Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: sewage water

சேலம் மாநகராட்சிக்கு அபராதம் விதிப்போம்! அருண் நகர் மக்கள் நூதன முழக்கம்!!

சேலம் மாநகராட்சிக்கு அபராதம் விதிப்போம்! அருண் நகர் மக்கள் நூதன முழக்கம்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமான சேலம் மாநகராட்சிக்கு பொதுமக்களே அபராதம் விதிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று அருண் நகர், ராஜராஜன் நகர் பொதுமக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நடப்பு ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வந்தாலும் வந்தது, சேலம் மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகள் எப்படி எல்லாம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. என்னதான் சேலம் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக நிலை உயர்த்தப்பட்டாலும், நகர் ஊரமைப்பு பொறியியலில் அரை நூற்றாண்டு காலம் பின்தங்கி இருக்கிறது எனலாம்.   சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத சாலைகள்; கால்வாய்கள், ஒழிக்கவே முடியாத கொசுத்தொல்லை, அவற்றால் உண்டாகும் காய்ச்சல் என அவலத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கிறது, மாம்பழ மாநகராட்சி. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அடிக்கடி பெய்து வரு
சேலம் மாநகராட்சி: பாதாள சாக்கடை திட்டமா? பகல் கொள்ளை திட்டமா? விரயமாகிறதா 216 கோடி?

சேலம் மாநகராட்சி: பாதாள சாக்கடை திட்டமா? பகல் கொள்ளை திட்டமா? விரயமாகிறதா 216 கோடி?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், சரிவர திட்டமிடப்படாமல் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தால் இதற்காக ஒதுக்கப்பட்ட மக்களின் வரிப்பணம் 216 கோடி ரூபாய் விழலுக்கு இரைத்த நீராகி விட்டதோ என்ற அய்யம் மக்களிடம் எழுந்துள்ளது. நகராட்சியாக இருந்த சேலம், கடந்த 1994ம் ஆண்டு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. சரிவர திட்டமிடப்படாத ஊரமைப்பு என்பதால், இன்றும் திறந்தவெளி சாக்கடை கால்வாய்களே நீக்கமற நிறைந்துள்ளன. இந்த நிலையில்தான், கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியின்போது, சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.   இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 23.2.2006ம் தேதி, இத்திட்டத்திற்கான அரசாணை (எண்: 63 (டி) வெளியிட்டது. முதல்கட்டமாக 149.39 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் அரசு மானியம் 10 கோடி ரூபாய்; சே