Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சுகாதாரத்துறை செயலர்.

அரசு டாக்டர்கள் 10 பேருக்கு எம்.எஸ். பதவி உயர்வு! பீலா ராஜேஷ் உத்தரவு!!

அரசு டாக்டர்கள் 10 பேருக்கு எம்.எஸ். பதவி உயர்வு! பீலா ராஜேஷ் உத்தரவு!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் பேராசிரியர் நிலையிலான மூத்த மருத்துவர்கள் பத்து பேருக்கு, மருத்துவமனைக் கண்காணிப்பாளராக (எம்.எஸ்.) பதவி உயர்வு வழங்கி, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெள்ளிக்கிழமை (ஜூன் 14, 2019) உத்தரவு பிறப்பித்துள்ளார்.   முன்னதாக, மருத்துவக் கண்காணிப்பாளராக (Medical Superintendent) பணியாற்ற விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுவதும் 20 மூத்த மருத்துவர்கள் கண்காணிப்பாளராக பணியாற்ற இசைவு தெரிவித்து விண்ணப்பம் அளித்திருந்தனர். அவர்களில் பணிமூப்பு, நிர்வாகப் பணிகளில் முன் அனுபவம் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் பத்து பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. பதவி உயர்வு பெற்றவர்களில் மூன்று பேர் மயக்க மருந்தியல் துறையைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களில் இருவர் கண் மருத்துவத்துறையையும், இருவர்
அரசு மருத்துவமனை: முதல்வர் ஆன மூவர்; ஐவருக்கு இடமாற்றம்!

அரசு மருத்துவமனை: முதல்வர் ஆன மூவர்; ஐவருக்கு இடமாற்றம்!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் ஐந்து பேரை திடீரென்று இடமாறுதல் செய்தும், மூன்று மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். யார் யாருக்கு இடமாறுதல்?   சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதா, மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு முன் இந்த இடத்தில் பணியாற்றி வந்த முதல்வர் மருதுபாண்டியன் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அனிதா ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த இடமும் காலியாக இருந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வரும் சாரதா, திருச்சி அரசு மருத்துவமனைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். &nb