பொறியியல் மாணவி பாலியல் வழக்கு: குற்றத்தில் அரசு ஊழியரே ஈடுபட்டாலும் மாவுக்கட்டு போடுங்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி!!
பாலியல் குற்றம், ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படுவோர் அரசு ஊழியராக இருந்தாலும், காவல்துறையினராக இருந்தாலும் பாகுபாடின்றி மாவுக்கட்டு போடுங்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ளஅண்ணா பல்கலைக்கழகத்தில்மாணவி ஒருவர் பொறியியல்பட்டப்படிப்பு படித்து வருகிறார்.கடந்த 23.12.2024ஆம் தேதி இரவு,அந்த மாணவி தனது காதலனுடன்பல்கலை வளாகத்தில் மறைவானஇடத்தில் நின்று பேசிக்கொண்டுஇருந்தார்.
அப்போது அங்கு வந்தமர்ம நபர் ஒருவர்,காதலனை மிரட்டி விரட்டியடித்துவிட்டு,தன்னை பாலியல் பலாத்காரம்செய்ததாகவும், அதை அவர்செல்போனில் வீடியோவாகபதிவு செய்ததாகவும்சம்பவத்தன்று இரவுகோட்டூர்புரம் காவல்நிலையத்தில்அந்த மாணவி புகார் அளித்தார்.அந்தப் புகாரில், தன்னிடம்அத்துமீறிய மர்ம நபர்,'இன்னொரு சார் இருக்கிறார்.அவர் அழைக்கும்போது நீசெல்ல வேண்டும்,' என்றுமிரட்டியதாகவும் தெரிவித்து இருந்தா...