Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Blog

சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா? – சுரேஷ், வழக்கறிஞர்

சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா? – சுரேஷ், வழக்கறிஞர்

கல்வி, சென்னை, தகவல், மகளிர்
மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்டத்திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது என்பதை அறியலாம். சமூகம் மாற ஆரம்பித்ததும் குற்றங்களும் நடைபெற ஆரம்பித்தன. சமூகத்தை ஒருங்கிணைக்கவும் பாதுகாக்கவும் சட்டங்கள் வரையறுக்கப்பட்டன. ஆனால் சட்ட விழிப்புணர்வு மட்டும் இன்றும் தோன்றவே இல்லை. குறிப்பாக பெண்கள், அடிப்படை சட்டங்களை அறிந்து கொள்வதின் மூலம் தன்னம்பிக்கையும், எதையும் எதிர் கொள்ளும் துணிவும் பக்குவமும் அதிகரிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சொத்தில் பங்கு உண்டா..? ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சில பேருக்கு பொதுவாய் தெரிகிறது. "மகிழ்ச்சி”. ஆனால் பெண்களுக்கு என்னென்ன உரிமை இருக்கி
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே… : திரை இசையில் வள்ளுவம்!

உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே… : திரை இசையில் வள்ளுவம்!

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
சங்க இலக்கியங்களில் திருக்குறளில் சொல்லப்பட்ட பல பாடல்களை அடியொற்றி, அவ்வையாரும் பாடியிருக்கிறார். இதை 'கட் - காப்பி - பேஸ்ட்' என்பதா? அல்லது உயர்ந்தவர்களின் சிந்தனைகள் ஒரே மாதிரிதான் இருக்கும் என்று புரிந்து கொள்வதா?. சங்க காலத்தில் நடந்ததை இப்போது எதற்கு சர்ச்சையாக்குவானேன். என் பாட்டுக்கு ஏதோ ஒன்று சொல்வதைவிட, திரைப்பாட்டுக்கும் வள்ளுவத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசி விடுவதே நல்லதென படுகிறது. சங்ககாலக் கவிஞர்களின் படைப்புகளுக்குள் இருக்கும் ஒப்புமையைப் போல, திரைப்படப் பாடல் ஆசிரியர்களின் படைப்புகளுக்குள்ளும் எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே 'நினைத்ததை முடிப்பவன்' (1975) படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய, 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...' என்ற பாடலுக்கும், வள்ளுவத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விரிவாகவே பார்த்திருக்கிறோம். கவிஞர் மருதகாசிக்கு முன்ப
‘காவிகளின்’ ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா! “பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்”

‘காவிகளின்’ ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா! “பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்”

அரசியல், இந்தியா, குற்றம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் இனவாத, வகுப்புவாத போராட்டங்கள், குற்றச் சம்பவங்கள் அதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 41 விழுக்காடு அதிகரித்து உள்ளதாக நடுவண் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மத்திய உள்விவகாரத்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், கடந்த 2017 ஜூலை 25-ம் தேதியன்று பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். அதில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற வகுப்புவாத மற்றும் இனவாதக் கலவரங்கள் குறித்த புள்ளிவிவரக் கணக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை கிட்டத்தட்ட மோடி அரசின் மூன்றாண்டு ‘சாதனைகளின்’ ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்துள்ளது. தேசிய குற்றப் பதிவுத்துறை (NCRB) வெளியிட்டுள்ள தகவல்களின் படியே அந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதாலும், அதை மத்திய அமைச்சரே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாலும் அந்தப் புள்ளிவிவரங்களை மோடியின் பக்தாள்கள் யாரு
‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்!

‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்!

அரசியல், அலோபதி, இந்தியா, உலகம், கல்வி, தமிழ்நாடு, தொழில்நுட்பம், மருத்துவம், முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் வட மாநிலங்களுக்கு காட்டிய சலுகையை, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஓரவஞ்சனையுடன் செயல்பட்டுள்ளதாக நடுவண் பா.ஜ.க., அரசு மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.  “ஒரே தேசம், ஒரே தேர்வு” என்பது நீட் தேர்வு முறைக்கு சொல்லப்பட்ட வியாக்கியானம். பீற்றிக் கொள்ளப்பட்ட “ஒரே தேர்வு” என்பது நடைமுறையில் உள்ள மற்ற தேர்வுகளை ஒழிக்கவில்லை; என்பது ஒருபுறம் இருக்கட்டும். மேற்படி தேர்வுக்கு மாணவர்கள் தங்களைத் தயாரித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் ஏற்றத் தாழ்வாகவே இருக்கின்றது. வசதி படைத்த மாணவர்கள், பல லட்சங்கள் செலவு செய்து சி.பி.எஸ்.இ. பாட திட்டம் கொண்ட ஐந்து நட்சத்திர பள்ளிகளில் படிப்பதோடு, மேலும் சில லட்சங்கள் செலவு செய்து நீட் தேர்வுகளுக்கும் தங்களைத் தயாரித்துக் கொண்டனர். இவர்களோடு, மாநில அரசுகளின் பாட திட்டங்களில் பயின்ற ஏழை மாணவ
உயர்மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம்

உயர்மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம்

கல்வி, முக்கிய செய்திகள்
மருத்துவப்படிப்பில் சேர 'நீட்' தேர்வு ஒன்றே வழி சமூகத்தில் உயர் அந்தஸ்தில் வைத்துப் பார்க்கப்படும் மருத்துவர்களை சாலையில் இறக்கி தவிக்க விட்டுள்ளது, ஒரு தீர்ப்பு. கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பில் சேர, இதுவரை வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை ஒரே தீர்ப்பில் ரத்து செய்துள்ளது, சென்னை உயர்நீதிமன்றம். மருத்துவப்படிப்பில் சேர 'நீட்' தேர்வு ஒன்றே வழி, என்ற நடுவண் அரசின் தாக்குதலில் இருந்தே மீளாத தமிழகத்திற்கு, மற்றொரு சம்மட்டி அடிதான் இந்த தீர்ப்பு. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும், நீட் தேர்வு உத்தரவும் மருத்துவர்களை இனி கார்ப்பரேட் மருத்துவமனைகளை நோக்கியே உந்தித்தள்ளும் என்ற கவலையையும் அச்சத்தையும் அரசு மருத்துவர்களிடம் ஒருசேர ஏற்படுத்தி உள்ளது. பிரச்னையின் அடிநாதம் இதுதான். தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் ஒவ்வொருவரும் கிராமப்புற ஆர
அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்

அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்

அலோபதி, பெண்கள் நலம், மகளிர், மருத்துவம், முக்கிய செய்திகள்
ஆண்களோ, பெண்களோ தங்கள் முகத்தை அழகு படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இந்த உளவியலைப் புரிந்து கொண்டதால்தான் பல நுகர்பொருள் நிறுவனங்கள், அழகு சாதன பொருட்களை சந்தையில் அள்ளிக் கொட்டி வருகின்றன. இந்தியாவில் மட்டும் அழகு சாதனப் பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது. ஆண்டுதோறும் 20 விழுக்காடு விற்பனை கூடியும் வருகிறது. ஆனால் சந்தையில் விற்கப்படும் சோப் முதல் முகத்திற்குப் போடும் கிரீம் வரை எதுவும் நம் முகத்திற்கு நிரந்தர அழகை தராது; மாறாக வேறு சில பக்க விளைவுகளை மட்டுமே உண்டாக்கும் என எச்சரிக்கிறார், சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை தோல் நோய் மருத்துவர் மேஜர்.கனகராஜ். "அந்தப் பெண்ணிற்கு சுமார் 22 வயது இருக்கும். விடிந்தால் திருமண நிச்சயதார்த்தம். அந்த நிலையில் அந்தப்பெண், ஏதோ ஒரு அழகு ந
என்ஜினீயர்கள் திறந்த இயற்கை அங்காடி

என்ஜினீயர்கள் திறந்த இயற்கை அங்காடி

வர்த்தகம்
இளைஞர்கள் நாலைந்து பேர் ஒன்று சேர்ந்தாலே அவர்களிடம் வெற்று கேளிக்கைப் பேச்சுக்கள் மட்டுமே மண்டிக்கிடக்கும் என்ற பொதுப்புத்தியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறார்கள், சேலம் இளைஞர்கள் அறுவர். அவர்கள் ஆறு பேருமே அடிப்படையில் பொறியியல் பட்டதாரிகள். படித்தோம், கைநிறைய சம்பளம் வாங்கினோம் என்றில்லாமல், இயற்கை விவசாயிகளுக்கு தோள் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இயற்கை விளை பொருட்களுக்கென பிரத்யேக சந்தையை உருவாக்கியதில் அவர்கள் தனித்துத் தெரிகின்றனர். [embedyt] https://www.youtube.com/watch?v=holauwiSmHk[/embedyt] சேலம் ஃபேர்லேன்ட்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே, 'கிரீனோசன்' என்ற பெயரில் இயற்கை அங்காடி நடத்தி வருகின்றனர். செல்வம், ராஜ்குமார், வரதராஜ், செந்தில்குமார், நிவாஸ், நித்யானந்தம் ஆகிய ஆறு நண்பர்களின் ஒருங்கிணைந்த சிந்தனையின் உருவாக்கமே, 'கிரீனோசன்' (GREEN'O'SUN). 'கிரீன்+ஓ+சன்' ஆகிய சொ
பழத்திற்கொரு பாட்டு – வியாபாரத்தில் கலக்கும் தெருக்கூத்து கலைஞர்

பழத்திற்கொரு பாட்டு – வியாபாரத்தில் கலக்கும் தெருக்கூத்து கலைஞர்

வர்த்தகம்
மழைநேர இடியின்போது அர்ச்சுனனை அழைப்பது பழைமை மாறாத மனிதர்களின் வழக்கம். ஆனால், சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தையை சரிக்கட்ட அர்ச்சுனனை அழைக்கின்றனர் இன்றைய சேலம் மக்கள். சிறிதுநேரம் நேரடி எப்.எம். பாடலை கொடுத்துவிட்டு, பழ வியாபாரத்தை முடித்து விடும் வித்தியாசமான மனிதர்தான் அர்ச்சுனன். விற்கும் பழம் எதுவோ, அது குறித்தான செய்தியை பாடலாக படித்து விடுவது அவருடைய தனித்த அடையாளம். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காருவள்ளியைச் சேர்ந்தவர் அர்ச்சுனன். கடந்த இருபது வருடங்களாக சைக்கிளில் பழ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கமாக கூவி கூவி விற்பதை மாற்றி, பாட்டுப்பாடி பழங்களை விற்பனை செய்துவரும் அவரை சந்தித்தோம். "எதையாவது இட்டுக்கட்டி பாடுவது சிறுசிலிருந்தே பழகி போச்சுங்க. ஒரே இடத்துல உக்காந்து விக்காம, அவிங்க இடத்துக்கே போய் வியாபாரம் செய்யறது சரின்னு தோணுச்சு. அதிகாலை 3 மணிக்கெல்லாம் தோட்டத்துக்கு ப
இந்தியா, ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” – சு.பொ.அகஸ்தியலிங்கம்

இந்தியா, ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” – சு.பொ.அகஸ்தியலிங்கம்

அரசியல், இந்தியா
தமிழகம் உருவாக்கிய மொழி உணர்வு, இன்றைக்கும் இந்திய அரசியலில் ஓர் ஆக்கப்பூர்வமான பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது. அதில் சில தோல்விகள் இருக்கலாம்; பலகீனம் இருக்கலாம். நான் வரலாற்றை கொச்சைப்படுத்த வில்லை. இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அடக்கி ஆண்டபோது ஏற்பட்ட சிப்பாய்க்கலகத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்கிரஸ் அமைப்பை உருவாக்கினர். அதை ஒரு 'சேஃப்டி வால்வு' ஆக பயன்படுத்தினர். ஆனால் அந்த காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான அமைப்பாக மாறியது. 1886ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்ட மூன்றாவது மாநாடு, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு முன்புவரை காங்கிரசார் ஆங்கிலத்தில்தான் எழுதுவார்கள். பேசுவார்கள். ஆனால் முதன்முறையாக அவரவர் தாய்மொழியில் பேசும் மாநாடாக அமைந்தது சென்னை மாநாடுதான். அந்த மாநாட்டில் மூக்கணாச்சாரி என்ற பொற் கொல்லர், எப்படி சிறுதொழில்கள் நசிந்தது என