Thursday, May 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கல்வி

அடிமேல் அடி வாங்கும் ஆசிரியர்கள்!; ‘கக்கூஸ் போவதையும் கணக்கெடுக்கணுமாம்’

அடிமேல் அடி வாங்கும் ஆசிரியர்கள்!; ‘கக்கூஸ் போவதையும் கணக்கெடுக்கணுமாம்’

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சிறப்பு கட்டுரை-   கம்ப்யூட்டர், டேப்ளட், டிரைமெஸ்டர், தொடர் மதிப்பீட்டு முறை, ஆங்கில வழி என அரசு தொடக்கப்பள்ளிகள் ஒருபுறம் நவீனமாகி வந்தாலும், சமூகத்தைக் கட்டமைக்கும் ஆசிரியர்களை அரசாங்கம் கொத்தடிமைகளைப் போல நடத்தும் போக்கு, அவர்களை மனதளவில் சோர்வடையச் செய்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருமுறை ஊதிய உயர்வுக்காக போராடும்போதும் அவர்களை கேலி பேசும் பட்டியலில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். அந்த எண்ணத்தில் எனக்கு இப்போதும் பெரிய மாற்றுக்கருத்து இல்லை. உழைக்காமலேயே ஊதியம் பெறும் வர்க்கமாக ஆசிரியர்களை சித்தரித்திருப்பதில் அரசுக்கே பெரும் பங்கு உண்டு என்றுதான் சொல்வேன். கைநிறைய சம்பளத்தை அள்ளிக்கொடுத்து விட்டால் போதும். அவர்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கலாம் என்ற மனோபாவத்தில் அரசாங்கம் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மத்தளத்துக்கு இரண்ட
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

இந்தியா, கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் 'நீட்' தேர்வு எழுதப்பட வேண்டும். 2018-2019 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு, வரும் மே 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி (இன்று) வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இதற்கான அவகாசத்தை வரும் 12ம் தேதி (திங்கள் கிழமை) வரை நீட்டித்துள்ளது. அன்று மாலை 5.30 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். முன்பு நீட் தேர்வு எழுத ஆதார் அட்டை அவசியம் என்று அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பான ஒரு வழக்கில், நீட் உள்ளிட்ட எந்த ஒரு நுழைவுத்தேர்வுக்கும் ஆதார் அட்டை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து, ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்படும்போது ஆதார் விவரங்களை உள்ளீடு செய்யத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளத
ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது?: டிஆர்பி அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது?: டிஆர்பி அறிவிப்பு

கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆசிரியர் தகுதி தேர்வு, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், கல்லூரி ஆசிரியர் தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (மார்ச் 1, 2018) வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு (Teacher Eligibility Test - TET), அக்டோபர் 6 மற்றும் 7 ஆகிய இரு நாள்கள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board - TRB) இன்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 57 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும்.
நீட் தேர்வு:  பொதுப்பிரிவினர் வயது வரம்புக்கு இடைக்காலத் தடை;  சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ்!

நீட் தேர்வு: பொதுப்பிரிவினர் வயது வரம்புக்கு இடைக்காலத் தடை; சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ்!

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதும் பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகப்பட்ச வயது வரம்புக்கு இடைக்காலத் தடை விதித்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 28, 2018) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கவும் சிபிஎஸ்இ-க்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 6ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 8ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மார்ச் 9ம் தேதி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. நீட் தேர்வை, பட்டியல் இனப்பிரிவினர் 30 வயது வரை எழுதலாம் என்றும், பொதுப்பிரிவினர்
கையடக்க கணினி… ‘கியூஆர் கோடு’ புத்தகம்!;  நவீனமாகிறது அரசுப்பள்ளிகள்!!

கையடக்க கணினி… ‘கியூஆர் கோடு’ புத்தகம்!; நவீனமாகிறது அரசுப்பள்ளிகள்!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சி-ற-ப்-பு-க்- க-ட்-டு-ரை- அரசுப்பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கல்வி வந்த பிறகுதான் கணினியை தொட்டுப் பயன்படுத்தவே முடியும் என்றிருந்தது ஒரு காலம்; இன்றைக்கு, அரசுப்பள்ளியில் பயிலும் 5 வயது குழந்தைகூட கையடக்கக் கணினியில் (டேப்லெட்) பாடம் கற்கும் உன்னத நிலையை நிதர்சனமாக்கியிருக்கிறது அனைவருக்கும் கல்வித்திட்டம். அரசுத் தொடக்கப்பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வரும் செயல்வழிக்கற்றலின் அடுத்தக்கட்ட நகர்வாகவே இந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டை நான் கருதுகிறேன். அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் மாவட்டத் திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளரான தேவிகா, குழந்தைகள் கற்றல், கற்பித்தல் முறைகளில் இயல்பாகவே ஆர்வம் காட்டுபவர். புதிதாக குழந்தைநேய கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகச் சொன்னவர், அதுகுறித்து ஆசிரியர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தகவல் சொன்னார். மா
நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்;  ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

இந்தியா, கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் (National Eligibility cum Entrance Test- NEET 2018) தேர்வுக்கு இன்றுமுதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆதார் கார்டு விவரங்கள் இருந்தால்தான் தேர்வு எழுத முடியும். மார்ச் 9ம் தேதி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில், நடப்பு 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ (The Central Board of Secondary Education- CBSE) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு - 2018 எழுத உள்ள தனித்தேர்வர்கள், வரும் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு 2018ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20ம் தேதி வரை நடக்கிறது. முதன்முதலாக எஸ்எஸ்எல்சி தேர்வு எழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள் வரும் 22.12.2017ம் தேதி முதல் 29.12.2017ம் தேதி வரை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசுத்தேர்வு சேவை மையத்திற்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமைகள் நீங்கலாக மற்ற அனைத்து வேலை நாள்களிலும் இந்த மையம் செயல்படும். முதன்முறையாக தேர்வு எழுதினாலும் அனைத்து பாடத்தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட நாள்களில் பதிவு செய்யாமல் தவறவிட்டவர்கள், 2.1.2018ம் தேதி முதல் 4.1.2108ம் தேதி வரை தட்கல்
பள்ளி சிறுமிகளின் வாழ்வை மாற்றும் காயலான் கடை சைக்கிள்!; ஓசூர் இளைஞர்கள் புதிய முயற்சி!!

பள்ளி சிறுமிகளின் வாழ்வை மாற்றும் காயலான் கடை சைக்கிள்!; ஓசூர் இளைஞர்கள் புதிய முயற்சி!!

கல்வி, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேவை, தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
எதற்கும் உதவாது என வீட்டில் அடைத்து வைத்திருக்கும் பழைய சைக்கிள்களை, பழுது பார்த்து மலைக்கிராம பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர் ஓசூர் இளைஞர்கள். அவர்களின் புதிய முயற்சிக்கு பரவலாக வரவேற்பு கிடைக்கவே, அதை இதர ஏழை மாணவர்களுக்கும் விரிவு படுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது நாட்றாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி. 192 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி அமைவிடம் என்னவோ, சமதளப் பரப்பில்தான் இருக்கிறது. எனினும், பிலிகுண்டு, சிவபுரம், பூமரத்துக்குழி, அட்டப்பள்ளம், பஞ்சல்துணை ஆகிய அடர்ந்த மலைக்கிராமங்களில் இருந்தும் கணிசமான மாணவ, மாணவிகள் வந்து படிக்கின்றனர். மலைப்பகுதி என்பதால் நகர்ப்புறம்போல் அடிக்கடி பேருந்துகளும் செல்லாது. அதனால் மாலை 4.15 மணிக்கு பள்ளி முடிந்தால் பல மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு நடந்தே செல்கின்றனர். மாணவிகளின் நிலை இன்னும் மோசம
பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?;  கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?; கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

அரசியல், ஈரோடு, கல்வி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து (58) திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (58). சேலம் பெரியார் பல்கலையில் உடல்கல்வி இயக்குநராக பணியாற்றி வந்தார். நேற்று (டிசம்பர் 18, 2017) காலை அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார். இதையறிந்த அவருடைய மனைவி விஜயலட்சுமி, உடனடியாக அருகில் உள்ள தன்வந்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு கைவிரித்த நிலையில், கணவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அங்கமுத்து இறந்துவிட்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பெருந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேல், தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறார். அவர
”இயற்பியல் இல்லாமல் வாழ்க்கையே கிடையாது!”; சொல்கிறார் ஹரீஷ் பாண்ட்யா!!

”இயற்பியல் இல்லாமல் வாழ்க்கையே கிடையாது!”; சொல்கிறார் ஹரீஷ் பாண்ட்யா!!

கல்வி, சேலம், தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
''நம் வாழ்க்கையில் எந்த ஒரு செயல்பாட்டிலும் இயற்பியல் கோட்பாடுகள் பொதிந்திருக்கின்றன. உண்மையில், பலர் கருதுவதுபோல் இயற்பியல் ஒன்றும் அத்தனை கடினமான பாடமும் அல்ல,'' என்கிறார் பேராசிரியர் ஹரீஷ் எம் பாண்ட்யா. சேலம் இயற்பியல் ஆசிரியர்கள் சங்கம், அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்த ஆசிரியர்களிடம், குறிப்பாக இயற்பியல் ஆசிரியர்களிடையே இயற்பியல் துறையில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் மூலமாக மாணவர்களுக்கு இயற்பியல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதுதான் உள்ளார்ந்த நோக்கம். சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர்கள் ராஜரத்னம், வெங்கடேசன், அருளானந்தம் ஆகியோர் முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள இயற்பியல் ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்களுக்காக மாதந்தோறும் பயிற்சி பட்டறையை நடத்தி வருகின்றனர். இயற்பியல் துறை பேராசிரியர்கள்,