Friday, June 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

தமிழ்நாடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், வரும் 23ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தொடங்குமாறு கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் சேர ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில், நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை வரும் 23ம் தேதி முதல் தொடங்க கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.   செப். 3ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள் ஆன்லைன் அல்லது நேரடி கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.   பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், இதர சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே சேர்க...
ஐஏஎஸ் அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் முதல் பிரசவம்; அழகான தேவதையை பெற்றெடுத்தார்!

ஐஏஎஸ் அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் முதல் பிரசவம்; அழகான தேவதையை பெற்றெடுத்தார்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பொருளாதாரத்தின் மேல் அடுக்கில் உள்ளோரும், அரசின் உயர் மட்ட அதிகாரத்தில் இருப்போரும் அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகளின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் இருந்து எப்போதும் விலகியே இருக்கின்றனர். அதனால் வெகுசன மக்களும் அத்தகைய அரசு ஸ்தாபனங்களை நம்பாமல் தனியாருக்குச் செல்லும் போக்கு சமூகத்தில் மலிந்து கிடக்கிறது.   இந்நிலையில், தனது ஒரே ஒரு செயலால் ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.   சேலம் மாவட்டம் பேளூர் அருகே உள்ள கரடிப்பட்டியைச் சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ (29). கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.   இவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்ற மருத்துவருடன் திருமணம் நடந்தது. இ...
தமிழக பட்ஜெட்: குடிசை இல்லா தமிழகம் உருவாக்க இலக்கு; சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழக பட்ஜெட்: குடிசை இல்லா தமிழகம் உருவாக்க இலக்கு; சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முதன்முதலாக 2021-2022ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) வெள்ளிக்கிழமை (ஆக. 13), சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கையை தாக்கல் செய்து, உரையாற்றினார். வழக்கமாக பட்ஜெட் அறிக்கை, காகிதங்களில் அச்சிட்டு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வழங்கப்படும். காகிதங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கில், முதன்முதலில் காகிதமில்லா பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் அறிக்கையை அறிந்து கொள்வதற்காக அனைத்து எம்எல்ஏக்களின் இருக்கையிலும் கணினித் திரை வைக்கப்பட்டது.   பட்ஜெட் 2021 சிறப்பு அம்சங்கள்:   இலவச வீடுகள்:   நடப்பு 2021 - 2022ம் நிதியாண்டில் 8017 கோடி ரூபாய் செலவில் சுமார் 2 லட்சம் இலவச வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். கிராமப்புற ...
ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயரை மாற்ற வேண்டாம்! தமிழக அரசு விளக்கம்!

ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயரை மாற்ற வேண்டாம்! தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசின் 2021 - 2022ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக. 13) தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் வரலாற்றில் முதன்முதலாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் ஆனது.   நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட் உரையை தாக்கல் செய்து உரையாற்றினார்.   திமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. இதையடுத்து, ரேஷன் கார்டுகளில் ஆண்களை குடும்பத் தலைவராக பதிவு செய்திருந்த பலர், பெண்களை குடும்பத்தலைவராக குறிப்பிட்டு ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யத் தொடங்கினர்.   இதனால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பெண்கள் பெயரில் புதிய ரேஷன் கார்டுக்காக பதிவு செய்வோர் கூட்டம் அலைமோதி...
கொரோனா தொற்று அதிகரிப்பு; இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!

கொரோனா தொற்று அதிகரிப்பு; இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!

தமிழ்நாடு
கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க, ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் இன்று (ஆக. 9) முதல் கூடுதலாக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் மாலை 6 மணி வரை மட்டுமே ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள், பேரங்காடிகள் செயல்பட அனுமதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு ஆக. 23ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ள இடங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அதிமாக்கிக் கொள்ளவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. கேரளா மாநிலத்தில் கொரோனோ நோய்த்தொற்று சரிந்திருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மேலும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து எல்லையோர மாவட்டங்களான கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில...
உத்தம வில்லன்! கெஞ்சிக்கேட்ட இளம்பெண்… திருடிய கைப்பை, செல்போன், ஏடிஎம் கார்டுகளை திருப்பிக்கொடுத்த திருடன்!!

உத்தம வில்லன்! கெஞ்சிக்கேட்ட இளம்பெண்… திருடிய கைப்பை, செல்போன், ஏடிஎம் கார்டுகளை திருப்பிக்கொடுத்த திருடன்!!

திருச்சி, முக்கிய செய்திகள்
'பெண்ணென்றால் பேயும் இரங்கும்' என்பது எங்கு, யாருக்கு பொருந்திப் போயிருக்கிறதோ இல்லையோ... அந்தப் பழமொழி, திருச்சியில் இளம்பெண் ஒருவருக்கு பலித்திருக்கிறது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் இலஞ்சியம். இவருடைய மகள் கார்குழலி (23, பெயர் மாற்றப்பட்டுள்ளது). குஜராத் மாநிலத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். அண்மையில் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.   சில நாள்களுக்கு முன்பு, எடமலைப்பட்டிபுதூரில் உள்ள தன் தோழியைப் பார்ப்பதற்காக தாயாரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். கிராப்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, கிட்டத்தட்ட இருட்ட தொடங்கி இருந்த நேரம் அது.   எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், இலஞ்சியம் கையில் வைத்திருந்த மகளின் கைப்பையை 'லபக்'கென்று பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார். &nb...
சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாமல் திண்டாடிய கைத்தறி நெசவாளர்களை நூதன முறையில் சுரண்டி மோசடியில் ஈடுபட்டுள்ளது, சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம்.   சேலம் 2ஆம் அக்ரஹாரத்தில், 1956ம் ஆண்டு முதல் சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.   இக்கூட்டுறவு சங்கத்தில் 1558 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் வெண்பட்டு வேஷ்டி, சட்டைத்துணி, அங்கவஸ்திரம் ஆகியவற்றை சங்கம் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது.   இதற்காக சங்க உறுப்பினர்களுக்கு மாதத்திற்கு ஒரு பாவு, அதற்குரிய கோரா பட்டு நூல் ஆகியவற்றை வழங்குகிறது. ஒரு பாவு மூலம் பத்து வெண்பட்டு வேஷ்டிகளை உற்பத்தி செய்ய முடியும். ஒரு வேஷ்டியின் கொள்முதல் விலை 750 ரூபாய்.   ஒரு குடும்...
கொரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவி!

கொரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவி!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  இஎஸ்ஐசி திட்டத்தில் சந்தாதாரராக உள்ள ஒரு தொழிலாளி, கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்திருந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவித்தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் தொழிலாளர்கள் நலன்களுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎப்ஓ மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் எனப்படும் இஎஸ்ஐசி (Employee's State Insurance Corporation). இரண்டுமே தொழிலாளர் நலன்களுக்கானதுதான் என்றாலும், ஒவ்வொன்றும் அதன் அளவில் தனிச்சிறப்பு வாய்ந்ததுதான். பணியில் இருக்கும் தொழிலாளர் வேலை இழந்த பிறகோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ அவருக்கு சமூகப்பாதுகாப்பை வழங்குவது இபிஎப்ஓ (Employees' Provident Fund Organisation). அதே தொழிலாளி, பணியில் இருக்கும்போதே அவருக்கு சமூகப்பாதுகாப்பை ஏற்படுத்திக்...
கொரோனா சுனாமியால் நிலைகுலைந்த குடும்பம்; தாய், தந்தையை இழந்து வாடும் 5 பிள்ளைகள்!

கொரோனா சுனாமியால் நிலைகுலைந்த குடும்பம்; தாய், தந்தையை இழந்து வாடும் 5 பிள்ளைகள்!

கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓசூரில், கொரோனா சுனாமியால் ஒரே ஆதரவாக இருந்த தாயையும் பறிகொடுத்துவிட்டு 4 மகள்கள் உள்பட 5 பிள்ளைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையால் ஏற்பட்ட கடுமையான ஊரடங்கால் மற்றெந்த பிரிவினரையும் விட தினக்கூலித் தொழிலாளர் வர்க்கத்தினரும், சொற்ப ஊதியத்திற்கு பணியாற்றி வரும் தனியார் ஊழியர்களும் வேலையிழப்பு, பொருளாதார இழப்பால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். அதையெல்லாம் கவனத்தில் கொண்ட தமிழக அரசு, இந்தமுறை கொரோனா இரண்டாவது அலையின்போது, சற்று தளர்வுகளுடனேயே ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியது. ஆனாலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட முடக்கத்தில் இருந்தே மீளாத சாமானியர்களில் பலரை இரண்டாம் அலை கருணையின்றி காவு வாங்கிவிட்டது.   இந்த அலையில் சிக்கி சின்னாபின்னமான ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்றுதான், நிவிதாவின் குடும்பமும். கிருஷ்ணகி...
சேலம் பெரியார் பல்கலை புதிய துணைவேந்தராக ஜெகன்நாதன் நியமனம்! தொடரும் ‘ஜி’ சென்டிமென்ட்!

சேலம் பெரியார் பல்கலை புதிய துணைவேந்தராக ஜெகன்நாதன் நியமனம்! தொடரும் ‘ஜி’ சென்டிமென்ட்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் டீன் ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக கொங்கு மண்டலத்தில் இருந்தும், கவுண்டர் சமூகத்தினரையே துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது யதார்த்தமா? அல்லது உள்நோக்கமா? என்ற விவாதமும் பல்கலை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக இருந்து வந்த பேராசிரியர் குழந்தைவேலுவின் பதவிக்காலம் கடந்த ஜன. 8ம் தேதியுடன் முடிவடைந்தது. எனினும், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும்வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.   பல்கலை விவகாரங்களில் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் இருப்பதை மறுக்க முடியாது. என்றாலும், பணி நிறைவு பெற்று, வழியனுப்பு விழா நடத்தப்பட்ட நிலையில் குழந்தைவேலுவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதும்...