
சேலம்: பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்! 200 மையங்களில் நடக்கிறது!
தமிழகத்தில்,
பிளஸ்-2 பொதுத்தேர்வு
விடைத்தாள் திருத்தும்
பணிகள் இன்று
(புதன்கிழமை, மே 27)
தொடங்குகிறது. கொரோனா
தொற்றின் தாக்கம்
அதிகமுள்ளதால்,
சென்னை நீங்கலாக மற்ற
மாவட்டங்களில் மொத்தம்
200 மையங்களில் இப்பணிகள்
நடக்கிறது. விடைத்தாள்
மதிப்பீட்டுப் பணிகள் ஜூன்
23ம் தேதி நிறைவு
பெறுகின்றன.
தமிழகத்தில்
கடந்த மார்ச் மாதம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
அதன்பிறகு, கொரோனா தொற்று
அபாயத்தால் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. இதனால்
விடைத்தாள் திருத்தல்,
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு
பணிகள் முடங்கின. தற்போது
ஊரடங்கு படிப்படியாக
தளர்த்தப்பட்டுள்ள நிலையில்,
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்
பணிகளை பள்ளிக்கல்வித்துறை
இன்று தொடங்குகிறது.
விடைத்தாள் மதிப்பீட்டுப்
பணிகளில் மொத்தம்
40 ஆயிரம் ஆசிரியர்கள்
ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இன்று முதன்மைத் தேர்...