Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Rohit

காதல் மனைவிக்கு பறக்கும் முத்தம் பார்சல்…!;  இரட்டை சத நாயகன் ரோஹித் லவ்ஸ்…!!

காதல் மனைவிக்கு பறக்கும் முத்தம் பார்சல்…!; இரட்டை சத நாயகன் ரோஹித் லவ்ஸ்…!!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, மைதானத்தில் இருந்தவாறே கேலரியில் அமர்ந்திருந்த தன் காதல் மனைவிக்கு பறக்கும் முத்தத்தை அனுப்பியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி, மொஹாலியில் இன்று (டிசம்பர் 13, 2017) நடந்தது. முதலில் மட்டையை சுழற்றிய இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கை அணியை தெறிக்கவிட்டனர். இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி, 392 ரன்களை குவித்ததுடன், இலங்கை அணியையும் வீழ்த்தியது. ஒருமுனையில் நங்கூரம் பாய்ச்சி நின்ற தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, அரை சதத்தை சதமாகவும், சதம் எட்டிவிட்டால் அதை இரட்டை சதம் அல்லது பெரிய அளவிலான ரன்களாகவும் மாற
மொஹாலி கிரிக்கெட்: இலங்கையை நொறுக்கியது இந்தியா!; ரோஹித் இரட்டை சதம்!!

மொஹாலி கிரிக்கெட்: இலங்கையை நொறுக்கியது இந்தியா!; ரோஹித் இரட்டை சதம்!!

தமிழ்நாடு
மொஹாலியில் நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, ஒருநாள் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தரம்சாலாவில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணியை இலங்கை வெறும் 112 ரன்களில் வாரிச்சுருட்டி, அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று (டிசம்பர் 13, 2017) நடந்தது. முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கும், கேப்டனாக தன்னை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியிலும் ரோஹித் ஷர்மா இருந்தார். இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் ச
முதல் ட்வென்டி-20; நியூஸிலாந்தை புரட்டி எடுத்தது இந்தியா!

முதல் ட்வென்டி-20; நியூஸிலாந்தை புரட்டி எடுத்தது இந்தியா!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ட்வென்டி - 20 கிரிக்கெட் போட்டியில், அந்த அணியை இந்தியா துவம்சம் செய்து, 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று (நவம்பர் 1, 2017) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி துவங்கியது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ரா இன்றைய போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதை கவுரவிக்கும் விதமாக அவருக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் இளம் வீரரான ஸ்ரேயாஸ் அய்யர், முதன்முதலாக சர்வதேச ட்வென்டி - 20 கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் இறங்கினார். தவான் - ரோஹித் அபாரம்: டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தனது அணி முதலில் பந்து வீச அழைத்தார். போல்ட், டிம் சவுத்
கிரிக்கெட்: இலங்கை மீண்டும் ‘வாஷ் – அவுட்’

கிரிக்கெட்: இலங்கை மீண்டும் ‘வாஷ் – அவுட்’

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் இலங்கை அணி 5 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோற்று வாஷ் - அவுட் ஆனது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுடன் 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரு டி-20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி, 3&0 கணக்கில் வென்று இருந்தது. நான்காவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று (செப். 3) நடந்தது. இந்தப் போட்டியிலாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணி வீரர்கள், கடந்த இரு நாட்களாக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். டாஸ் ஜெயித்த இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஹர்திக் பா