Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Kohli

கேப் டவுன் டெஸ்ட்: தென்னாப்ரிக்காவிடம் சுருண்டது இந்தியா!

கேப் டவுன் டெஸ்ட்: தென்னாப்ரிக்காவிடம் சுருண்டது இந்தியா!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தென்னாப்பிரிக்கா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா அபாரமாக வெற்றி பெற்றது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, வெற்றிக்கு வழிகோலினார். தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களும், இந்தியா 209 ரன்களும் எடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து, 77 ரன்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் மழ
இந்திய புலிகளை வீழ்த்தின நியூஸிலாந்து கிவிக்கள்!

இந்திய புலிகளை வீழ்த்தின நியூஸிலாந்து கிவிக்கள்!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ராஜ்கோட்டில் இன்று (நவம்பர் 4, 2017) நடந்த இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, நியூஸிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியின் கோலின் முன்ரோ சதம் அடித்து சாதனை படைத்தார். இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா 1-0 கணக்கில் முன்னிலை பெற்றது. அதனால் இந்த ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியாவும், வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நியூஸிலாந்தும் களமிறங்கின. அதிரடி தொடக்கம்: இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதன்முதலாக வாய்ப்பு பெற்றார். நியூஸிலாந்து அணியில் டிம் சவுத்தீ, டாம் லேதம் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, கிளைன்
கோஹ்லி 9000 ரன்களை கடந்து சாதனை!

கோஹ்லி 9000 ரன்களை கடந்து சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இன்று (அக்டோபர் 29, 2017) நடந்து வரும்,  இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸி. அணிக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 29 ஓவர்களில், நியூசிலாந்து அணி  3 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்து இருந்தது. தொடர்ந்து விளையாடி வருகிறது. கோஹ்லியின் சாதனைகள்: 202வது ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, இன்றைய ஆட்டத்தில் 32வது சதம் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் அவர் 106 பந்துகளில் மொத்தம் 113 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதில், 8 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இன்றைய போட்டியில் அவர் 83 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஒருநாள் போட்டிகளில் 9000 ரன்கள் என்ற புதிய மைல்கல் இலக்கை எட்டினார். ஏற்கனவே தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஏபி டிவில்லியர்ஸ் 205 இன்னிங்ஸ்களில்
கோஹ்லி சதம் வீண்; பந்து வீச்சு சொதப்பல்; நியூசிலாந்து அபார வெற்றி

கோஹ்லி சதம் வீண்; பந்து வீச்சு சொதப்பல்; நியூசிலாந்து அபார வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக இன்று (அக். 22, 2017) நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் பெரிய அளவில் ரன்களை குவிக்கத் தவறினர். இந்திய அணி தரப்பில் கேப்டன் விராட் கோஹ்லி அதிகபட்சமாக 121 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்து, தினேஷ்கார்த்திக் 37 ரன்கள் எடுத்ததுதான் இந்திய அணி வீரர்களின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட
கிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை!

கிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கனே வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒரு நாள் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (அக். 22, 2017) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டை வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஜோடி பெரிய அளவில் சோபிக்கவில்லை. சிக்ஸர் அடித்து அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய ரோஹித் ஷர்மா, 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவானும் 9 ரன்களில் வெளியேறினார். இருவருமே நியூஸியின் டிரன்ட் போல்ட் வேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தினேஷ்கார்த்திக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவரும் ஒருகட்டத்தில் 37 ரன்களில் த
கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா; ஆஸி.,யின் சோகம் தொடர்கிறது

கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா; ஆஸி.,யின் சோகம் தொடர்கிறது

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி  3 - 0 புள்ளி கணக்கில் வென்றது. ஆஸி., அணியின் தோல்வி முகம் தொடர்ந்து வருவது, அந்நாட்டு ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்று உள்ளது. நேற்று (செப். 24) மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் மூன்றாவது ஒரு நாள் போட்டி நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியா அணியில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், கார்ட்ரைட் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆரோன் பின்ச், ஹேன்ஸ்ட்கோம்ப் சேர்க்கப்பட்டு இருந்தனர். ஆரோன் பின்ச் சதம்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்ட
டி-20: இலங்கையை கதற விட்டது இந்தியா

டி-20: இலங்கையை கதற விட்டது இந்தியா

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டியில், கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணிக்கு எதிரான ஒரே ஒரு டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டி நேற்று (செப். 6) கொழும்பு பிரேமாதாசா மைதானத்தில் நடந்தது. பகலிரவு ஆட்டமான இந்தப் போட்டி, மழை காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணி தரப்பில் ரஹானே, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, லோகேஷ் ராகுல், அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டு இருந்தனர். இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிக்வெல்லா, கேப்டன் உபுல் தரங்கா ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தரங்கா 5 ரன்களிலும், டிக்வெல்லா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் முனவீரா மட்டும் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப
சாதனை: டோனி ‘100’ – கோஹ்லி ‘1000’

சாதனை: டோனி ‘100’ – கோஹ்லி ‘1000’

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
டோனி: இலங்கை கிரிக்கெட் அணியுடனான ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் அந்த நாட்டு வீரர் தனஞ்ஜெயாவை டோனி, 'ஸ்டம்பிங்' செய்து அவுட் ஆக்கினார். இதன்மூலம், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் டோனி 100 வீரர்களை 'ஸ்டம்பிங்' முறையில் அவுட் செய்து உலக சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இலங்கையின் முன்னாள் விக்கெட் கீப்பர் சங்ககரா (99 முறை) உள்ளார். கோஹ்லி: இலங்கை உடனான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் கோஹ்லி இரண்டு முறை சதம் விளாசி உள்ளார். நடப்பு ஆண்டில், 18 ஒரு நாள் போட்டிகளில் கோஹ்லி  1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.