Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Indra

இந்திராவின் காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவும் காணொலியின் பின்னணி என்ன?

இந்திராவின் காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவும் காணொலியின் பின்னணி என்ன?

அரசியல், தமிழ்நாடு
தேர்தல் காலம் என்றாலே ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் பரஸ்பரம் புகார் புஸ்தகம் வாசிப்பது என்பது தேர்தல் ஜனநாயகத்தில் சகஜம்தான். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, இப்போது சமூக ஊடகங்களில் ஒரு காணொலி காட்சி திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.   'அம்மையார் இந்திரா காலில் விழும் கருணாநிதி. என்ன உங்க சுயமரியாதை?' என்று தலைப்பிட்டு ஒரு காணொலி பரவி வருகிறது. அந்தக் காணொலியில், வயதான ஒரு பெண்மணிக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மாலை அணிவிக்கிறார். பிறகு அந்தப் பெண்மணியின் காலைத் தொட்டு வணங்குகிறார். அவர் அருகில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் மற்றும் திமுக முன்னணியினர் இருக்கின்றனர். காணொலி, மொத்தம் 7 வினாடிகள் ஓடுகிறது. அந்தப் பதிவில் இருக்கும் பெண்மணி யாரென்றே தெளிவாகத் தெரியாதபோது, அவர் இந்திராகாந்திதான் என்ற முன்முடிவுடன் காணொலி பகிரப்பட்டு வருவது அபத்த
சேலம்: இந்திரா எனும் கிளாரா ஸெட்கின்!;  ”கள்ளச்சாராயத்தை ஒழித்த காரிகை”

சேலம்: இந்திரா எனும் கிளாரா ஸெட்கின்!; ”கள்ளச்சாராயத்தை ஒழித்த காரிகை”

சிறப்பு கட்டுரைகள், சேலம், மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின சிறப்புக் கட்டுரை-   இன்று உலகெங்கும் முதலாளிய வண்ணங்களுடன் பொழுதுபோக்கு சடங்காக நடத்தப்பட்டும் வரும் மகளிர் தினம் என்பது, உண்மையில் குருதியில் மலர்ந்தது. உழைக்கும் பெண்களை சுரண்டிப் பிழைத்த கூட்டத்தினரிடம் இருந்து பெண்களுக்கான உரிமையை மீட்டெடுத்த சர்வதேச பொதுவுடைமை இயக்கத் தலைவரான கிளாரா ஸெட்கின் போன்றவர்தான் சேலம் இந்திராணி (53). சேலத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மின்னாம்பள்ளி கிராமம். பல்வேறு சமூகத்தினரையும் உள்ளடக்கிய ஊர்தான். எனினும், பட்டியல் இனத்தவர் இங்கு அதிகம். 13 ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்னாம்பள்ளி, கள்ளச்சாராய விற்பனை மையமாக இருந்தது. அந்த ஊரில் முக்கிய தலைகள் பத்து பேர். கள்ளச்சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்பதுதான் அவர்களின் முழுநேரத் தொழில். மின்னாம்பள்ளியில் கூலித்தொழிலாளர்களை போதையில் வைத்திருந்த 'பெருமை' அவர்களுக்கு