடி:

வேட்பாளர்: சம்பத்குமார் (37)
ஊர்: கொங்கணாபுரம்
கல்வித்தகுதி: பட்டதாரி
கட்சிப்பதவி: சேலம் மேற்கு மாவட்ட துணை செயலாளர்
தொழில்: விவசாயம்
சாதி: வன்னியர்

 

வீரபாண்டி:

வேட்பாளர்: மருத்துவர் கே.தருண் (40)
ஊர்: சேலம்
கல்வித்தகுதி: எம்பிபிஎஸ்., எம்எஸ்., எம்பிஏ.,
கட்சி பதவி: தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர்
தொழில்: மருத்துவர்
சாதி: வன்னியர்

 

இவர்களில், சேலம் தெற்கு,
சேலம் மேற்கு, மேட்டூர், சங்ககிரி,
எடப்பாடி, ஆத்தூர் (தனி),
வீரபாண்டி ஆகிய 7 தொகுதிகளில்
போட்டியிடும் வேட்பாளர்களும்
தேர்தல் களத்தில் முதன்முறையாக
அறிமுகம் செய்யப்பட்டு உள்ளனர்.

 

கெங்கவல்லி தனி தொகுதியில் மட்டும் ஒரே ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

 

எடப்பாடி தொகுதியில்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை
எதிர்த்து போட்டியிடும் திமுக
வேட்பாளர் சம்பத்குமார்,
எடப்பாடியின் அரசியல்
அனுபவத்தை விட வயதில்
குறைந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.

 

கடந்த மார்ச் 12ம் தேதி
வெளியிடப்பட்ட பட்டியலில்,
ஆத்தூர் தனி தொகுதியில்
ஜீவா ஸ்டாலின் என்பவர்
போட்டியிடுவார் என்று
அறிவிக்கப்பட்டது. அவர்,
ஆதிதிராவிடர் என்று சாதி
சான்றிதழை பொய்யாக
வழங்கியதாக திடீர் சர்ச்சை
எழுந்தது. இதையடுத்து அவரை
மாற்றிவிட்டு, அத்தொகுதியில்
கு.சின்னதுரை போட்டியிடுவார்
என்று மார்ச் 16ம் தேதியன்று
திமுக தலைமை அறிவித்தது.

 

– பேனாக்காரன்