ஊரடங்கினால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகள்; 75 வயது முதியவர் முதல் பள்ளி மாணவர் வரை 12 பேர் கும்பல் வெறியாட்டம்!
நாமக்கல் அருகே,
ஓலை குடிசையில்
வசித்து வரும் இரண்டு
சிறுமிகளை 75 வயது
முதியவர் முதல் பிளஸ்-2
மாணவர் வரை 11 பேர் கும்பல்
கடந்த ஆறு மாதங்களாக
பாலியல் பலாத்காரம் செய்து
வந்துள்ள சம்பவம், முட்டை
மாவட்டத்தை உலுக்கி
எடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம் அருகே உள்ள
ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்
செல்வாம்பாள்.
இவருடைய கணவர்,
மூட்டைத் தூக்கும்
தொழிலாளி.
இரு ஆண்டுகளுக்கு முன்பு
மாரடைப்பால் இறந்து விட்டார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த
செல்வாம்பாளுக்கு
மூன்று மகள்கள்;
இரண்டு மகன்கள்.
மூத்த மகள் திருமணம் ஆகி,
வெளியூரில் குடும்பத்துடன்
வசிக்கிறார். மற்ற இரு
மகள்களில் ஒருவர் ரேகா (13);
இன்னொரு மகள் ரஞ்சனி (12).
(தாயார் மற்றும் மகள்களின்
பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன).
செல்வாம்பாள்,
மல்லூரில் உள்ள தனியார்
சேகோ ஆலையில் கூலி
வேலை செய்கிறார்.
தினசரி