Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Mettur Constituency College

புதிய ஊழலுக்கு அடித்தளமிட்ட பெரியார் பல்கலை ‘செஞ்சுரி’ சிண்டிகேட் கூட்டம்!

புதிய ஊழலுக்கு அடித்தளமிட்ட பெரியார் பல்கலை ‘செஞ்சுரி’ சிண்டிகேட் கூட்டம்!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
-சிறப்புச்செய்தி-   சேலம் பெரியார் பல்கலையில் கடந்த காலங்களில் அடுக்கடுக்காக அரங்கேறிய ஊழல் விவகாரங்களை விவாதிக்காமல், மீண்டும் புதிதாக ஊழல் புரிவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது, பல்கலையின் நூறாவது சிண்டிகேட் குழு கூட்டம்.   சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 100வது சிண்டிகேட் குழு கூட்டம், பல்கலை கூட்டரங்கில் நேற்று (ஜூன் 28, 2018) நடந்தது. மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது சிண்டிகேட் உறுப்பினர்கள் கூடி விவாதித்து, பல்கலை வளர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது நடைமுறை. சிண்டிகேட் குழுவின் 'செஞ்சுரி' கூட்டம் என்பதோடு, புதிய துணைவேந்தர் கொழந்தைவேல் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இரண்டாவது கூட்டம் என்பதாலும் பல்கலை பேராசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவின.   குறிப்பாக, சர்ச்சைக்குரிய வகையில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் பதிவ
மேய்ச்சல் நிலமான மேட்டூர் உறுப்புக்கல்லூரி!;  சாதி பாசத்தில் எடப்பாடி பாரபட்சம்!!

மேய்ச்சல் நிலமான மேட்டூர் உறுப்புக்கல்லூரி!; சாதி பாசத்தில் எடப்பாடி பாரபட்சம்!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சிறப்புக்கட்டுரை-   தமிழகத்தின் முதல் உறுப்புக்கல்லூரி என்ற அந்தஸ்து இருந்தாலும் ஆளும் தரப்பினரின் அலட்சியத்தால் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணிலேயே, மேட்டூர் அரசுக்கல்லூரி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.   சேலம், ஓமலூர் பிரதான சாலையில் கடந்த 1998ம் ஆண்டு பெரியார் பல்கலை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பெரியார் பல்கலையை ஈரோடு மாவட்டத்தில் தொடங்கும் திட்டமே இருந்தது. அப்போதைய திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மேற்கொண்ட முயற்சியால், சேலத்தில் இந்தப் பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்டது.   இந்தப் பல்கலையின் நேரடி நிர்வாகத்தின் கீழ், கடந்த 2006ம் ஆண்டு மேட்டூரில் உறுப்புக்கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டது. பல்கலைக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் உறுப்புக்கல்லூரியும் இதுதான். இதற்காக மேட்டூர் நான்கு ரோடு அருகே 15.75