Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Kodungaiyur

கொடுங்கையூர் சம்பவம்: கமல் கடும் கண்டனம்

கொடுங்கையூர் சம்பவம்: கமல் கடும் கண்டனம்

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரில் மின் இணைப்புப் பெட்டியில் இருந்து அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் இன்று (நவம்பர் 1, 2017) மதியம் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர். மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காரணமாகவே இந்த துயரம் நிகழ்வு நடந்துள்ளது. பணியில் அலட்சியமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மூன்று பேர் உள்பட மொத்தம் 8 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இந்நிலையில் கொடுங்கையூர் நிகழ்வு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தனது பதிவில், "கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவன செய்ய வேணடும்" என்று
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுமிகள் பலி: அலட்சியத்தால் இரையான அவலம்!

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுமிகள் பலி: அலட்சியத்தால் இரையான அவலம்!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இரண்டு சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாயினர். சிறுமிகள் பலி: சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரைச் சேர்ந்த பாவனா (11), யுவஸ்ரீ (10) ஆகியோர் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர். வடகிழக்கு பருவமழை காரணாக அப்பகுதியில் பள்ளிக்கு இன்று (நவம்பர் 1, 2017) விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் இரண்டு சிறுமிகளும் இன்று மதியம் வீடு அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். தெருவோரம் இருந்த மின்பெட்டியில் (Electricity Piller Box) இருந்து ஒரு மின்சார கம்பி அறுந்து மண் தரையில் நீண்டு கிடந்தது. அதை அறியாமல் மதித்த சிறுமிகள், மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு சிறுமி மின்சாரம் பாய்ந்ததில் பலத்த கா