
சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு?
சேலம் மாவட்டத்தில்,
இரண்டு கட்டங்களாக நடந்த
ஊரக உள்ளாட்சித் தேர்தலில்
மொத்தம் 81.50 சதவீதம்
வாக்குப்பதிவு நடந்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக டிசம்பர் 27, 2019ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை (டிச. 30, 2019) வாக்குப்பதிவு நடந்தது.
சேலம் மாவட்டத்தைப்
பொருத்தவரை, மொத்தம்
20 ஊராட்சி ஒன்றியங்கள்
உள்ளன. இவற்றில்,
முதல்கட்டமாக 12 ஊராட்சி
ஒன்றியங்களுக்கு உட்பட்ட
உள்ளாட்சி அமைப்புகளுக்கு
கடந்த 27ம் தேதி தேர்தல்
நடந்தது. அதில், 81.68 சதவீதம்
பேர் வாக்களித்து இருந்தனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில்
எஞ்சியுள்ள ஆத்தூர்,
அயோத்தியாப்பட்டணம்,
கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி,
பெத்தநாயக்கன்பாளையம், சேலம்,
தலைவாசல், வாழப்பாடி...