Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: two factions

திரிபுரா: பத்திரிகையாளர் படுகொலை; தொடரும் துயரம்

திரிபுரா: பத்திரிகையாளர் படுகொலை; தொடரும் துயரம்

இந்தியா, முக்கிய செய்திகள்
திரிபுரா மாநிலத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். திரிபுரா மாநிலம் மேற்கு மாவட்டம் கோவாய் பகுதியில் இன்று (செப். 20) இரு பிரிவினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. பின்னர், கலவரமாக வெடித்தது. இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஒரு பத்திரிகையாளரை, மர்ம கும்பல் படுகொலை செய்துள்ளது. எனினும், கொலையுண்ட பத்திரிகையாளர் யார் என்ற முழு தகவலும் வெளியாகவில்லை. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. தொடரும் துயரம்: கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த லங்கேஷ் பத்ரிகே என்ற பத்திரிகையின் முதன்மை செய்தி ஆசிரியரான கவுரி லங்கேஷ், கடந்த 5ம் தேதி அவருடைய வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில நாள்களுக்குள், பீஹார் மாந