இதற்காகத்தான் சேலம் மாநகராட்சிக்கு விருது! சும்மா ஒண்ணும் தரல!!
சிறந்த மாநகராட்சிக்கான
விருதுக்கு இந்த முறை
சேலம் மாநகராட்சி தேர்வு
செய்யப்பட்டு இருப்பது
நமக்கெல்லாம் பெருமைதான்.
ஆனால், அதற்கான தகுதிகள்
இருக்கின்றனவா என்பதை
கூர்ந்தாய்வு செய்தால்,
கேள்விகளே மிஞ்சும்.
எங்கு பார்த்தாலும் சுகாதாரச் சீர்கேடு, பொதுக்கழிப்பறை இருந்தால் தண்ணீர் இருக்காது, தூய்மை இந்தியா திட்டத்தைப் போற்றுவோம்... ஆனால் திறந்தவெளி மலம் கழித்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாட்டோம். திடக்கழிவு மேலாண்மைப் பற்றி பேசுவோம்... ஆனால், செட்டிச்சாவடி குப்பைக்கிடங்கை மூடுவோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இப்படித்தான் இருக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம். இதற்குதான், அவார்டெல்லாம் கொடுக்கிறார்கள்.
ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகவெல்லாம் குறை சொல்லவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் கணக்கில், நாம் மணியனூரில் உள்ள ஆட்டிறைச்சிக் கூடத்தை நேரில் பார்வையிட்டோ