Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: சேலம் மாநகராட்சி

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பூச்சி சாம்பார்; வண்டு பொரியல்! அலட்சியம் யார் பக்கம்?

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பூச்சி சாம்பார்; வண்டு பொரியல்! அலட்சியம் யார் பக்கம்?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில் அங்கன்வாடி மையத்தில் பூச்சி, வண்டுகளால் செல்லரித்துப்போன தானியங்களால் குழந்தைகளுக்கு உணவு சமைத்துப்போடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.   சேலம் மாவட்டத்தில் மொத்தம் 2696 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இரண்டு முதல் மூன்று வயது வரையிலான 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு திங்கள், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் வழக்கமான கலவை சாதத்துடன், முட்டையும் வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் உணவும், மூக்குக்கடலை சுண்டலும், வெள்ளிக்கிழமைகளில் பச்சைப்பயறு சுண்டலும் வழங்கப்படுகிறது. இந்த மையங்களில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை என நம் சோர்ஸ்கள் தரப்பில் சொல்லப்பட, ஒரு பானை சோற்றுக்கு பதம் கணக்காக, சேலம் குமாரசாமிப்பட்டியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்குச் சென்றோம். 15 அடி அகலம், 25 அடி நீளம் கொண்ட ஒரே அறை. மொத்தம் 15 குழந்தைகள...
சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் பி.எப். தொகை எங்கே?

சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் பி.எப். தொகை எங்கே?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய், இதுவரை பி.எப். கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளதால், பணிக்காலத்தில் இறந்த மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பணப்பலன்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   சேலம் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் முதல் ஆணையர் / தனி அலுவலர் வரை ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 20 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் எந்த ஒரு தொழிலகமும் தொழிலாளர் வருங்கால வைப்பது நிதி கணக்கு எனப்படும் இபிஎப் கணக்கிற்குள் அடங்கும். இபிஎப் கணக்கின்படி, மாதம் 15 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து அவர்களின் பங்களிப்பாக மாதம் 12 சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும். அதற்கு நிகராக வேலை அளிப்பவர் அ...
சேலம் மாநகராட்சி: பாதாள சாக்கடை திட்டமா? பகல் கொள்ளை திட்டமா? விரயமாகிறதா 216 கோடி?

சேலம் மாநகராட்சி: பாதாள சாக்கடை திட்டமா? பகல் கொள்ளை திட்டமா? விரயமாகிறதா 216 கோடி?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், சரிவர திட்டமிடப்படாமல் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தால் இதற்காக ஒதுக்கப்பட்ட மக்களின் வரிப்பணம் 216 கோடி ரூபாய் விழலுக்கு இரைத்த நீராகி விட்டதோ என்ற அய்யம் மக்களிடம் எழுந்துள்ளது. நகராட்சியாக இருந்த சேலம், கடந்த 1994ம் ஆண்டு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. சரிவர திட்டமிடப்படாத ஊரமைப்பு என்பதால், இன்றும் திறந்தவெளி சாக்கடை கால்வாய்களே நீக்கமற நிறைந்துள்ளன. இந்த நிலையில்தான், கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியின்போது, சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.   இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 23.2.2006ம் தேதி, இத்திட்டத்திற்கான அரசாணை (எண்: 63 (டி) வெளியிட்டது. முதல்கட்டமாக 149.39 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் அரசு மானியம் 10 கோடி ரூபாய்; சே...
இந்த மாசமாவது சம்பளம் கிடைக்குமா? சேலம் மாநகராட்சி ஊழியர்கள் பரிதவிப்பு!

இந்த மாசமாவது சம்பளம் கிடைக்குமா? சேலம் மாநகராட்சி ஊழியர்கள் பரிதவிப்பு!

சேலம், முக்கிய செய்திகள்
ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து முக்கிய விழாக்கள் வரிசைகட்டி நிற்கும் வேளையில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் முடிந்த பின்னரும்கூட இரு மாதங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்கிறார்கள், சேலம் மாநகராட்சி ஊழியர்கள்.   சேலம் மாநகராட்சியில் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள், சுகாதாரம், துப்புரவு ஊழியர்கள் என ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டல அலுவலகங்கள் மூலம் நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது. மைய அலுவலகம் மூலம் நான்கு மண்டலங்களின் பணிகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அலுவலக பராமரிப்பு முதல் ஊழியர்களின் சம்பளம் வரையிலான செலவினங்களுக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம், வரி வருவாயையே பெரிதும் நம்பி இருக்கிறது. அதாவது, மாநகரில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கட்டடங்களுக்கு விதிக்கப்படும்...
சபாஷ்  மாநகராட்சி! சுட்டிக்காட்டினோம்…செய்து முடித்தார்கள்…!!

சபாஷ் மாநகராட்சி! சுட்டிக்காட்டினோம்…செய்து முடித்தார்கள்…!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் நகரம் 1866ல் உருவாக்கப்பட்டது. 153 ஆண்டுகள் பழமையான இந்த நகரம், 1.6.1994ல் மாநகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது. சீர்மிகு நகரமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.   ஒரு காலத்தில், சேரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நகரம், அதன்பிறகு மைசூர் சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. போரில் திப்பு சுல்தான் தோல்வி அடைந்த பிறகு, இந்த நகரம் கிழக்கிந்திய கம்பெனி வசம் கொண்டு வரப்பட்டது. அதனால், சேலம் மாநகரில் முக்கிய தெருக்கள், அங்காடிகள், வணிக பகுதிகள் பலவும் இயல்பாகவே ஆங்கிலேயர்களின் பெயர்களை வரித்துக்கொண்டன.   உதாரணத்திற்குச் சில...   ஹேரி அகஸ்டஸ் பிரட்ஸ் (HARRY AUGUSTUS BRETTS) என்ற ஆங்கிலேயர், 1853 முதல் 1862 வரை சேலம் ஜில்லாவின் ஆட்சியராக இருந்தார். அவருடைய நினைவாக சேல...
சேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை! போலி கம்பெனிக்கு டெண்டர்!

சேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை! போலி கம்பெனிக்கு டெண்டர்!

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
குப்பைகளை அள்ளிச் செல்வதற்காக கொள்முதல் செய்யப்பட்ட பேட்டரி வண்டிகளிலும் பல லட்சங்களை ஓசையின்றி வாரிச்சுருட்டி இருக்கிறது சேலம் மாநகராட்சி.  சேலத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவதற்காக கடந்த 2016ம் ஆண்டில் மத்திய அரசு முதல்கட்டமாக 111 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால், இந்த நிதியை செலவிடாமல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை அடை காத்து வந்தது மாநகராட்சி. மத்திய அரசு ரிவிட் அடித்த பிறகே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதற்கான கன்சல்டன்சியை நியமித்தது.   இத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிப்பதற்காக பேட்டரிகளால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை கொள்முதல் செய்தது சேலம் மாநகராட்சி. பெரிய பெரிய இரும்பு கலன்களில் உள்ள குப்பைகளை தூக்கி லாரிகளில் கொட்ட ரொம்பவே சிரமப்பட்டு வந்த துப்புரவு தொழிலாளர்கள...
சேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்! பரபரப்பு தகவல்கள் அம்பலம்!!

சேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்! பரபரப்பு தகவல்கள் அம்பலம்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சி துப்புரவு ஊழியர் ஒருவர், போலி காசோலைகள் மூலம் 88 லட்சம் ரூபாய் சுருட்டியிருக்கும் பகீர் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.   சேலம் கருங்கல்பட்டி கலைஞர் நகர் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவருடைய மகன் வெங்கடேஷ் (38). சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில், கடந்த 2000ம் ஆண்டு முதல் துப்புரவு ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கொண்டலாம்பட்டி மண்டலத்தில் முதல்நிலை அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், குப்பை வண்டி ஓட்டுநர்கள் என 1500 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்காக மாதம் 3 கோடி ரூபாய் வரை சம்பள செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மண்டல ஊழியர...
இதற்காகத்தான் சேலம் மாநகராட்சிக்கு விருது! சும்மா ஒண்ணும் தரல!!

இதற்காகத்தான் சேலம் மாநகராட்சிக்கு விருது! சும்மா ஒண்ணும் தரல!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிறந்த மாநகராட்சிக்கான விருதுக்கு இந்த முறை சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு இருப்பது நமக்கெல்லாம் பெருமைதான். ஆனால், அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்பதை கூர்ந்தாய்வு செய்தால், கேள்விகளே மிஞ்சும். எங்கு பார்த்தாலும் சுகாதாரச் சீர்கேடு, பொதுக்கழிப்பறை இருந்தால் தண்ணீர் இருக்காது, தூய்மை இந்தியா திட்டத்தைப் போற்றுவோம்... ஆனால் திறந்தவெளி மலம் கழித்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாட்டோம். திடக்கழிவு மேலாண்மைப் பற்றி பேசுவோம்... ஆனால், செட்டிச்சாவடி குப்பைக்கிடங்கை மூடுவோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இப்படித்தான் இருக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம். இதற்குதான், அவார்டெல்லாம் கொடுக்கிறார்கள்.   ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகவெல்லாம் குறை சொல்லவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் கணக்கில், நாம் மணியனூரில் உள்ள ஆட்டிறைச்சிக் கூடத்தை நேரில் பார்வையிட்டோ...
எடப்பாடி போட்ட ‘லவ்-ஆல்’ சர்வீஸ்! அரசு விழாவில் ‘கிச்சுகிச்சு’!!

எடப்பாடி போட்ட ‘லவ்-ஆல்’ சர்வீஸ்! அரசு விழாவில் ‘கிச்சுகிச்சு’!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
என்னதான், தன்னை ஒரு விவசாயக்குடும்ப பின்புலத்தில் இருந்து வந்தேன் என்று சொல்லிக்கொண்டாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குள் இருக்கும் குழந்தைமைத்தன்மையும் அவ்வப்போது வெளிப்பட்டு விடுவதை பொது விழாக்களில் பார்க்க முடிகிறது.   அது மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசும்போது உணர்ச்சி மேலிட்டு அழுவதாகட்டும்; பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனக்குத் தெரிந்த நடையில் வெள்ளந்தியாக பேசுவதாகட்டும். அவருக்கென அரசியலில் தனி நடையை உருவாக்கிக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.   பாமக நிறுவனர் ராமதாஸ், 'முதல்வர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்கிறாரே?' என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால், அதற்கு கொஞ்சமும் சினம் கொள்ளாமல், 'அவர் இன்னும் என்னதான் சொல்லவில்லை? அவர்களால்தான் மழையே பெய்ய மாட்டேங்குது. இப்போதுதான் அக்கட்சியினர் மரம் நட ஆரம்பித்திருக்கின்றனர்,' என்று பாமகவினரை 'மரம் வ...
சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதோடு, இறைச்சிக் கழிவுகளால் நிரம்பி இன்னொரு கூவமாக உருமாறி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற சில நாள்களில் நடந்த அனைத்துத்துறை ஆய்வு க்கூட்டத்தில், ஏரிகள், நீர்நிலைகளை தூர்வாரும் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தார். இதற்காக, கடந்த நிதியாண்டில் மட்டும் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 1519 பணிகள் இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது கூறினார். குடிமராமத்துப் பணிகள் என்பது, நிலத்தடி நீரை செறிவூட்ட ஆகச்சிறந்த வழிமுறை என்பதால், துவக்க நிலையில் இத்திட்டத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே பல ஏரிகள் ...