
ஆளுங்கட்சியினர் என்னிடம் 80 லட்சம் ரூபாய் பேரம் பேசினாங்க! முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா தடாலடி!!
தமிழகத்தில்,
அண்மையில் நடந்த ஊரக
உள்ளாட்சித் தேர்தலில் பணம்
பெருமளவில் ஆதிக்கம்
செலுத்தினாலும், உள்ளூரில்
செல்வாக்கு படைத்த
சாமானியர்களும் பரவலாக
வெற்றி பெற்றிருப்பதையும்
காண முடிந்தது. அதேநேரம்,
முதன்முறையாக மாநில
கட்சிகள் அளவில்,
திருநங்கை ஒருவரும்
ஒன்றிய கவுன்சிலராக
அதிரி புதிரியாக வெற்றி பெற்று
மக்களின் கவனத்தை
பெரிதும் ஈர்த்து இருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோடு ஒன்றியம்,
இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட
கருவேப்பம்பட்டி ஊராட்சி,
கடந்த இருபது ஆண்டுக்கும்
மேலாக அதிமுகவின் கோட்டையாக
இருந்து வந்திருக்கிறது. போட்டியிட்ட
முதல் தேர்தலிலேயே
திருநங்கையான ரியா (29),
அதிமுக கோட்டையை தகர்த்தெறிந்து
திமுக வசமாக்கி இருக்கிறார்.
ஆண் பாதி, பெண் பாதியாக
காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர்
மண்ணில் திருநங்கையான ரியா
வெற்றி பெற்றிருப்பது தர்க்க
ரீதியில...