Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: arrest

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓசூரில் கைது!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓசூரில் கைது!

கிருஷ்ணகிரி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின்பேரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஓசூரில் புதன்கிழமை (ஜன. 5) கைது செய்யப்பட்டார்.   கடந்த அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. தனது பதவிக்காலத்தில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வசூலித்துக் கொண்டு 3.10 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார்கள் கிளம்பின.   இது தொடர்பான இரு வேறு புகார்களின் பேரில், ராஜேந்திரபாலாஜி மற்றும் அவருடைய உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய நான்கு பேர் மீதும் விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.   இதையடுத்து ராஜேந்திரபாலாஜி, முன்ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவ
5 லட்சம் ரூபாய்க்கு அரசு வேலை!; ஆசை வலை விரித்து மோசடி செய்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் கைது!!

5 லட்சம் ரூபாய்க்கு அரசு வேலை!; ஆசை வலை விரித்து மோசடி செய்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் கைது!!

குற்றம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ் வளர்ச்சித்துறையில், வேலை வாங்கிக் கொடுப்பதாக ஆசை வலை விரித்து, காவலரின் மனைவியிடமே 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த அரசுப்பள்ளி பெண் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.   சென்னை புது வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரேணியல். காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அனிதா கார்மெல் (43). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில் மூலம் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.   அப்போது, அதே ரயிலில் பயணம் செய்த திருப்பாச்சூரைச் சேர்ந்த அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர் மேகலா (59) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது மேகலா, ''அரசுத் துறைகளில் பல உயர் அதிகாரிகளுடன் எனக்கு நெருக்கமான நட்பு உள்ளது. யாருக்காவது அரசு வேலை வேண்டுமானால் சொல்லுங்கள். இப்போது கூட தமிழ் வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடம் இருக்கிறது. யாராவது வ
சேலம்: லஞ்சம் வசூலித்த வீட்டுவசதி வாரிய எழுத்தர் கைது

சேலம்: லஞ்சம் வசூலித்த வீட்டுவசதி வாரிய எழுத்தர் கைது

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அய்யந்திருமாளிகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரான துரைசாமி, கடந்த 1995ம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கியிருந்தார்.   இதற்கான தவணைத்தொகை முழுவதையும் செலுத்திவிட்ட துரைசாமி வீட்டுப் பத்திரம் வழங்குமாறு விண்ணப்பித்து இருந்தார். அவருடைய மனுவை பரிசீலித்த வீட்டுவசதி வாரிய அலுவலக எழுத்தர் தனசேகரன், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக பத்திரம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனக்கூறினார். தவணை எல்லாம் முறையாக செலுத்திய பின்னரும் பத்திரத்தை வழங்க லஞ்சம் கேட்டதால் மனம் உடைந்த துரைசாமி இதுகுறித்து சேலம் மண்டல லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த அலோசனையின்பேரில் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் இன்று பகல் 12 மணியளவில் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தி
பிரபல ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் மீது குண்டாஸ் பாய்ந்தது!

பிரபல ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் மீது குண்டாஸ் பாய்ந்தது!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தொடர்ந்து சில ஆண்டுகளாக போலீசுக்கு போக்குக் காட்டி வந்த பிரபல ரேஷன் அரிசி கடத்தல் மன்னனை, சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் இன்று (ஆகஸ்ட் 13, 2018) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.   சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 17.7.2018ம் தேதி, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு ஸ்வராஜ் மஸ்தா வேனையும், காரையும் தடுத்து சோதனையிட்டனர். வேனில் இருந்து 25 மூட்டைகளில் 1250 கிலோ ரேஷன் அரிசியும், காருக்குள் 5 மூட்டைகளில் 250 கிலோ ரேஷன் அரிசியும் இருப்பது தெரிய வந்தது. போலீசாரை கண்டதும் வேன் டிரைவர் கீழே எகிறி குதித்து தப்பி ஓடிவிட்டார். காரில் இருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவர் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த சித்திரை பாண்டியன் மகன் டேவிட் (43
வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 5000 லஞ்சம்; கொளத்தூர் இன்ஸ்பெக்டர் கைது!

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 5000 லஞ்சம்; கொளத்தூர் இன்ஸ்பெக்டர் கைது!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  மேட்டூர் அருகே, சேவல் சண்டையை வேடிக்கை பார்த்தவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று (ஆகஸ்ட் 10, 2018) கைது செய்தனர்.   சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சின்ன தண்டா பகுதியில் ஆகஸ்ட் 3ம் தேதியன்று, ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சேவல்கட்டு பந்தயம் நடந்தது. காவல்துறை அனுமதியின்றி இந்த பந்தயம் நடத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர்.   காவல்துறையினர் வருவதைப் பார்த்ததும் சேவல்கட்டு நடத்திய போட்டியாளர்கள், பார்வையாளர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களைக்கூட போட்டுவிட்டு தெறித்து ஓடினர். காவல்துறையினர் அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களை மீட்டு, கொளத்தூர் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். வாகனத்தைக் கேட்டு சின்ன தண்டாவைச் சேர்ந்த செந்தில் என
சேலத்தில் ‘மினி எமர்ஜென்ஸி!’  விவசாயிகளை நெருங்கினாலே கைது…  சீமான் உள்பட 22 பேருக்கு காப்பு!!

சேலத்தில் ‘மினி எமர்ஜென்ஸி!’ விவசாயிகளை நெருங்கினாலே கைது… சீமான் உள்பட 22 பேருக்கு காப்பு!!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில், எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் கருத்து கேட்கவோ, ஆறுதல் சொல்லவோகூட செல்லக்கூடாது என காவல்துறை மூலம் தமிழக அரசு 'மினி எமர்ஜென்ஸி' உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையும் மீறி விவசாயிகளை சந்திக்கச் சென்ற சீமான் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட 22 பேரை காவல்துறையினர் இன்று (ஜூலை 18, 2018) கைது செய்து, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துள்ளனர்.   சேலம் - சென்னை இடையிலான பசுமைவழி விரைவுச்சாலை எனப்படும் எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு சேலம் மாவட்ட விவசாயிகள், பொதுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்படும் மக்களிடம் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு வருகின்றன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி நிர்வாகிகளுடன் இன்று காலை, சேலம் அருகே உள்ள பாரப்பட்டி கூமாங்காடு கிராமத்தில
எடப்பாடி பழனிசாமியின் துல்லிய தாக்குதல்! ரகசியமாக அரங்கேற்றப்பட்ட மன்சூர் அலிகான் கைது படலம்!!

எடப்பாடி பழனிசாமியின் துல்லிய தாக்குதல்! ரகசியமாக அரங்கேற்றப்பட்ட மன்சூர் அலிகான் கைது படலம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 17) காலை 7 மணியளவில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானை, அவருடைய வீட்டில் வைத்து சேலம் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் - சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள பசுமை வழிச்சாலைத் திட்டம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.   சேலத்தைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் அழைப்பின்பேரில், கடந்த மே மாதம் 3ம் தேதி, மன்சூர் அலிகான் சேலம் வந்திருந்தார்.   தும்பிப்பாடி கிராமத்திற்குச் செல்றபோது, ''எட்டு வழிச்சாலைக்காக விளை நிலத்தை யார் தொட்டாலும் எட்டு பேரையாவது வெட்டிவிட்டு ஜெயிலுக்குப் போகவும் தயாராக இருக்கிறேன்,'' என்று ஆவேசமாக பேசினார். இந்த ஆவேசப் பேச்சுதான், அவரை கைது செய்வதற்கான காரணம் என்கிறார்கள் காவல்துறையினர்.
எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் வளர்மதி கைது!

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் வளர்மதி கைது!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் அளக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதியை (24) காவல்துறையினர் இன்று (ஜூன் 19, 2018) கைது செய்தனர். சேலம் - சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எட்டு வழிச்சாலையாக இந்த வழித்தடம் அமைகிறது. இதற்காக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.   இத்திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், எக்காரணத்திற்காகவும் ஒரு பிடி விளை நிலத்தைக்கூட விட்டுத்தர முடியாது என பல இடங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடும் எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், எட்டு
ரத யாத்திரை சர்ச்சை: வேல்முருகன் திடீர் கைது!

ரத யாத்திரை சர்ச்சை: வேல்முருகன் திடீர் கைது!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழகம் வரும் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் உள்பட 25 பேரை செங்கல்பட்டு காவல்துறையினர் இன்று (மார்ச் 19, 2018) இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென்று கைது செய்தனர். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், ராம ராஜ்ய ரத யாத்திரை என்ற பெயரில் சில மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் ஏற்கனவே வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐந்து மாநிலங்களைக் கடந்து, ரத யாத்திரை நாளை (மார்ச் 20, 2018) திருநெல்வேலி மாவட்டம் புளியரை வந்து சேர்கிறது. அங்கு ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.   ரத யாத்திரைக்கு தமி-ழகத்தில் தடை விதிக்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்
பாரதியார் பல்கலை துணைவேந்தர்  கைதானது எப்படி?;  ”வசூலிப்பதே  முழுநேர தொழில்”;  திடுக்கிடும் தகவல்கள்

பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைதானது எப்படி?; ”வசூலிப்பதே முழுநேர தொழில்”; திடுக்கிடும் தகவல்கள்

குற்றம், கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் பொறுப்புக்கு வந்த நாள் முதல், நடந்த அனைத்து பணி நியமனங்களிலுமே யுஜிசி விதிமீறல்களும், பண பேரமும் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோயம்பத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதியை, லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி தட்சணாமூர்த்தி தலைமையிலான போலீசார், இன்று (பிப்ரவரி 3, 2018) காலையில் கையும், களவுமாக சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர். இந்தப் பல்கலையின் துணைவேந்தராக கணபதி, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். மன்னார்குடி கும்பலின் ஆசியுடன் அவர் இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, ஜெயலலிதாவுக்கு ரொம்பவே இணக்கமாக இருந்தார். மன்னார்குடி கும்பல் ஆசி: அதனால்தான், சசிகலா கும்பல் கைக்காட்ட