‘பீக்குஸ்கோத்தெ’ எனும் வாய்ப்பூட்டு!: “பிச்சை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் சவுராஷ்டிரர்கள்”
கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்,
தெலுங்கில் வெளியான 'பிச்சைக்காரன்'
படத்தில், தாயின் உயிரைக் காப்பாற்ற
நாயகன் தெருத்தெருவாக பிச்சை எடுப்பார்.
சாமியார் ஒருவரின் ஆலோசனையின்பேரில்
இப்படி நேர்த்திக்கடன் செலுத்தி,
தாயின் உயிரைக் காப்பாற்றுவதாக
காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.
மொழி, கலாச்சார ரீதியாக பாரம்பரியத்தை கட்டிக்காத்து வரும் சவுராஷ்டிரா சமூக மக்களிடையே இப்படி ஒரு சம்பிரதாயம் இன்றளவிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால், அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அவர்கள் குணமடைந்த பிறகு, பாதிக்கப்பட்டவர் உள்பட வேண்டுதல் வைத்த அனைவரும் கோயிலில் சென்று வாயில் 'அலகு பூட்டு' குத்திக்கொள்கின்றனர். சிலர், இதை 'வாய்ப்பூட்டு' என்றும் சொல்கின்றனர்.
குறைந்தபட்சம் ஏ