Tuesday, November 11மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
திட்டமிட்ட நேர மேலாண்மை இருந்தால், நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு பல்வேறு விதங்களிலும் ஆக்கப்பூர்வமாக பங்களிக்க முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், லட்சுமி சித்தார்த்தன். இவர், சேலம் சாரதா கல்லூரிச்சாலை எல்ஆர்என் காலனியில் உள்ள டிஎம்எஸ் கண் மருத்துவமனையின் இயக்குநர். இது மட்டுமல்ல. லேடீஸ் சர்க்கிள், சேலம் சிட்டிசன் ஃபோரம், இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ), சேலத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் 'இன்டேக்' உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்தும் செயல்பட்டு வருகிறார். லட்சுமி சித்தார்த்தனின் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே பாரம்பரியம் மிக்கது. இலங்கையின் கொழும்பு நகரம்தான் இவருடைய பூர்வீகம். ஈழ மண்ணில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பத்திரிகையான 'வீரகேசரி' நாளேட்டின் நிறுவனரான நடேசன் அய்யாவின் பேத்திதான் இவர். இவருடைய கணவர் சித்தார்த்தன். சேலம் அறிந்த பிரபல கண் மருத்துவர். காங்கிரஸ் கட்சியின் மூத...
இன்றைய பெண்கள்  நிலவுகள் அல்ல; சூரியன்கள்… – தில்லைக்கரசி நடராஜன்

இன்றைய பெண்கள் நிலவுகள் அல்ல; சூரியன்கள்… – தில்லைக்கரசி நடராஜன்

தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
("புதிய அகராதி", ஏப்ரல்-2017 இதழில்) இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் கனடா நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு, நான் பணிபுரிந்து வந்த சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மூலம் எனக்குக் கிடைத்தது. (வகுப்பறையில் வாசிக்கவும் வாழ்க்கையில் சுவாசிக்கவும் கற்றுக்கொடுத்த என் குருகுலத்திற்கு நன்றிகள்). கனடாவில் டொராண்டோ ஹம்பர் பல்கலைக் கழகத்தில் பெண்கள் மேம்பாட்டுக்கான மூன்று வாரப்பயிற்சி எங்களுக்கு வழங்கப்பட்டது. முதல் நாள் அனுபவமே மொத்த பயிற்சியின் சாராம்சத்தை சொல்லிக்கொடுத்தது. அன்று காலை இடைவேளையின்போது நானும் என்னுடன் பயிற்சிக்கு வந்திருந்த இரண்டு பெண் ஆசிரியர்களும் கழிப்பறைக்குச் சென்றிருந்தோம்.   அங்கே மிக அழகான செல்லுலாய்டு பொம்மை கணக்காய் ஓர் இளம்பெண் கழிப்பறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். "இவ்வளவு அழகான பெண் கழிப்பறையைச் சுத்தம் செய்து க...
“சாதியை ஒழிக்காமல் மலக்குழி சாவுகளை தடுக்க முடியாது” -‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யா

“சாதியை ஒழிக்காமல் மலக்குழி சாவுகளை தடுக்க முடியாது” -‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யா

அரசியல், கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
(ஏப்ரல்-2017, "புதிய அகராதி" இதழில்...)   ‘கக்கூஸ்’ அவணப்படத்தின் மூலம் மனிதக்கழிவு அகற்றும் தூய்மைப் பணியாளர்களின் துயர நிலையை, அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் திவ்யபாரதி. அவருடனான உரையாடலில் இருந்து…   புதிய அகராதி: துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் எப்போது வந்தது?   திவ்யா: கடந்த 2015ம் ஆண்டு மதுரையில், மலக்குழியில் இறங்கி வேலை செய்த இரண்டு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறந்து விட்டனர். இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, உரிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு, அலட்சியமாக இருந்த அதிகாரிகளை கைது செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளும் போராடின.   அப்போது, இறந்த ஒரு தொழிலாளியின் இளம் மனைவி 'வா மாமா வ...
மிரட்டும் ஹீமோபிலியா…! “பெண்களையும் தாக்கும்” #Hemophilia

மிரட்டும் ஹீமோபிலியா…! “பெண்களையும் தாக்கும்” #Hemophilia

தமிழ்நாடு, மருத்துவம், முக்கிய செய்திகள்
'ஏப்ரல்-17 உலக ஹீமோஃபிலியா தினம்'   உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தால், ரத்தம் வெளிக்காற்றுடன் தொடர்பு கொண்ட சில நொடிகளிலேயே உறைய ஆரம்பித்து விடும். இது, நாம் உயிர் வாழ்வதற்காக இயற்கை நமக்களித்த கொடை.   ரத்தம் உறையாமை ஆனால், ஹீமோபிலியா (HEMOPHILIA) (ரத்தம் உறையாமை) குறைபாடு உள்ளவர்களுக்கு இங்குதான் சிக்கலே. இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தம் உறையாது. நீண்ட நேரம் ரத்தப்போக்கு நீடிக்கும். அதனால் உயிரிழப்புகூட நிகழக்கூடும்.   ரத்தம் உறைவதற்கு ஒரு வகையான புரதச்சத்து தேவை. இந்த புரதம், ரத்தத்தில் உள்ள 13 வகையான காரணிகளில் உள்ளன. அதை மருத்துவர்கள், பேக்டர் (Factor) 1 முதல் பேக்டர் 13 வரை வகைப்படுத்துகின்றனர்.   எக்ஸ் (X) குரோமோசோம் இந்த பேக்டர்கள் 'எக்ஸ்' (X) குரோமோசோம்களில் உள்ளன. அதனால்தான், 'எக்ஸ்' குரோமோசோம் பாதிக்கப்படும்போது, ரத்தம் உறைய...
சோழர்கள் வரலாறு புறக்கணிப்பு…! -அறம் கிருஷ்ணன்

சோழர்கள் வரலாறு புறக்கணிப்பு…! -அறம் கிருஷ்ணன்

இந்தியா, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு
  ஓசூரில் 100 தொழிலாளர்களுடன் இயங்கும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையின் அதிபர். அலட்டல் இல்லாத கவிஞர். 'கவிக்கோ' அப்துல் ரஹ்மான், வைரமுத்து, அறிவுமதி ஆகியோரை வைத்து மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.   இவற்றையெல்லாம் விட அவர் பெருமையும், மன நிறைவும் அடைவது தன்னை ஒரு 'வரலாற்று ஆய்வாளர்' என்று சொல்லிக்கொள்வதில்தான் என்றால் மிகையாகாது. இப்படி பன்முகத்தன்மையுடன் திகழ்பவர்தான், 'அறம்' கிருஷ்ணன். அவருடனான உரையாடலில் இருந்து... புதிய அகராதி: உங்கள் பெயரின் முன்னொட்டாக 'அறம்' ஒட்டிக்கொண்டது எப்படி?   அறம் கிருஷ்ணன்: எனக்குள் இருக்கும் இலக்கிய ஆர்வம் காரணமாக, 'அறம் இலக்கிய அமைப்பு' என்ற அமைப்பை தொடங்கினேன். அதன்மூலம், ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி வருகிறோம். அறம் என்றாலே கொடுப்பதுதானே.   அதனால் விழா நடைபெறு...
சட்டம் அறிவோம்: உயில்…! ‘அவசியமும் நடைமுறைகளும்’ – சுரேஷ், வழக்கறிஞர்

சட்டம் அறிவோம்: உயில்…! ‘அவசியமும் நடைமுறைகளும்’ – சுரேஷ், வழக்கறிஞர்

தமிழ்நாடு, மற்றவை, முக்கிய செய்திகள்
நாம் பயணிக்கும் இந்த வாழ்க்கையில் விரும்பியோ விரும்பாமலோ ஒவ்வொரு நாளும் சட்டமும் அதன் பயன்களும் நமக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் சிலவற்றையாவது நாம் அறிந்து வைத்திருப்பது இன்று காலத்தின் கட்டாயம். இந்த பதிவில் உயில் மற்றும் அதை சார்ந்த சில தகவல்களைப் பார்க்கலாம்.   மரணப்படுக்கையில் இருக்கும் போது எஸ்.வி.ரங்காராவோ அல்லது நாகையாவோ உடனே, “வக்கீல கூப்புடுங்க உயில் எழுதணும்,” என்று இருமிக்கொண்டே சொல்லும் பழைய கருப்பு வெள்ளை சினிமா காலத்திலிருந்தே உயில் என்றால் ஒருவருடைய மரண சாசனம் என்று நாம் இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம். இது முற்றிலும் தவறான அணுகுமுறை. உயில் என்பது ஒருவருடைய வாழ்வின் சாசனம் (Life Testimony). ஒருவரின் வாழ்வில் நடந்த அதிமுக்கியமான நிகழ்வுகளும் அவரின் வாழ்க்கைக்குப்பிறகு அவர் சொல்ல அல்லது சொத்து சம்பந்தமாக செய்ய ...
நோ டென்ஷன் ப்ளீஸ்!  -தில்லைக்கரசி நடராஜன்

நோ டென்ஷன் ப்ளீஸ்! -தில்லைக்கரசி நடராஜன்

முக்கிய செய்திகள்
"டென்ஷன்! வீட்லயும் டென்ஷன். ஆபீஸ்லயும் டென்ஷன். எங்கதான் போறதுனே தெரியலே," என்று படபடக்கிறீர்களா? ஜில்லென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, காற்றோட்டமான இடத்தில் ஒரு நீளமான மூச்சு விட்டுவிட்டு, பத்து நிமிடம் நிதானமாக உட்காருங்கள். உங்களுக்கு மன அழுத்தமும் டென்ஷனும் எந்தெந்த காரணங்களால் வருகிறது என்று கொஞ்சம் மனதில் பட்டியலிடுங்கள். யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று எண்ணுகிறேன். அனேகமாய் முதல் அயிட்டம் பணப்பற்றாக்குறை என்றிருக்க வாய்ப்பிருக்கிறது. அப்புறம், உறவுகளால் ஏற்படும் சங்கடங்கள், உடல் ரீதியான கஷ்டங்கள் என்று பட்டியல் நீளும். நம்மில் பலர், பணமிருந்தால் போதும் எந்தப் பிரச்னையானாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணுவதுண்டு. ஆனால் நாலு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கும் எத்தனையோ பேர், தூக்கமே இல்லாமல் அலைவதை நான் பார்த்திருக்கிறேன். வைத்திருந்த சைக்கிளை...
சட்டம் அறிவோம்: உயில்…  “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்”  – சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

சட்டம் அறிவோம்: உயில்… “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” – சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

முக்கிய செய்திகள்
ஒவ்வோர் அரசாங்கமும் நிர்வாகத்திற்காகவும், மக்கள் நலனுக்காகவும் சட்டங்களை இயற்றுகின்றன. ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் தொடர்ந்து அவற்றை நாம் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். அப்படி செய்வதால் ஏற்படும் விதி மீறல்களே குற்றங்கள். "கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான்?" என்று அதிதீவிரமாக அறிந்து கொள்ள ஆசைப்படும் நாம், சட்டங்களின் அடிப்படையையாவது அறிந்து வைத்துக்கொள்ளல் அவசியமன்றோ! மாவீரன் என்றவுடன் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது, நெப்போலியன் தான். உலக நாடுகளை எல்லாம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஏறக்குறைய பாதி ஐரோப்பாவையே வெற்றி கொண்டவன். ஆனாலும் 1815ம் ஆண்டு நடந்த வாட்டர்லூ போரில் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்று சிறைக் கைதியாக்கப்பட்டு, தன் வாழ்நாளின் இறுதி நாட்களை செயிண்ட் ஹெலினா தீவில் கழித்தார் என்பது வரலாறு. ஆனால் நெப்போலியன் எழுதிய உயில் பற்றி தெரியுமா..? அத...
லெனோவா கே8 நோட் விரைவில் அறிமுகம்.!

லெனோவா கே8 நோட் விரைவில் அறிமுகம்.!

தொழில்நுட்பம், முக்கிய செய்திகள், வர்த்தகம்
லெனோவா நிறுவனம் பொதுவாக பல்வேறு பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்துவருகிறது,மேலும் தற்போது லெனோவா நிறுவனம் புதிய லெனோவா கே8 நோட் என்ற மாடலை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது, அதன்பின் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன். லெனோவா கே8 நோட் வரும் 09.08.2017 அன்று அறிமுகப்படுத்தபடும் என லெனோவா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆண்ட்ராய்டு: லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் பொதுவாக ஸ்னாப்டிராகன் 660 செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம்: இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிக்கும் வசதி இவற்றில் உள்ளது ...
பொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் இந்தியா: சொல்கிறது ஐஎம்எஃப்

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் இந்தியா: சொல்கிறது ஐஎம்எஃப்

அரசியல், இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், வர்த்தகம்
டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, நடப்பு ஆண்டில் அபரிமிதமாக இருக்கும் என்றும், சீனாவை பின்னுக்குத் தள்ளி வேகமாக வளரும் என்றும் சர்வதேச நிதியகம் (ஐ.எம்.எப்) தன்னுடைய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.ன் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். இருந்தாலும், நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சவால் மிகுந்ததாக இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தெரிவித்திருந்தார். ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகமானது. இதில் துவக்கத்தில் சிறிது காலத்துக்கு மந்தநிலை காணப்பட்டாலும், இது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ஐஎம்எஃப் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. பணமதிப்பு நீக்கம்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்...