Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: நீலகிரி

நீலகிரி: காட்டு யானையை உயிருடன் எரித்து கொன்ற ‘பகுத்தறிவு மிருகங்கள்’ கைது!

நீலகிரி: காட்டு யானையை உயிருடன் எரித்து கொன்ற ‘பகுத்தறிவு மிருகங்கள்’ கைது!

நீலகிரி, முக்கிய செய்திகள்
நீலகிரி அருகே, உணவு தேடி ரிசார்ட் பகுதிக்குள் நுழைந்த வாயில்லா ஜீவனான காட்டு யானையை விடுதி ஊழியர்கள் இருவர் எரியும் துணியை வீசி, உயிருடன் எரித்துக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மனித தன்மையற்ற இந்தச்செயலை இயற்கை ஆர்வலர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.   நீலகிரி மாவட்டம் மசினகுடியில் தனியார் ரிசார்ட் பகுதிக்குள் சில நாள்களுக்கு முன்பு, உணவும் தண்ணீரும் தேடி சுமார் 50 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. தற்போது ரிசார்ட்டுகள் நிறைந்து காணப்படும் மசினகுடி ஒரு காலத்தில் யானைகள் வந்து செல்லும் வலசையாக இருந்துள்ளது. பின்னர், வணிக நோக்கில் அங்கு பலர் விடுதிகளையும், குடியிருப்புகளையும் கட்டியதால் அடிக்கடி யானைகள் உணவு தேடி ஊருக்குள் நுழைவதும், அவற்றை மனிதர்கள் சேர்ந்து விரட்டி அடிப்பதும் தொடர்கிற