கோகுல்ராஜ் கொலை வழக்கு: குற்றவாளியை தவறாக அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி!#Gokulraj #Day16
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில்,
குற்றவாளிக்கூண்டில் இருந்த முக்கிய எதிரியை
தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் தவறாக
அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சியால்
சிபிசிஐடி போலீசார் கடும்
அதிருப்தி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதியன்று ஆணவக்கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் அவருடைய சடலம், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருண், சங்கர், சதீஸ் என்கிற சதீஸ்குமார், குமார் என்கிற சிவக்குமார் உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆணவக்கொலை போன்ற பரபரப்பான வழக்குகளை ஆறு மாதத்தி