![பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!; திடீர் வீழ்ச்சி ஏன்?](https://puthiyaagarathi.com/wp-content/uploads/2021/02/indices.png)
பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!; திடீர் வீழ்ச்சி ஏன்?
வர்த்தகத்தின் முதல் நாளான
இன்று (பிப். 22) இந்திய
பங்குச்சந்தைகள் சரிவுடன்
வணிகத்தைத் தொடங்கின.
பகல் 1.50 மணி நிலவரப்படி,
சென்செக்ஸ் அதிகபட்சமாக
1015 புள்ளிகள் (2.61 சதவீதம்) சரிந்து
49971 புள்ளிகளும், நிப்டி 251
புள்ளிகள் சரிந்து (1.61 சதவீதம்)
14741 புள்ளிகளிலும்
வர்த்தகம் ஆகின.
நிப்டி காலையில் 14999
புள்ளிகளுடன் வர்த்தகத்தை
தொடங்கியது. அதிகபட்சமாக
15010 புள்ளிகளை தொட்டது.
குறைந்தபட்சமாக 14740 புள்ளிகள்
வரை சரிந்தது. காலையில் 50910
புள்ளிகளுடன் வர்த்தகத்தை
தொடங்கிய சென்செக்ஸ்,
அதிகபட்சமாக 50986 புள்ளிகள்
வரையிலும், குறைந்தபட்சமாக
49860 புள்ளிகள் வரையிலும்
சென்றன.
மருந்து தயாரிப்பு துறைகள்,
நிதிச்சேவை துறைகளின் பங்குகள்
பெருமளவு வீழ்ச்சி கண்டதே
சந்தையின் சரிவுக்கு காரணமாக
சொல்லப்படுகிறது. இரண்டு
சந்தைகளும் முதல் செஷனிலேயே
கிட்டத்தட்ட 1...