
கருங்கால் கொக்கும்… முலை குளமும்!
சங்க இலக்கியங்களில்
பெண்களின் அங்கங்கள்
குறித்தான வர்ணனைகள்
உச்சம் தொட்டாலும்,
அவை ரசிக்கத்தக்க
வகையிலேயே
இருந்திருக்கின்றன.
முகச்சுளிப்பை
ஏற்படுத்துவதில்லை.
குறிப்பாகச் சொல்ல
வேண்டுமெனில்,
குறுந்தொகையில்
உவமைகள் வெகு இயல்பாக
பொருந்தி வந்திருக்கும்.
எல்லா காலத்திலும்
ரசிக்கத்தக்க வகையில்
பாடல்கள் அமைந்திருப்பதும்
குறுந்தொகையின் தனித்த
அடையாளம்.
எட்டுத்தொகையுள் செறிவும்,
இனிமையும் மிக்கது,
குறுந்தொகை என்று எந்த
அவையிலும் நாம் துணிச்சலாக
கட்டுத்தொகை கூட
வைக்க முடியும்.
தமிழ் ஆர்வலர்களிடம்
உரையாடுகையில் அடிக்கடி
இப்படிச் சொல்வேன்...
''குறுந்தொகையில் பாடல்களை
எழுதிய புலவர்கள்,
பாடு பொருள்களுக்காக
மெனக்கெட்டிருப்பார்களே
தவிர, பொருள் (பரிசில்)
தேடி அலைந்திருக்க
மாட்டார்கள். ஆனால்,
இப்போதுள்ள பேச்சாளர்கள்
சிலர், க...