Sunday, May 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

முக்கிய செய்திகள்

டி-20 கிரிக்கெட்: இந்திய தலைகள் உருண்டன; ஆஸி. அசத்தல் வெற்றி

டி-20 கிரிக்கெட்: இந்திய தலைகள் உருண்டன; ஆஸி. அசத்தல் வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கவுகாத்தியில் நடந்த ஆஸி. அணிக்கு எதிரான இரண்டாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் கைகொடுக்காததால், 8 விக்கெட்டில் ஆஸி அணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி கவுஹாத்தியில் இன்று (அக். 10) நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் வார்னர், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தலைகள் உருண்டன: இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா (8), ஷிகர் தவான் (2), விராட் கோலி (0), மனீஷ் பாண்டே (6) என ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்களை, ஆஸி பந்து வீச்சாளர் பெஹர்டெண்டிராப் பெவிலியனுக்க
”பிரபாகரன் உடலைப் பார்த்து வேதனை அடைந்தேன்” – சொல்கிறார் ராகுல்காந்தி

”பிரபாகரன் உடலைப் பார்த்து வேதனை அடைந்தேன்” – சொல்கிறார் ராகுல்காந்தி

இந்தியா, உலகம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உடலைப் பார்த்து நானும், பிரியங்காவும் மிகவும் வேதனை அடைந்தோம் என்று காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார். குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் குஜராத்தில் இப்போதே பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். நேற்று (9/10/17) அந்த மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, வதோதராவில் தொழில் அதிபர்களைச் சந்தித்து உரையாடினார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அவரும் சகஜமாக அவற்றுக்கு பதில் அளித்தார். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், ''இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் பாஜக அரசு மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. நம் நாட்டில் தினமும் 30 ஆயிரம் இளைஞர்கள் படித்து முடித்து வெளிய
‘சுமார் மூஞ்சி குமார்’களை விரும்பும் பெண்கள்: சர்வே சொல்றத கேளுங்க!

‘சுமார் மூஞ்சி குமார்’களை விரும்பும் பெண்கள்: சர்வே சொல்றத கேளுங்க!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
எல்லாவற்றிலும் ஸ்மார்ட் ஆக இருக்கும் ஆண்களைக் காட்டிலும், 'சுமார் மூஞ்சி குமார்'களையே பெண்களுக்கு அதிகம் பிடித்திருக்கிறதாம். நம்ம ஊர்ல இல்லைங்க. இது லண்டன் பெண்களின் சமாச்சாரம். இங்கிலாந்தின் லண்டன் பல்கலை., ஒன்று, பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என்ற ஆய்வை சமீபத்தில் நடத்தியது. எத்தனை பேரிடம் இந்த ஆய்வு நடந்தது என்ற தகவல்கள் இல்லை. ஆனால் ஆய்வின் முடிவில், பல்வேறு ருசிகரமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அர்னால்டு ஸ்வஸ்நேகர் போல கட்டுமஸ்தான ஆண்களை, அவ்வளவாக பெண்கள் விரும்புவதில்லை என்பது அந்த ஆய்வில் கிடைத்த முக்கிய தகவல்களில் ஒன்று. அதேபோல், விரல் நுனியில் தகவல்களை வைத்துக்கொண்டு 'டான் டான்' என்று பொளந்து கட்டும் ஆண்கள் மீது மதிப்பு இருக்கிறதே தவிர, அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்பதில் சற்று தயக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 1
கீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்?

கீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி கிராமம். தமிழகத்தின் குக்கிராமங்களில் ஒன்றாக கீழடியை நாம் கடந்து போய்விட முடியாது. அங்கேதான், பழந்தமிழரின் அரிய ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. கடந்த 2015ம் ஆண்டில் இருந்து கீழடி கிராமத்தில் மைய அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 110 ஏக்கர் பரப்பளவு நிலத்தை மைய அரசு கையகப்படுத்தியது. இரண்டு கட்ட ஆய்வு நடந்த நிலையில், திடீரென்று தொல்லியல் துறையினர் பாதியிலேயே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்ப, வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் கட்சியினரிடம் இருந்து அப்போது கடும் கண்டனங்கள் எழுந்தன. ஒருவழியாக உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. ஒரு கட்ட அகழாய்வு என்பது ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 10 மாதங்களாவது நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆறே மாதத்தில் திடீரென்று ஆய்வுப்பணிகள் முடிந்ததாகக்கூறி
அமித் ஷா மகன் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்வு?

அமித் ஷா மகன் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்வு?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் நடத்தி வரும் நிறுவனத்தின் வர்த்தகம், நரேந்திர மோடி பிரதமர் ஆன ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. இவருடைய மகன் ஜெய் ஷா. இவர் 'ஷா'ஸ் டெம்பிள் என்டர்பிரைசஸ்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். சில ஆயிரங்களில் வெறும் பெயரளவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கடந்த 2013ம் ஆண்டில் ரூ.6230ம், 2014ம் நிதியாண்டில் ரூ.1724ம் இழப்பு கண்டதாக கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2014-15ம் நிதியாண்டில் டெம்பிள் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50 ஆயிரம் என்றும், அந்த ஆண்டு ரூ.18728 லாபம் அடைந்துள்ளதாகவும் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத
முதல் டுவென்டி-20: ஆஸியை வீழ்த்தியது இந்தியா

முதல் டுவென்டி-20: ஆஸியை வீழ்த்தியது இந்தியா

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை, ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே 4-1 கணக்கில் இழந்திருந்தது. இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலாவது டி-20 போட்டி ராஞ்சியில் இன்று (அக்டோபர் 7) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தோள் பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் விளையாடவில்லை. டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஸ்மித்துக்கு மாற்று வீரராக மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடம் பெற்றார். இந்திய அணியில் ரஹானே, அக்சர் படேல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, குல்தீப் யாதவ், ஷிகர் தவான் வாய்ப்பு பெற்றனர். வெற்றி பெறும் முனைப்புடன
‘போதை’ நடிகருக்கு ஏற்பட்ட கதி!

‘போதை’ நடிகருக்கு ஏற்பட்ட கதி!

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'சுப்ரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெய். சென்னையில் வசிக்கிறார். கடந்த செப். 21ம் தேதி, அடையாறு பாலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச்சென்றார். திடீரென்று கார், பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காவல்துறை விசாரணையில் நடிகர் ஜெய், குடிபோதையில் காரை ஓட்டிச்சென்றது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஜெய் போக்குக் காட்டி வந்தார். அதனால் அவருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரே இன்று (அக். 7) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட், திரைப்படத்தில் கார் ஓட்டுவதுபோல் நிஜத்திலும் ஓட்டினீர்களா? என்று எச்சரித்தார். அப்போது நடிகர் ஜெய் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடு
நொறுங்கும் ஏழைகள்; அம்பானியின் சொத்து மட்டும் உயர்வது எப்படி?

நொறுங்கும் ஏழைகள்; அம்பானியின் சொத்து மட்டும் உயர்வது எப்படி?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடிப்பில் வெளியான 'சிவாஜி' படத்தில், ரஜினி அறிமுகம் ஆகும் காட்சி அது. விமான நிலையத்தில் இருந்து வெளியேறி, காரில் ஏறும்போது பக்கவாட்டு கண்ணாடியை தட்டியபடி ஒரு பெண் கையில் தட்டேந்தி நிற்பார். அப்போது ரஜினி சொல்வார், ''பணக்காரர் மேலும் பணக்காரர் ஆகிறார். ஏழைகள் மேலும் ஏழைகளாகிட்டே இருக்கிறார்கள் (Rich get Richer and Poor get Poorer)'' என ஆங்கிலத்தில் ஆதங்கத்துடன் கூறுவார். சமீபத்திய ஃபோர்ப்ஸ் இந்தியா (FORBES INDIA) பத்திரிகையின் அறிக்கையும் அந்த வசனத்தைதான் நினைவூட்டுகிறது. உலகளவில் பிரபலமான வணிக பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்திய பணக்காரர்களின் பட்டியலை இரு நாள்களுக்கு முன்பு வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்தியாவின் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 38 பில்லியன் டாலர்கள் (2.47 லட்சம் கோடிகள
சசிகலாவை வறுத்தெடுக்கும் ‘மீம்’ கிரியேட்டர்கள்!

சசிகலாவை வறுத்தெடுக்கும் ‘மீம்’ கிரியேட்டர்கள்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அவசரகால பரோல் விடுப்பில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கிண்டலடித்து நெட்டிஸன்கள் மீம்களை பதிவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்கள் முழுவதும் சசிகலா பற்றிய மீம்களே அதிகளவில் வைரல் ஆகி வருகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். கைதி எண்: 9234. அவருடைய கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இரு நாள்களுக்கு முன்பு, கல்லீரல், சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரைக் காண்பதற்காக அவசரகால பரோல் விடுப்பில் இன்று (அக். 6) சிறையில் இருந்து விடுவிக்கப்பட
அதிமுக அரசுக்கு ஆதரவா?; ‘பொடி’ வைக்கும் புதிய ஆளுநர்

அதிமுக அரசுக்கு ஆதரவா?; ‘பொடி’ வைக்கும் புதிய ஆளுநர்

அரசியல், முக்கிய செய்திகள்
கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்த வித்யாசாகர் ராவ் நேற்று விடைபெற்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரை முறைப்படி வழியனுப்பி வைத்தனர். பதவி ஏற்பு: அதையடுத்து, தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், ராஜ் பவனில் இன்று (அக்டோபர் 6) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பன்வாரிலால் புரோஹித்தின் மனைவியும் கலந்து கொண்டார். பதவியேற்பு முடிந்ததும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின் அதிருப்தி: முதல்வர், துணை முதல்வர் ஆகியோரைத் தொடர்ந்து மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின்தான் ஆளுநருக்கு வாழ்த்துச் சொல்ல அழைக்கப்பட வேண்ட