கோகுல்ராஜ் ஆணவக்கொலை: யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள்! மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!!
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை (மார்ச் 5) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. யுவராஜின் தம்பி தங்கதுரை உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த
வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின்
மகன் கோகுல்ராஜ் (23).
திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர்
கல்லூரியில் பி.இ., படித்திருந்தார்.
கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியன்று
காலையில் வீட்டில் இருந்து கல்லூரி பேருந்தில்
ஏறிச்சென்றவர் அன்றிரவு
வீடு திரும்பவில்லை.
இரவில் பல இடங்களிலும்,
நண்பர்கள் வீடுகளிலும் தேடிப்பார்த்துள்ளனர்.
கோகுல்ராஜை பற்றிய தகவல் இல்லை.
அவருடைய செல்போனும் அணைத்து
வைக்கப்பட்டிருந்ததால் தாயாருக்கு
சந்தேகம் வலுத்தது.
மறுநாள் காலையில் கோகுல்ராஜின்
நண்பர் கார்த்திக்கிடம் விசாரித்தபோது...