Saturday, May 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மற்றவை

இளநிலை துணை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

இளநிலை துணை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட இளநிலை துணை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட நேரடி மருத்துவப் படிப்புகள் மட்டுமின்றி அத்துறையைச் சார்ந்த ஏராளமான தொழில்சார் துணை மருத்துவப் படிப்புகளும் இருக்கின்றன. சான்றாக, பிஎஸ்சி செவிலியர், ரேடியோதெரபிஸ்ட், இமேஜிங் டெக்னீஷியன் உள்ளிட்ட படிப்புகளைச் சொல்லலாம். எந்த விதமான நுழைவுத்தேர்வுகளுமின்றி, முற்றிலும் பிளஸ்2 மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மட்டுமே இதுபோன்ற துணை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில், இளநிலை பிரிவில் துணை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் நடப்பு 2021 - 202
ஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர்! தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை!

ஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர்! தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
  ஆசிரியர் பணி நியமனங்களுக்கு லட்சக்கணக்கில் பட்டியல் போட்டு வசூல் வேட்டை நடத்திய பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், வழக்கில் இருந்து தப்பிக்க ஆளுங்கட்சியில் ஐக்கியமாகிவிட்ட முன்னாள் அமைச்சர்களிடம் தஞ்சம் அடைந்துவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.   சேலத்தை அடுத்த கருப்பூரில், கடந்த 24 ஆண்டுகளாக பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலையுடன், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 113 கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன.   இப்பல்கலையின் துணைவேந்தராக கடந்த 2014 முதல் 2017 வரை சுவாமிநாதன் என்பவர் பணியாற்றி வந்தார். ஆராய்ச்சியாளர்களையும், பெரும் கல்வியாளர்களையும் உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகம், அவருடைய பணிக்காலத்தில்தான் ஊழல் வேட்டைக்களமாக மாறிப்போனதாக கூறுகிறார்கள்
5 லட்சம் ரூபாய்க்கு அரசு வேலை!; ஆசை வலை விரித்து மோசடி செய்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் கைது!!

5 லட்சம் ரூபாய்க்கு அரசு வேலை!; ஆசை வலை விரித்து மோசடி செய்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் கைது!!

குற்றம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ் வளர்ச்சித்துறையில், வேலை வாங்கிக் கொடுப்பதாக ஆசை வலை விரித்து, காவலரின் மனைவியிடமே 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த அரசுப்பள்ளி பெண் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.   சென்னை புது வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரேணியல். காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அனிதா கார்மெல் (43). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில் மூலம் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.   அப்போது, அதே ரயிலில் பயணம் செய்த திருப்பாச்சூரைச் சேர்ந்த அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர் மேகலா (59) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது மேகலா, ''அரசுத் துறைகளில் பல உயர் அதிகாரிகளுடன் எனக்கு நெருக்கமான நட்பு உள்ளது. யாருக்காவது அரசு வேலை வேண்டுமானால் சொல்லுங்கள். இப்போது கூட தமிழ் வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடம் இருக்கிறது. யாராவது வ
சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!!

சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!!

குற்றம், கோயம்பத்தூர், சென்னை, தூத்துக்குடி, தேனி, முக்கிய செய்திகள், வேலூர்
தமிழகத்தில், சர்வோதய சங்கங்களில் கைத்தறி நெசவாளர்கள் பெயரில் போலி உறுப்பினர்களைச் சேர்த்து, பல ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உண்மையான கைத்தறி நெசவாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலி, போனஸ் தொகையை காலங்காலமாக ஒரு கும்பல் கூட்டு சேர்ந்து சுரண்டி வந்துள்ளன.   மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) கீழ், தமிழ்நாட்டில் மொத்தம் 70 சர்வோதய சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த துறை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கட்டுப்பாட்டில் உள்ளது. கையால் நூற்ற நூலை, கையாலும் காலாலும் நெய்யப்படும் துணிதான் கதர். அப்படியான கதர் துணி நெசவாளர்கள் மற்றும் கிராம கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சந்தைப்படுத்த சர்வோதய சங்கங்கள் தொடங்கப்பட்டன. மொத்தமுள்ள சங்கங்களில் நாலைந்து தவிர ஏனைய சர்வோதய சங்கங்கள் கதர் து
நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

சென்னை, சேவை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாழ்வில் ஏற்படும் கொடுந்துயரங்களும், எதிர்பாராத இடர்களும்தான் சாதாரண மனிதர்களைக் கூட அசாதாரண செயல்களைச் செய்யக்கூடிய நாயகர்களாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கொரோனா என்னும் பேரிடர், இந்த உலகுக்கு மற்றுமொரு நாயகியை பரிசளித்திருக்கிறது. கொரோனா ஊரடங்கின்போது வேலை, வருவாய் இழந்து வயிற்றுக்கும் உயிருக்குமாய் தத்தளித்துக் கொண்டிருந்த சாமானியர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உணவளித்தல், மருத்துவ உதவிகள், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வந்தனர். உலகில் இன்னும் மானுடம் மரித்துப் போய்விடவில்லை என்பதற்கு அத்தகைய தன்னார்வலர்களே தக்க சான்று. அவர்களைப் பற்றிய தகவல்களை நமது 'புதிய அகராதி'யில் 'நம்ம ஊர் நாயகன் / நாயகி' என்ற தலைப்பில் தொடராக எழுதி வருகிறோம். அந்த வரிசையில் இப்போது, சீதா தேவி.   சென்னை கொடுங்கையூர் மூலக்கடையைச் சேர்ந
பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், தகவல், முக்கிய செய்திகள்
எத்தொகை கொடுத்தாலும் ஈடாகாது நற்குறுந்தொகைக்கு. குறுந்தொகையானாலும், நெடுந்தொகையாக சிலாகித்துப் பேசிக்கொண்டே இருக்கலாம். 'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் குறுந்தொகையில் இருந்து இன்னொரு பாடலோடு வந்திருக்கிறேன். உலகம் முழுவதும் எத்தனை முகங்கள்... எத்தனை மொழிகள் இருந்தாலும் ஒரு சொல் கேட்ட மாத்திரத்திலேயே நமக்குள் ஒரு கணம், பேருவகையை தந்து விட்டுப் போகும். அதுதான், காதல்.   அதனால்தான் மகாகவி பாரதி, 'ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே' என அறைகூவல் விடுத்தான். காதலினால் கலவி உண்டாம்; காதலினால் கவலைகள் போம்' என்றான். உள்ளத்தால் கூடிய காதலின் உச்சக்கட்ட அக்னாலெட்ஜ்மென்ட்தான், உடல் தீண்டல்.   உள்ளத்தால் இணைந்த பிறகு, உடல்தீண்டல் நிகழ்கிறது. அங்கே, ஈருடல் ஓருயிராகிறது. தலைவனும், தலைவியும் கட்டி அணைத்துக் கொண்டால் அங்கே காற்றுகூட இடையறுத்துச் செல்லக்கூடாதாம். அந்தளவு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், வரும் 23ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தொடங்குமாறு கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் சேர ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில், நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை வரும் 23ம் தேதி முதல் தொடங்க கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.   செப். 3ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள் ஆன்லைன் அல்லது நேரடி கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.   பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், இதர சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே சேர்க
சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாமல் திண்டாடிய கைத்தறி நெசவாளர்களை நூதன முறையில் சுரண்டி மோசடியில் ஈடுபட்டுள்ளது, சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம்.   சேலம் 2ஆம் அக்ரஹாரத்தில், 1956ம் ஆண்டு முதல் சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.   இக்கூட்டுறவு சங்கத்தில் 1558 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் வெண்பட்டு வேஷ்டி, சட்டைத்துணி, அங்கவஸ்திரம் ஆகியவற்றை சங்கம் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது.   இதற்காக சங்க உறுப்பினர்களுக்கு மாதத்திற்கு ஒரு பாவு, அதற்குரிய கோரா பட்டு நூல் ஆகியவற்றை வழங்குகிறது. ஒரு பாவு மூலம் பத்து வெண்பட்டு வேஷ்டிகளை உற்பத்தி செய்ய முடியும். ஒரு வேஷ்டியின் கொள்முதல் விலை 750 ரூபாய்.   ஒரு கு
கொரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவி!

கொரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவி!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  இஎஸ்ஐசி திட்டத்தில் சந்தாதாரராக உள்ள ஒரு தொழிலாளி, கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்திருந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவித்தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் தொழிலாளர்கள் நலன்களுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎப்ஓ மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் எனப்படும் இஎஸ்ஐசி (Employee's State Insurance Corporation). இரண்டுமே தொழிலாளர் நலன்களுக்கானதுதான் என்றாலும், ஒவ்வொன்றும் அதன் அளவில் தனிச்சிறப்பு வாய்ந்ததுதான். பணியில் இருக்கும் தொழிலாளர் வேலை இழந்த பிறகோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ அவருக்கு சமூகப்பாதுகாப்பை வழங்குவது இபிஎப்ஓ (Employees' Provident Fund Organisation). அதே தொழிலாளி, பணியில் இருக்கும்போதே அவருக்கு சமூகப்பாதுகாப்பை ஏற்படுத்
கொரோனா சுனாமியால் நிலைகுலைந்த குடும்பம்; தாய், தந்தையை இழந்து வாடும் 5 பிள்ளைகள்!

கொரோனா சுனாமியால் நிலைகுலைந்த குடும்பம்; தாய், தந்தையை இழந்து வாடும் 5 பிள்ளைகள்!

கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓசூரில், கொரோனா சுனாமியால் ஒரே ஆதரவாக இருந்த தாயையும் பறிகொடுத்துவிட்டு 4 மகள்கள் உள்பட 5 பிள்ளைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையால் ஏற்பட்ட கடுமையான ஊரடங்கால் மற்றெந்த பிரிவினரையும் விட தினக்கூலித் தொழிலாளர் வர்க்கத்தினரும், சொற்ப ஊதியத்திற்கு பணியாற்றி வரும் தனியார் ஊழியர்களும் வேலையிழப்பு, பொருளாதார இழப்பால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். அதையெல்லாம் கவனத்தில் கொண்ட தமிழக அரசு, இந்தமுறை கொரோனா இரண்டாவது அலையின்போது, சற்று தளர்வுகளுடனேயே ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியது. ஆனாலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட முடக்கத்தில் இருந்தே மீளாத சாமானியர்களில் பலரை இரண்டாம் அலை கருணையின்றி காவு வாங்கிவிட்டது.   இந்த அலையில் சிக்கி சின்னாபின்னமான ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்றுதான், நிவிதாவின் குடும்பமும். கிருஷ்ணகி