Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயரை மாற்ற வேண்டாம்! தமிழக அரசு விளக்கம்!

தமிழக அரசின்
2021 – 2022ம் ஆண்டுக்கான
பொது நிதிநிலை (பட்ஜெட்)
அறிக்கை சட்டப்பேரவையில்
வெள்ளிக்கிழமை (ஆக. 13)
தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் வரலாற்றில்
முதன்முதலாக காகிதமில்லா
பட்ஜெட் தாக்கல் ஆனது.

 

நிதி அமைச்சர்
பழனிவேல் தியாகராஜன்,
தனது முதல் பட்ஜெட் உரையை
தாக்கல் செய்து உரையாற்றினார்.

 

திமுக தேர்தல் அறிக்கையில்,
குடும்பத் தலைவிகளுக்கு
மாதந்தோறும் 1000 ரூபாய்
உரிமைத் தொகை வழங்கப்படும்
என அறிவித்து இருந்தது.
இதையடுத்து, ரேஷன் கார்டுகளில்
ஆண்களை குடும்பத் தலைவராக
பதிவு செய்திருந்த பலர்,
பெண்களை குடும்பத்தலைவராக
குறிப்பிட்டு ரேஷன் கார்டுகளில்
திருத்தம் செய்யத் தொடங்கினர்.

 

இதனால் தமிழகம் முழுவதும்
கடந்த ஒரு மாதமாக அனைத்து
வட்ட வழங்கல் அலுவலகங்களிலும்
பெண்கள் பெயரில் புதிய ரேஷன்
கார்டுக்காக பதிவு செய்வோர்
கூட்டம் அலைமோதி வருகிறது.
இதுகுறித்தும் இன்றைய
பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர்
பழனிவேல் தியாகராஜன்
விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:

 

குடும்பத்தலைவர் பெண்ணாக
இருந்தால் மட்டுமே உதவித்தொகை
என்பது தவறான புரிதல்.
உதவித்தொகை
இல்லத்தரசிகளுக்கானது
என்பதால் குடும்பத்தலைவர்
பெயரை மாற்றத் தேவையில்லை.

 

இல்லத்தரசிகளுக்கு
1000 ரூபாய் வழங்கும்
திட்டம் தகுதியான
குடும்பங்களைக் கண்டறிந்து
அமல்படுத்தப்படும்.

 

அரசு பெண் ஊழியர்களுக்கான
பேறுகால விடுப்பு 9 மாதத்தில்
இருந்து 12 மாதங்களாக
அதிகரிக்கப்படுகிறது.
இந்த திட்டம் நடப்பு
ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல்
முன்தேதியிட்டு நடைமுறைத்தப்படும்.
இவ்வாறு நிதியமைச்சர்
தெரிவித்தார்.

 

– பேனாக்காரன்