Saturday, February 8மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: valluvar

வினாடி? விநாடி? எது சரி? தமிழ் வளர்ச்சித்துறை விழித்தெழுமா?

வினாடி? விநாடி? எது சரி? தமிழ் வளர்ச்சித்துறை விழித்தெழுமா?

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி ஊடகங்களிலும் 'வினாடி-வினா' போட்டிகள் நடத்தப்படுவது நீண்டகாலமாக இருந்து வருகிறது. கேட்கப்படும் வினாவுக்கு நொடிப்பொழுதில் விடை அளிக்க வேண்டும் என்பதால்தான் இத்தகைய நிகழ்ச்சிக்கு விநாடி - வினா என்று பெயர் வந்தது. இப்போது பிரச்சினை அதுவன்று. வினாடி, விநாடி ஆகியவற்றில் எந்த சொல் சரியானது என்பதுதான். வினாடி என்ற சொல்லைவி+னாடி என்றும்;விநாடி என்ற சொல்லைவி+நாடி என்றும் பிரித்து எழுதலாம். இவற்றில், 'னாடி' என்றால்எந்தப் பொருளும் தராது. 'நாடி' என்பது ஒரு வினையைக் குறிக்கும். நாடிச்செல்வது என்றும் பொருள் கொள்ளலாம். நாடித்துடிப்பையும் குறிக்கும். விநாடியில் உள்ள 'வி' என்ற முன்னொட்டானது விசை, விரைதல், சிறந்த, உயர்வான என பல பொருள்கள் தருகின்றன. விரைந்து நாடுதல் எனலாம். நொடியின் அடிப்படையில்உருவானச் சொல்தான் விநாடி.விரைந்து துடிப்பதுதான் நாடி.நாடியின் கால ...
கீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்?

கீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி கிராமம். தமிழகத்தின் குக்கிராமங்களில் ஒன்றாக கீழடியை நாம் கடந்து போய்விட முடியாது. அங்கேதான், பழந்தமிழரின் அரிய ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. கடந்த 2015ம் ஆண்டில் இருந்து கீழடி கிராமத்தில் மைய அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 110 ஏக்கர் பரப்பளவு நிலத்தை மைய அரசு கையகப்படுத்தியது. இரண்டு கட்ட ஆய்வு நடந்த நிலையில், திடீரென்று தொல்லியல் துறையினர் பாதியிலேயே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்ப, வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் கட்சியினரிடம் இருந்து அப்போது கடும் கண்டனங்கள் எழுந்தன. ஒருவழியாக உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. ஒரு கட்ட அகழாய்வு என்பது ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 10 மாதங்களாவது நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆறே மாதத்தில் திடீரென்று ஆய்வுப்பணிகள் முடிந்ததாகக்கூறி...
திரை இசையில் வள்ளுவம்: படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா…! #தொடர்

திரை இசையில் வள்ளுவம்: படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா…! #தொடர்

இலக்கியம், சினிமா, முக்கிய செய்திகள்
பொய்யாமொழிப் புலவன் வள்ளுவன் அறம், பொருளைவிட காமத்துப்பாலில்தான் அதீத கற்பனை ஊற்றெடுக்க பாடல்களை புனைந்துள்ளான். இதை நாம் கடந்த தொடரிலேயே சொல்லி இருக்கிறோம். சினிமாக்காரர்கள் மொழியில் சொல்வதென்றால் வள்ளுவர், 'கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காமத்துப்பாலில்தான் இறக்கி வெச்சிருக்காரு,' போலருக்கு. காதலை நோய் என்ற வள்ளுவன்தான், பெண்ணை மான் என்றான்; மயில் என்றான்; தெய்வம் என்றான்; எமன் என்றும் சொன்னான். ஓரிடத்தில் அவன், 'பெண்களை புரிந்து கொள்ள முடியாத தீ' என்றும் கூறுகிறான். உங்களிடம் ஒரு கேள்வி. நெருப்பின் அருகில் சென்றால் என்ன நடக்கும்?. உடல் சூடாகும் அல்லவா!. அதேநேரம் நெருப்பை விட்டு சற்று தொலைவு விலகிச் சென்றால் உடல் குளிரும் அல்லவா? இதுதான் இயல்பு. ஆனால், இயற்கைக்கு முரணான இயல்புடன் கூடியவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என வள்ளுவன் ஆச்சர்யம் மேலிட சொல்கிறான். உலகளந்த வள்ளுவனுக்கு, ...