Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நாமக்கல்

ஊரடங்கினால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகள்; 75 வயது முதியவர் முதல் பள்ளி மாணவர் வரை 12 பேர் கும்பல் வெறியாட்டம்!

ஊரடங்கினால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகள்; 75 வயது முதியவர் முதல் பள்ளி மாணவர் வரை 12 பேர் கும்பல் வெறியாட்டம்!

குற்றம், நாமக்கல், முக்கிய செய்திகள்
நாமக்கல் அருகே, ஓலை குடிசையில் வசித்து வரும் இரண்டு சிறுமிகளை 75 வயது முதியவர் முதல் பிளஸ்-2 மாணவர் வரை 11 பேர் கும்பல் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ள சம்பவம், முட்டை மாவட்டத்தை உலுக்கி எடுத்துள்ளது.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வாம்பாள். இவருடைய கணவர், மூட்டைத் தூக்கும் தொழிலாளி. இரு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த செல்வாம்பாளுக்கு மூன்று மகள்கள்; இரண்டு மகன்கள். மூத்த மகள் திருமணம் ஆகி, வெளியூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். மற்ற இரு மகள்களில் ஒருவர் ரேகா (13); இன்னொரு மகள் ரஞ்சனி (12). (தாயார் மற்றும் மகள்களின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன). செல்வாம்பாள், மல்லூரில் உள்ள தனியார் சேகோ ஆலையில் கூலி வேலை செய்கிறார். தினசரி
‘அந்நியன்’ வாலிபரால் உறைந்த ‘முட்டை’ மாவட்ட கிராமம்!! ”பத்து தலையாவது உருண்டுருக்கும் ரெண்டு உசுரோட போச்சு!”

‘அந்நியன்’ வாலிபரால் உறைந்த ‘முட்டை’ மாவட்ட கிராமம்!! ”பத்து தலையாவது உருண்டுருக்கும் ரெண்டு உசுரோட போச்சு!”

குற்றம், நாமக்கல், முக்கிய செய்திகள்
''அய்யோ... இப்ப வரைக்கும் எங்களுக்கு அந்த படபடப்பும் பயமும் போகலைங்க. ஈரக்குலையெல்லாம் நடுங்கிப் போச்சுங்க சார். சம்பவம் நடந்து மூணு நாளாச்சு. உங்ககிட்ட பேசும்போதுகூட எங்க முகமெல்லாம் குப்புனு வேர்த்துப் போச்சு பாருங்க...,'' என கொஞ்சமும் பதற்றம் தணியாமல் பேசினர், பாலப்பாளையம் கிராம மக்கள். நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு சாலையில் இருக்கிறது, இந்த கிராமம். பாலப்பாளையம் உப்பிலிய நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அஞ்சலை. கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன், மதியழகன். திருமணமாகி விட்டது. பெரம்பலூரில் அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கிறார். இரண்டாவது மகன், கோடீஸ்வரன் (31). எம்.எஸ்சி., பி.எட்., கணிதம் படித்திருக்கிறார். பெற்றோருக்கு எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும், மகன்களை படித்து ஆளாக்கியுள்ளனர்.
20 லட்ச ரூபாய்க்கு இலவச காய்கறிகள்! மக்களை தேடித்தேடி சென்று வழங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்! தனி ஒருவன் #1

20 லட்ச ரூபாய்க்கு இலவச காய்கறிகள்! மக்களை தேடித்தேடி சென்று வழங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்! தனி ஒருவன் #1

சிறப்பு கட்டுரைகள், நாமக்கல், முக்கிய செய்திகள்
வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்னல்களும், சவால்களும்தான் உலகுக்கு நிஜ நாயகர்களை அடையாளம் காட்டுகின்றன. அப்படி, ஒரு காலத்தில் பண்ணை அடிமையாக இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய கிராம மக்களுக்கு தேடித்தேடிச் சென்று 20 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகளை இலவசமாக வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.   நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (49). மனைவி தமிழ்ச்செல்வி. மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் 1வது ரிசர்வ் வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் தமிழ்ச்செல்வி. அதற்கு முன்பு, அவினாசிப்பட்டி
அமெரிக்க கோழிகளால் ஆபத்து! 4 கோடி பேருக்கு வேலை பறிபோகும்; எச்சரிக்கும் பண்ணையாளர்கள்!!

அமெரிக்க கோழிகளால் ஆபத்து! 4 கோடி பேருக்கு வேலை பறிபோகும்; எச்சரிக்கும் பண்ணையாளர்கள்!!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கோழிகளை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் காலம்காலமாக கோழிப்பண்ணைத் தொழிலை நம்பி இருக்கும் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோவதோடு, கடும் பொருளாதார இழப்பும் ஏற்படும் என்று கோழி பண்ணையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தத்தின்பேரில் இந்தியாவில் இதுவரை பாரம்பரியமாக நடைபெற்று வந்த பல தொழில்கள் பெரும் சரிவை நோக்கிச் சென்று வருகின்றன. பல குடிசைத்தொழில்கள் அழிந்தே விட்டன. மிட்டாய் முதல் நொறுக்குத்தீனி தயாரிப்பு வரை பன்னாட்டு நிறுவனங்களின் நாலுகால் பாய்ச்சலால், இந்தியா ஆகப்பெரும் சந்தையாக உருவெடுத்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் பார்வையில், இந்தியர்கள் வெறும் நுகர்வோர்களாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறோம்.   இந்நிலையில்தான், உலகளவில் முட்டை, கறிக்கோழ
ஆளுங்கட்சியினர் என்னிடம் 80 லட்சம் ரூபாய் பேரம் பேசினாங்க! முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா தடாலடி!!

ஆளுங்கட்சியினர் என்னிடம் 80 லட்சம் ரூபாய் பேரம் பேசினாங்க! முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா தடாலடி!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
தமிழகத்தில், அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பணம் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தினாலும், உள்ளூரில் செல்வாக்கு படைத்த சாமானியர்களும் பரவலாக வெற்றி பெற்றிருப்பதையும் காண முடிந்தது. அதேநேரம், முதன்முறையாக மாநில கட்சிகள் அளவில், திருநங்கை ஒருவரும் ஒன்றிய கவுன்சிலராக அதிரி புதிரியாக வெற்றி பெற்று மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து இருக்கிறார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம், இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட கருவேப்பம்பட்டி ஊராட்சி, கடந்த இருபது ஆண்டுக்கும் மேலாக அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே திருநங்கையான ரியா (29), அதிமுக கோட்டையை தகர்த்தெறிந்து திமுக வசமாக்கி இருக்கிறார். ஆண் பாதி, பெண் பாதியாக காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் மண்ணில் திருநங்கையான ரியா வெற்றி பெற்றிருப்பது தர்க்க ரீதியில
ஒரு பெண் குழந்தையின் விலை 2 லட்சம்! தரம் பிரித்து பச்சிளம் சிசுக்கள் விற்பனை!!

ஒரு பெண் குழந்தையின் விலை 2 லட்சம்! தரம் பிரித்து பச்சிளம் சிசுக்கள் விற்பனை!!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
ஒரு பெண் குழந்தையின் விலை இரண்டு லட்சம் ரூபாய் என்றும், குண்டான, அழகான, அமுல் பேபி மாதிரியான ஆண் குழந்தை நாலேகால் லட்சம் ரூபாய் என்றும் குழந்தைகளை தரம் பிரித்து விற்பனை செய்து வரும் ராசிபுரம் செவிலியர் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.   மாறி வரும் உணவுப்பழக்கவழக்கம், மேற்கத்திய கலாச்சாரம் போன்றவற்றால் இன்றைக்கு ஆண், பெண்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட இருபாலருக்குமே 50 சதவீதம் வரை மலட்டுத்தன்மை குறைபாடு இருக்கிறது என்கிறது மருத்துவத்துறை. இந்நிலையில் செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருந்தாலும், அதற்காகும் அதிகபட்சமான செலவுகள் காரணமாக குறுக்கு வழியில் பலர் குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 'காரா' (CARA - Central Adoption Resource Authority) மூலம் சட்டப்படி குழந்தைகளை தத்து எடுக்கலாம். எனினும்,
கோகுல்ராஜ் வழக்கை நாமக்கல் நீதிமன்றம் விசாரிக்க கூடாது! – ஹைகோர்ட்

கோகுல்ராஜ் வழக்கை நாமக்கல் நீதிமன்றம் விசாரிக்க கூடாது! – ஹைகோர்ட்

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கை, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து, உயர்நீதிமன்றம் மார்ச் 6, 2019ம் தேதி உத்தரவிட்டுள்ளது.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதியன்று திடீரென்று காணாமல் போனார். மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ், தலை வேறு முண்டம் வேறாக கொல்லப்பட்டுக் கிடந்தார். திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ. படித்து வந்தபோது, தன்னுடன் ஒரே வகுப்பில் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் கோகுல்ராஜ் நெருக்கமாகப் பழகி வந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதியை காதலிப்பதாக கருதிய கும்பல், அவரை சாதிய வன்மத்துடன் ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று அப்போது பல்வேற
கோகுல்ராஜின் நெருங்கிய தோழி சுவாதி நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்! கைது ஆணையால் அச்சம்!!

கோகுல்ராஜின் நெருங்கிய தோழி சுவாதி நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்! கைது ஆணையால் அச்சம்!!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து போக்குக் காட்டி வந்த கோகுல்ராஜின் தோழி சுவாதி, கைது ஆணை நடவடிக்கைக்கு பயந்து திடீரென்று நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதி, நாமக்கல் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில்தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியுடன் நெருங்கிப் பழகி வந்தார். அதனால் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று சர்ச்சைகள் எழுந்தன.   இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த திருச்செங்கோடு காவல்துறையினர், கோகுல்ராஜை திட்டமிட்டு கொலை செய்ததாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவரா
சுவாதியை கைது செய்யுங்கள்! நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!!

சுவாதியை கைது செய்யுங்கள்! நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!!

குற்றம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த அவருடைய தோழி சுவாதிக்கு கைது ஆணை பிறப்பித்து நாமக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றம் இன்று (பிப்ரவரி 20, 2019) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கொலை செய்யப்பட்டார். 24.6.2015ம் தேதி மாலை, அவருடைய சடலம் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.   நாமக்கல்லை அடுத்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவர் கோகுல்ராஜ் உடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்தார். அப்போதுமுதல் இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியுடன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் நெருங்கிப் பழகியதை பிடிக்காத
ஆணவக்கொலை: கோகுல்ராஜின் சட்டையில் இருந்தது மனித ரத்தமா? தடய அறிவியல் நிபுணர் பரபரப்பு சாட்சியம்!

ஆணவக்கொலை: கோகுல்ராஜின் சட்டையில் இருந்தது மனித ரத்தமா? தடய அறிவியல் நிபுணர் பரபரப்பு சாட்சியம்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் கொலை வழக்கில், அவருடைய சடலத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டை, உள்ளாடைகளில் இருந்தது மனித ரத்தமா? இல்லையா? என்பது குறித்து தடய அறிவியல் ஆய்வக பெண் அதிகாரி நாமக்கல் நீதிமன்றத்தில், திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 18, 2019) பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாதி ஆணவப்படுகொலைகளுள் கோகுல்ராஜின் கொலை வழக்கும் ஒன்று. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தி இன்ஜினியரிங் பட்டதாரியான கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். உடன் படித்து வந்த, கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகியதால் அவர் கொல்லப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.   கடந்த 24.6.2015ம் தேதியன்று மாலையில், நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக கோக