Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: இந்திய ரயில்வே.

ஒரே நாளில் நிஜ நாயகன் ஆன ‘பாயிண்ட்ஸ்மேன்’ மயூர்!

ஒரே நாளில் நிஜ நாயகன் ஆன ‘பாயிண்ட்ஸ்மேன்’ மயூர்!

இந்தியா, முக்கிய செய்திகள்
நாயகர்கள் பிறப்பதில்லை. சூழ்நிலைகளும் நிகழ்வுகளுமே நிஜ நாயகர்களை உலகுக்கு அவ்வப்போது அடையாளம் காட்டி விடுகிறது. அப்படி, நாடு போற்றும் நாயகனாக ஆனவர்தான் 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர் ஷெல்கே. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மத்திய வாங்கனி ரயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ்மேன் ஆக பணியாற்றி வருகிறார், மயூர் சகாராம் ஷெல்கே என்ற இளைஞர். ஏப். 17ம் தேதி, இந்த ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையில் தாயுடன் 6 வயது சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென்று, சிறுவன் கால் இடறி, நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் விழுந்துவிட்டான்.   பதறிப்போன தாய், மகனின் அழுகுரல் சத்தம் கேட்டு மேலும் பதற்றம் அடைகிறார். குழந்தையின் மரண ஓலம் வந்த திசையை அவரால் உணர முடியவில்லை. அப்போதுதான் அந்த தாய், பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி என்பதே தெரியவருகிறது. தொலைவி
இனி முன்பதிவு ரயில் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றலாம்;  ரயில்வே திட்டம்

இனி முன்பதிவு ரயில் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றலாம்; ரயில்வே திட்டம்

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ரயிலில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த ஒருவர், தவிர்க்க இயலாத நிலையில் பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தால், அந்த டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றிக்கொள்ளும் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே நிர்வாகம் விரைவில் அமல்படுத்த உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நிர்வாக அமைப்பாக செயல்பட்டு வரும் ரயில்வே, காலத்திற்கேற்ப நவீன தொழில்நுட்பங்களை அமல்படுத்தி வருகிறது. ஒருவர் முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவது என்பது இதுவரை குற்றமாக கருதப்பட்டு வந்த நிலையில், அதை நிர்வாகமே அனுமதிக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது. இவ்வாறு மாற்றித்தரப்படும் டிக்கெட்டுக்கு, அந்தந்த ரயில் நிலையங்களில் உள்ள தலைமை முன்பதிவு கண்காணிப்பாளரே ஒப்புதல் வழங்கலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூடுதலாக சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதாவது, அரசு ஊழியர் ஒருவர் திட்டமிட்டபடி பயணம் செய்ய இயலாமல்,