Thursday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Anna arivalayam

போட்டுக்கொடுத்த மேயர்… மாட்டிக்கொண்ட அமைச்சர்…!

போட்டுக்கொடுத்த மேயர்… மாட்டிக்கொண்ட அமைச்சர்…!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக கூட்டணியை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆளுங்கட்சி கவனம் செலுத்தி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அண்ணா அறிவாலயத்திடம் டிக்கெட் கேட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதையடுத்து, விருப்ப மனு அளித்தவர்களிடம் தொகுதிவாரியாக நேர்காணல் நடந்து வருகிறது. திமுக நேர்காணல் எப்படி நடக்கிறது என்பது குறித்து அறிந்து கொள்ள அண்ணா அறிவாலயம் வட்டாரத்தில் ஒரு விசிட் அடித்தோம். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு, கட்சி நிர்வாகிகள் கூட்டம், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தொடர்பான விளம்பர ஷூட்டிங் என பல்வேறு 'டைட்' ஷெட்யூல்களுக்கு இடையிலும், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படு சுறுசுறுப்பாக இயங்கி வருவதா...
திமுகவில் ராசிபுரம் தொகுதிக்கு முதல் விருப்ப மனு தாக்கல்!

திமுகவில் ராசிபுரம் தொகுதிக்கு முதல் விருப்ப மனு தாக்கல்!

அரசியல், முக்கிய செய்திகள்
திமுக சார்பில் ராசிபுரம்  தனித்தொகுதியில் போட்டியிட  மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த  ஒன்றியக்குழு 1வது வார்டு  கவுன்சிலரின் கணவர் முருகேசன், முதல் நபராக ஞாயிற்றுக்கிழமை (பிப். 21) விருப்ப மனு தாக்கல் செய்தார்.   தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, வழக்கத்தை விட முன்னதாகவே திமுக, அதிமுக கட்சிகள் தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டன.   இந்நிலையில், திமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறும் பணிகளையும் திமுக பிப். 17ம் தேதி தொடங்கியது. 28ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப்பேரவைத் தனித்தொகுதியில் போட்டியிட இம்முறை 20க்கும் மேற்பட்டோர் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், விருப்பமனு படிவம் ...
கருணாநிதி மரணம்… தலைவராகும் தளபதி… எதையும் இழக்கத் தயாரான ஸ்டாலின்! கண்ணீர்மயமான திமுக செயற்குழு!!

கருணாநிதி மரணம்… தலைவராகும் தளபதி… எதையும் இழக்கத் தயாரான ஸ்டாலின்! கண்ணீர்மயமான திமுக செயற்குழு!!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  திமுக தலைவர் கருணாநிதி மறைந்த எட்டாம் நாளான இன்று (ஆகஸ்ட் 14, 2018), அக்கட்சி செயற்குழுவின் அவசரக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. நேற்றைய தினம் மு.க. அழகிரி, ''கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என் பின்னால் இருக்கிறார்கள். முக்கிய தலைவர்கள் ரஜினிகாந்துடன் தொடர்பில் இருக்கின்றனர்,'' என்று சரவெடி கொளுத்திப் போட்டார். இதனால் இன்றைய அவசர செயற்குழுக் கூட்டத்தில் அனல் பறக்கும் என்ற பரபரப்பும், எதிர்பார்ப்பும் அரசியல் களத்தில் நிலவியது. 325 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்ட இக்கூட்ட அரங்கம், ஆரம்பத்தில் இருந்தே இறுக்கமாக காணப்பட்டது. எவர் முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள் தென்படவில்லை.   மேடையின் பின்னணியில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் ஸ்டாலின் முகமும் அச்சிடப்பட்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்பே ...