கேள்விகள் எழுப்பலாமா அல்லது வேண்டாமா? இதுதான் என் கேள்வி?
ஏன்? எதற்கு? எப்படி? என்று யாரையும், எதையும், எப்போதும் கேள்வி எழுப்பச் சொல்லி பழக்கிவிட்டுப் போயிருக்கிறார் தந்தை பெரியார். அவரின் பெயரில் அமைந்த பல்கலைக்கழகமோ, கேள்வி எழுப்பியதாலேயே ஓர் உதவி பேராசிரியரை சிறையில் தள்ள துடித்துக் கொண்டிருப்பதுதான் ஆகப்பெரும் துயரம்.
எல்லாமே தலைகீழ் விகிதமாக
மாறிப் போயிருந்த அல்லது அதுவே
ஒழுக்கமாகிவிட்ட ஒரு பல்கலையில்,
ஓர் இளைஞன் நுழைந்தான்.
தான் கற்றுவந்த ஆகச்சிறந்த நெறிகளை
இங்கும் பரவச் செய்ய வேண்டும் என்று
நினைத்ததுதான் அந்த இளைஞன்
செய்த ஒரே குற்றம்.
ஒரு மூத்த பேராசிரியர்
வகுப்பிற்குள் நுழைகிறார்.
ஏதோ கேள்வி கேட்கிறார்.
ஒரு மாணவி, இருக்கையில் அமர்ந்தபடியே
பதில் அளிக்கிறாள். அதற்கு அந்த பேராசிரியரோ,
'ஏன்மா... இதுதான் நீ ஆசிரியருக்கு
தரும் மரியாதையா? உட்கார்ந்துட்டே
பதில் சொல்ற?,' என அதிகாரமாய் கேட்கிறார்.
அதற்கு அந்த மாணவி