Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: space

”இயற்பியல் இல்லாமல் வாழ்க்கையே கிடையாது!”; சொல்கிறார் ஹரீஷ் பாண்ட்யா!!

”இயற்பியல் இல்லாமல் வாழ்க்கையே கிடையாது!”; சொல்கிறார் ஹரீஷ் பாண்ட்யா!!

கல்வி, சேலம், தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
''நம் வாழ்க்கையில் எந்த ஒரு செயல்பாட்டிலும் இயற்பியல் கோட்பாடுகள் பொதிந்திருக்கின்றன. உண்மையில், பலர் கருதுவதுபோல் இயற்பியல் ஒன்றும் அத்தனை கடினமான பாடமும் அல்ல,'' என்கிறார் பேராசிரியர் ஹரீஷ் எம் பாண்ட்யா. சேலம் இயற்பியல் ஆசிரியர்கள் சங்கம், அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்த ஆசிரியர்களிடம், குறிப்பாக இயற்பியல் ஆசிரியர்களிடையே இயற்பியல் துறையில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் மூலமாக மாணவர்களுக்கு இயற்பியல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதுதான் உள்ளார்ந்த நோக்கம். சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர்கள் ராஜரத்னம், வெங்கடேசன், அருளானந்தம் ஆகியோர் முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள இயற்பியல் ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்களுக்காக மாதந்தோறும் பயிற்சி பட்டறையை நடத்தி வருகின்றனர். இயற்பியல் துறை பேராசிரியர்கள்,
கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்!-EXCLUSIVE

கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்!-EXCLUSIVE

இந்தியா, உலகம், கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
E-X-C-L-U-S-I-V-E சேலம் சித்தனூரை சேர்ந்தவர் சதீஸ்குமார் சரவணன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் இன்றைக்கு உலக அளவில் இந்தியாவின் நம்பிக்கைக்கு உகந்த முகமாக திகழ்கிறார் என்றால் மிகை ஆகாது. ஜெர்மன் நாட்டில் இளநிலை விஞ்ஞானியாக (Junior Scientist) இருக்கிறார். இயற்பியலாளர். சதீஸ்குமார் உள்பட நான்கு பேர் கொண்ட குழுவினர், ஐன்ஸ்டீன் சொல்லிச்சென்ற முக்கியமான ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, கருந்துளைகள் (Black Holes) பற்றிய புதியதொரு கருத்தியல் கொள்கையை உருவாக்கி, விஞ்ஞான உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில், சதீஸ்குமாரின் பங்களிப்பு முக்கியமானது. ''எங்களது ஆராய்ச்சிக்கு ஐன்ஸ்டீன் கருத்தியல்தான் அடிப்படை. அதை மையமாக வைத்துக்கொண்டு, விண்வெளியில் (SPACE) உள்ள கருந்துளைகளைப் பற்றி சில புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்திருக்கிறோம்,'' என சதீஸ்குமார் அடக்கத்துடன் சொல்கிறார். கருந