Saturday, January 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Commissioner

சேலம்: வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர்கள் கோஷ்டி மோதல்; தொங்கலில் விட்ட அமைச்சர்கள்!

சேலம்: வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர்கள் கோஷ்டி மோதல்; தொங்கலில் விட்ட அமைச்சர்கள்!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் மார்க்கெட் இரண்டாக உடைந்ததோடு, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது. வ.உ.சி. பூ மார்க்கெட் சேலம் மாநகர மையப்பகுதியில் 100 ஆண்டுகள்பழமையான வ.உ.சி. பூ மார்க்கெட்இயங்கி வருகிறது.பழைய கட்டடத்தில்இயங்கி வந்த இந்த வளாகம்,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்,புதிதாக கட்டுவதற்காககடந்த 2020ம் ஆண்டு இடிக்கப்பட்டது.14.97 கோடி ரூபாய் பட்ஜெட்டில்நான்கு தளங்களுடன் புதிதாகவ.உ.சி. பூ மார்க்கெட் வளாகம்கட்டி முடிக்கப்பட்டது.கடந்த 2023 ஜூன் 11ம் தேதி,தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.இதில் மொத்தம் 240 கடைகள்கட்டப்பட்டு உள்ளன. சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில்உள்ள வ.உ.சி. மார்க்கெட்டிற்குவரும் வியாபாரிகள், விவசாயிகளிடம்சுங்கம் மற்றும் கடை வாடகைவசூலிக்கும் உரிமத்திற்கானபொது ஏலம் கடந்த 2023 நவம்பர்மாதம் நடத்தப்பட்டது.சே...
இந்த மாசமாவது சம்பளம் கிடைக்குமா? சேலம் மாநகராட்சி ஊழியர்கள் பரிதவிப்பு!

இந்த மாசமாவது சம்பளம் கிடைக்குமா? சேலம் மாநகராட்சி ஊழியர்கள் பரிதவிப்பு!

சேலம், முக்கிய செய்திகள்
ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து முக்கிய விழாக்கள் வரிசைகட்டி நிற்கும் வேளையில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் முடிந்த பின்னரும்கூட இரு மாதங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்கிறார்கள், சேலம் மாநகராட்சி ஊழியர்கள்.   சேலம் மாநகராட்சியில் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள், சுகாதாரம், துப்புரவு ஊழியர்கள் என ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டல அலுவலகங்கள் மூலம் நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது. மைய அலுவலகம் மூலம் நான்கு மண்டலங்களின் பணிகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அலுவலக பராமரிப்பு முதல் ஊழியர்களின் சம்பளம் வரையிலான செலவினங்களுக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம், வரி வருவாயையே பெரிதும் நம்பி இருக்கிறது. அதாவது, மாநகரில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கட்டடங்களுக்கு விதிக்கப்படும்...
டெங்கு அலட்சியம்:  சேலம் சண்முகா மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்

டெங்கு அலட்சியம்: சேலம் சண்முகா மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, டெங்கு வைரஸை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணிகளில் மு டுக்கிவிடப்பட்டு உள்ளனர். சேலம் மாவட்டத்திலும் ஆட்சியர் ரோகிணி தலைமையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் நடந்து வருகிறது. சேலம் மாநகராட்சிப் பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள், உரல், வீசியெறியப்படும் பிளாஸ்டிக் குவளைகள் போன்றவைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொசு உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீரை...
ஊழல் தாண்டவமாடும்  உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

ஊழல் தாண்டவமாடும் உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வசூல் வேட்டையில் திளைக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளால், மக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எந்த அளவுக்கு ஒரு சட்டம் கடுமையாக நிறுவப்படுகிறதோ அதே அளவுக்கு அதில் ஊழலும் மலிந்து கிடப்பது ஆகப்பெரிய முரண். அப்படி லஞ்சம், ஊழலில் அதிகாரிகள் திளைக்கும் துறையாக உணவுப் பாதுகாப்புத்துறை மாறிவிட்டது. ஆதாரத்துடன் இங்கே அம்பலப்படுத்துகிறோம். அதற்குமுன், இந்த சட்டத்தைப் பற்றிய சில முன்தகவல்கள்... நுகர்வோருக்கு தரமான உணவுப்பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதுதான்,உணவுப்பாதுகாப்புத் துறையின் மைய நோக்கம். குடிநீர் முதல் உப்பு வரை உட்கொள்ளத்தக்க எந்த ஒரு பொருளும் இதனுள் அடங்கும். இதற்காகவே உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம்-2006 இயற்றப்பட்டு, நாடு முழுவதும் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. சாலையோர தள்ளுவண்டிக் கடைக்...