மசாஜ் அழகி கொலை: பலிகடாவான 4 போலீசார்! யாரை காப்பாற்ற நாடகம் ஆடுகிறது சேலம் காவல்துறை?
சேலத்தில் கொல்லப்பட்ட மசாஜ் அழகியுடன் தொடர்பில் இருந்ததாக மூன்று எஸ்ஐக்கள் உள்ளிட்ட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக உளவுப்பிரிவு உதவி கமிஷனர், 2 பெண் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் மாநகர காவல்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் குமாரசாமிப்பட்டியைச்
சேர்ந்தவர் நடேசன். அதிமுக பிரமுகர்.
இவருக்குச் சொந்தமான அபார்ட்மெண்டில்
வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்
தேஜ் மண்டல். 26 வயதான இவர்,
சேலம் சங்கர் நகர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில்
'தேஜாஸ் ஸ்பா' என்ற பெயரில்
மசாஜ் செண்டர்களை நடத்தி வந்தார்.
தான் தங்கியிருந்த அடுக்குமாடி
குடியிருப்பில், பக்கத்திலேயே இன்னொரு
அறை எடுத்து, அதில் தன்னிடம்
வேலை செய்து வந்த ரிஷி, நிஷி, ஷீலா ஆகிய
3 பெண்களையும், லப்லு என்ற ஆணையும்
தங்க வைத்திருந்தார். தேஜ் மண்டல் உள்பட
இவர்கள்