
ரயில்டெல் ஐபிஓ நாளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது!
பொதுத்துறை நிறுவனமான
ரயில்டெல் கார்ப்பரேஷன் ஐபிஓ
வெளியீடு வெற்றியடைந்துள்ளது.
பொதுப்பங்குகள் வேண்டி
சில்லரை முதலீட்டாளர்கள்
தரப்பில் 42.39 மடங்கு
விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
வெள்ளிக்கிழமை (பிப். 26)
இந்நிறுவனப் பங்குகள்
இந்தியப் பங்குச்சந்தைகளில்
பட்டியலிடப்படுகிறது.
ரயில்வே துறையின்
ஓர் அங்கமான ரயில்டெல்
கார்ப்பரேஷன் ஆப் இந்தியா
லிமிடெட், ஒரு பொதுத்துறை
நிறுவனம் ஆகும். இந்நிறுவனம்,
ஒரு தகவல் மற்றும் தகவல்
தொழில்நுட்ப உள்கட்டமைப்பு
வழங்குநர் ஆகும்.
இத்துறையில் நாட்டின்
முன்னணி நிறுவனமாகவும்
விளங்குகிறது.
இந்நிறுவனம்,
819.24 கோடி ரூபாய் நிதி
திரட்டும் நோக்கில் முதன்முதலாக
பிப். 16ம் தேதி ஐபிஓ எனப்படும்
பொதுப்பங்கு வெளியீட்டில்
களமிறங்கியது. மினிமம்
லாட் சைஸ் 155 பங்குகள் ஆகும்.
ஒரு பங்கின் விலை 94 ரூபாய்
ஆக நிர்ணயிக்கப்பட்டது.
 ...