Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: poetry

பச்சையப்பாத்திரம் – கவிதை நூல் விமர்சனம்!

பச்சையப்பாத்திரம் – கவிதை நூல் விமர்சனம்!

இலக்கியம், சேலம், புத்தகம், முக்கிய செய்திகள்
(பூவனம்)   சேலம் மோகன் நகரைச் சேர்ந்த தோழர் சுகபாலாவின் இரண்டாவது படைப்பு, 'பச்சையப்பாத்திரம்'. அள்ள அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரம் பற்றியே முழுமையாக அறிந்திடாத நம்மவர்க்கு, பச்சையப்பாத்திரம் சொல்லை உருவாக்கி தமிழ்மொழிக்கு கொடையளித்திருக்கிறார். இந்தச் சொல்லை உருவாக்கியதற்காகவே அவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. இந்த நூலின் பாடுபொருள் மரம்தான். அதனூடாக காதல், மனிதர்களின் மனப்பிறழ்வு, உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டல், மானுட குலத்திற்கே உரிய முரண்கள் என பல கிளைகளாக கவிதைகள் விரிகின்றன. தோழரே மரமாகிறார். சிறு புல்லாகிறார். குழந்தையாகிறார். அவரே, புத்தனாகவும் மாற முயற்சிக்கிறார். வண்ணத்துப்பூச்சியை பிடித்து, பறக்கவிட்ட பிறகும் அதன் வண்ணங்கள் நம் விரல்களில் ஒட்டிக்கொண்டிருக்குமே அப்படித்தான், பச்சையப்பாத்திரம் நூலை வாசித்த பின்னரும் அதன் தாக்கம் மனதினுள் அப்பிக்கொண்டு வி
பூவனம்: விடியல் உனக்காக! (கவிதை)

பூவனம்: விடியல் உனக்காக! (கவிதை)

இலக்கியம், புத்தகம்
ஸ்ரீலங்காவில் இலக்கிய படைப்பாளிகள் அதிகளவில் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதிலும், இஸ்லாமிய சமூகத்தில் நிறைய பேர் எழுத்தாற்றலுடன் இருப்பதையும் அறிவேன். அவர்களுள் புதிய வரவாக, கவிதை உலகில் நாலு கால் பாய்ச்சலில் களம் இறங்கி இருக்கிறார், நுஸ்கி இக்பால். காத்தான்குடியைச் சேர்ந்தவர். அவருடைய முதல் படைப்பு, 'விடியல் உனக்காக...' கவிதை நூல். இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். கட்டடப் பொறியாளரான நுஸ்கி இக்பால், அடுக்கு மாடி கட்டடத்தின் உப்பரிகையில் நின்று உலகத்தைப் பார்க்காமல், சாமானிய மக்களோடு சாமானியராக பயணப்பட்டே, கவிதைகளை வடித்திருக்கிறார் என்பதை இந்நூலில் உள்ள பல கவிதைகள் உணர்த்துகின்றன. கல்லூரிக்கால நண்பன், பேருந்துப்பயண அனுபவம், நடைபாதைவாசிகளின் துயரம், அகதிகளின் ஓலம், ஒருதலைக்காதல், மதுப்பழக்கத்தின் கொடூரம், உழைக்கும் வர்க்கம் என பாடுபொருள்களாகக் கொண்ட கரு ஒவ்வொன
பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

இலக்கியம், திண்டுக்கல், புத்தகம், மதுரை
நீரில் ஆடும் நிலா...!  திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கவிஞர் பெ.அறிவுடைநம்பி எழுதி இருக்கிறார். தமிழக அரசின் கதர் வாரியத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன. கவிஞர் மு.மேத்தாவின் முன்னுரையுடன், திண்டுக்கல் அய்யனார் பதிப்பகம் நூலை வெளியிட்டு உள்ளது. நூலில் இருந்து... கீழே விழுவது புவி ஈர்ப்பு மேலே எழுவது விலைவாசி அது நியூட்டன் விதி இது அரசியல் சதி என நையாண்டி செய்கிறார். ஒவ்வொருமுறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும்போதும் நாட்டில் விலைவாசியும் உயர்ந்து விடுகிறது என்பதை அனுபவ ரீதியாக அறிந்தவர்தானே நம் கவிஞர். மற்றொரு இடத்தில், தீச்சட்டி எடுப்போம் பேருந்தையும் உடைப்போம் இது நேர்த்திக்கடன்! என்று சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகளை பகடி செய்கிறார். இதைவிட கவிஞரின் இன்னொரு நுட்பமான பதிவு, ந