Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பொருளாதார குற்றப்பிரிவு

பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி! ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை!!

பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி! ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின்ஸ்டார் சிவக்குமார், செட்டில்மென்ட் கமிஷன் முன்பும் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்த கமிஷனின் தலைவர், சிவகுமாருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யவும் பரிந்துரை செய்துள்ளார்.   சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். புதிய பேருந்து நிலையம் அருகே வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் மற்றும் சவுபாக்கியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயர்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வந்தார். வீட்டு மனைகளில் முதலீடு செய்யும் நபர்களுக்கு, அத்தொகைக்கு உரிய மதிப்பில் வீட்டு மனை அல்லது ஓராண்டில் முதலீட்டு தொகையை இரட்டிப்பு மடங்காக வழங்கப்படும் என்று செய்தித்தாள்கள், உள்ளூர் சேனல்களில் விளம்பரம் செய்தார். இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை ந
இளம்பெண்கள் பலி! 55 கோடி ரூபாய் மோசடி! சேலம் தொழில் அதிபர் மீது குவியும் புகார்கள்…. திணறும் போலீசார்…!!

இளம்பெண்கள் பலி! 55 கோடி ரூபாய் மோசடி! சேலம் தொழில் அதிபர் மீது குவியும் புகார்கள்…. திணறும் போலீசார்…!!

ஈரோடு, குற்றம், சேலம், தமிழ்நாடு, திருப்பூர், நாமக்கல், முக்கிய செய்திகள்
  முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற பெண்களில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது ஒருபுறம் இருக்க, சேலம் வின்ஸ்டார் சிவகுமார் மீது புகார் அளிக்க நாள்தோறும் குவியும் முதலீட்டாளர்களால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.   தற்கொலை முயற்சி சேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். கூலித்தொழிலாளி. இவருக்கு ஐந்து மகள்கள். இரண்டு மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. மற்ற மூன்று மகள்களான மேனகா (33), ரேவதி (28), கலைமகள் (26) ஆகியோர் கடந்த 28.8.2018ம் தேதி திடீரென்று குருணை மருந்தை நீரில் கலக்கிக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.   அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேனகா, கலைமகள் ஆகியோர் உடல்நலம் மோசமானதால், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு